Monday, May 30, 2011

மன காயங்கள்... மாறாத வடுக்கள்..!

மன காயங்கள்...
மறைக்க..
மறக்க... முடியாத ..
மாறாத வடுக்கள்..!

எதிர்பார்க்கும் போது ...
ஏற்படுவது சிலசமயம்..!

எதிர்பாராமல் ...
உண்டாக்கபபடுவது..
பல சமயம்...!

முன் பின் தெரியாதவர்களின் உதாசீனம்..
ஒரு போதும் ..
உணரபபடுவதும் இல்லை..!

காயங்களை ..
உருவாக்குவதும் இல்லை.!

ஆனால்..

உயிரானவர்களின்....
உதட்டு சுளிப்பு கூட...
உலகமே இருள செய்து விடும்..
கூடவே ....
மனதை காயபபடுத்தும் ..
என்பதை விட ...
காயததையே மனதக்கி விடும்..!

யாரையும் ..
முன்னே புகழ்ந்து...
அவர்களின் பின்னால் ...
அவர்களின் ..
சின்ன...சின்ன குறைகளை மட்டுமே
உயர்த்தி அலசாதீர்கள்...!

காயம் ..
அவர்களின் மனதுக்கு தான் என்றாலும்...
உங்கள் எண்ணங்களில்
பொறாமை ...
புற்று நோயாய் பரவி இருப்பதை
உங்களால் உணரவே முடியாது...!

நம்பிக்கைகளில்
சந்தேகம் வேண்டாம்..
நரக வாழ்க்கை
நாளெல்லாம் தொடரும்...!

பிறரின் வெற்றியை
மனதால் கொண்டாடுங்கள்...

வெறித்தானமாக
அவர்களின் வெற்றியின் காரணங்கள்
என
உங்கள் பொறாமைகளை
கட்டவிழ்த்து விடாதீர்கள்...!

உங்கள் சொல் ...
செயல்  ...
நடவடிக்கை ...
அணுகுமுறை ....
என ...
எதிலும் ..
எப்போதும் .....
யாருடைய மனதையும் ....
காயப்படுத்திவிடாதீர்கள்.. !

மனக்காயங்கள் ...
ஒரு போதும் ..
மறைவதுமில்லை.....
குறைவதும் இல்லை..!

ஆறுவதுமில்லை..!

அதனால் ஏற்படும்
உங்கள் பாவங்கள்
மன்னிக்க படுவதுமில்லை..!

Thursday, May 26, 2011

உணர்வுகளும் பலப்படும்..!

உணர்வுகளை மதிப்பது ..
என்பது ...
உங்களை மட்டுமே ..
சார்ந்தது அல்ல..!

உங்கள் முன் ..
உள்ளவர்களும் ..
மனதால் ஒப்புக்கோள்வதே..!

இதை..
நீங்கள் உணர்ந்தால்...
உயர்ந்தவர்கள் வரிசையில் ..
உங்களுக்கென்றே ..
ஓர் நிரந்தர இடம் கிடைத்துவிடும்..!

முதலில் ..
உங்கள் உணர்வுகள்..
மட்டுமே ..
உண்மை என்றே ...
சுய மதிப்பீடு விட்டு வெளியெறுங்கள்...!

பிறரின் உணர்வுகளுக்கு ...
உங்கள் ..
அங்கீகாரம் வேண்டாம்.!
உங்கள் ..
ஆதரவும் வேண்டாம்..!
உங்கள் ..
பாச்சாதாபமும் வேண்டாம்..!
உங்கள் ..
கனிவு..பரிவு...பாசம்...ஆறுதல்..
இப்படி ...
எதுவுமே வேண்டாம்..!

அவரவர் உணர்வுகளை ..
அவரவர்கள் ..
உணர்ந்து கொள்ள ...
நீங்கள் ..
மவுனம் காப்பதே மகத்தானது...!

மொத்தத்தில் ..
அவரவர்கள் ....
உணர்வுகளை ...
அவரவர்களே ...
அனுபவித்து கொள்ளட்டும்...!

இதற்கு .
உங்கள் துணை இருந்தாலே போதும்...
வேறெதுவும்..
எப்போதும் அவசியமே இல்லை..!

பிறர் உணர்வுகளை...
அலசுவது..
குறைப்பட்டு கொள்வது..
சந்தேகபபடுவது....
பொய் புகழ்ச்சி..தருவது....
புறம் பேசுவது...
உதாசனம் செய்வது...
இப்படி ...
வரிசை படுத்திய
எதையும் தவிர்ப்பது...

பிறர் உணர்வுகள் ...
காயபபடுவதை தடுப்பது ...
மட்டும் இல்லாமல்..

உங்கள்
உணர்வுகளும் பலப்படும்..!

