Friday, April 13, 2012

காயப்படுவது... காயப்படுத்துவது.. எதில் சுகம் அதிகம்...!

காயப்படுவது...
காயப்படுத்துவது..
எதில் சுகம் அதிகம்...!
இரண்டு பிரிவாக பிரிந்து
நம்மை நாமே
காயப்படுத்திக் கொள்ளவேண்டாம்...!

இரண்டையும் தவிர்பது
நம்மை முன்னேற்றத்திற்கு வழி நடத்தும்...!

காயம் படும் போதெல்லாம்..
கலங்குவது வாடிக்கை..
அதுதான் நமது எதிரீகளுக்கும் வேடிக்கை...!

காயம்..
மனதில் உருவாக்கபடும் போது
முடங்கி போகாமல்..
உங்களை நிலை நிறுத்த
எதிர்த்து நில்லுங்கள்..
எல்லாமே தவிடு பொடியாகும்...!

உங்களை
காயப்படுத்தும்..அவர்களை
பழி சொல்லாதீர்கள்..
உங்கள் வெற்றிக்கு
வழி காட்டிய உத்தமர்கள்
என உருவகப்படுத்தி பாருங்கள்..!

மனதில்
காயம் உண்டாகும் போது..
கோபத்தை தவிர்த்து..
திட்டம் வளருங்கள்..!

முடங்கி போகாமல் 
முறியடிக்க தொடங்குங்கள்...!

பொறாமை தவிர்த்து 
பெருமை படுங்கள்...!

விரக்தியை விரட்டி...
வெற்றிக்கு வழி விடுங்கள்...!

புலம்புவதை புறம் தள்ளி..
புது யுகம் படையுங்கள்..!

உங்கள் எதிரிகளுக்கு
காயபபடுத்த மட்டுமே தெரியும்..!

ஆனால்
காயப்படுவது....காயப்படுத்துவது.
இரண்டையும் தவிர்த்து
கை குலுக்க ...
உங்களுக்கு மட்டுமே தெரியும்..!