உணர்வுகளை
உண்மையாய்
உணர்ந்து
உயர்வோம்...!

Friday, May 13, 2011

மாற்றம்...!

இயற்கை...
உருவாக்கிய செயற்கை..
மாற்றம்...!

மாற்றம் மட்டுமே ..
இரு தோற்றம் கொண்டது...
சுகமும்  சோகமும்...!

வெற்றியிலிருந்து தோல்விக்கு ...
மாற்ற பட்டவர்கள்...
துவண்டு போவதும்..
துடித்து புலம்புவதும்..
வரலாற்றை..
வகை வகையாய் ..
வாசிபபவர்களுக்கும்..
வரலாறு படைத்தவர்களுக்கும் தெரியும்...!

தோல்வியிலிருந்து வெற்றிக்கு பயண படுபவர்கள்...
தன் பெருமையை ..
கட்டாய பதிவு செய்வதும்...
முழு பொறுப்புக்கு...
தன்னையே நிலை நிறுத்தி கொள்வதும்..
நிஜ வாழ்க்கை பயணத்தின் ...
நிதர்சன உண்மைகள்..!

தோல்வி தண்டனை அல்ல.. !

சீர் படுத்தி ...
சரியாக மட்டுமல்ல ...
முறையாக செயல் பட ...
யாருக்கும் கிடைக்காத..
அனுபவத்தின் வாய்ப்பு...!

உங்கள் கண் முன்னே
புலப்படும் 
பிரகாசமான வெற்றியின் தொடக்கம்...!

வெற்றி தொடக்கம் அல்ல ...!

தோல்விகளின்அனுபவங்களால் ..
தீர்மானிக்கப்பட்ட முடிவு..!

மறுமுறை தோற்க கூடாது
என்பதின் எச்சரிக்கையும் கூட...!

வெற்றியிலிருந்து..தோல்வி...!
தோல்வியிலிருந்து..வெற்றி... !

வாழ்க்கை பயணத்தின்
வழிகாட்டும் மைல் கற்கள்..!

நம்மை தடுத்து நிற்கும்
தடை கற்கள் அல்ல..!

வெற்றி... தோல்வி ....முடிவு அல்ல...!
மாற்றம்  ...
என ..
உறுதி படுத்தி பாருங்கள்...!

மாற்றங்கள் .....
உங்களின் பாதையை
திருப்திகரமான வழியில்
மாற்றி விடும்...!

Wednesday, May 11, 2011

விமர்சனங்கள்..

விமர்சனங்கள்..
நம்முள்
எப்படி பிரதிபலிக்கின்றன ..
என்பதை பொறுத்தே ...
நம்மை நாமே ...
அடையாளம் கண்டு கொள்ள முடியும்...!

விமர்சனம்
நம்மை பட்டை தீட்டி கொள்ளவும்..
மெருக்கெற்றி கொள்ளவும்
என நினைத்தால்..
எப்படி பட்ட விமர்சனங்களும்
நம்முள்
எந்த ஒரு பாதிப்பையும் தராது...!

நமக்கு வந்த விமர்சனம்
நம்மால்
தரக்குறைவாக ..
இழிவாக விமர்சனம் செய்ய பட்டால்..
நீங்கள்
நிச்சயம் குற்றவாளி என்பது
உங்களுக்கு மட்டும்
கட்டாயம் புரிந்து விடும்..!

உங்கள் மனசாட்சி
உங்களை மன்னிக்காது..!

தலைக்கனம்..
கர்வம் நிறைந்தவர்களால் மட்டும் 
இதை
ஒருபோதும் ஏற்று கொள்ள முடியாது..!

விமர்சிப்பது என்பது ..
அவர்களின் சுதந்திரம்..
ஏற்றுக்கொள்வதும் ....
ஒதுக்கி தள்ளுவதும்..
உங்கள் விருப்பம்..

ஆனால்-

ஒரு போதும் ..
விமர்சனங்களை ...
விமர்சனம் செய்து ...
உங்கள் ...
குறுகிய மனதை ...
உலகத்திற்கு அடையாளம்..காட்டி விடாதீர்கள்...!

விமர்சனங்களை ...
தரக்குறைவாக ...
விமரீசித்தவர்கள் ...
வாழ்ந்தததை  விட ...
வீழ்ந்த வரலாறுகள் அதிகம்...!

விமர்சனங்களை ...
தலை வணங்கி ஏற்று ....
தலைவன் ஆவோம்..!

Friday, May 6, 2011

களை ... எடுத்து கொள்ளுங்கள்..!

தலைகனமும்..
திமிரும்..
உதாசினமும்..
அலட்சியுமும்...
உழைத்து வெற்றி பெற்றவர்களிடம் இருப்பதில்லை..!

பணம்..புகழுக்குகாக...
அடிக்கடி நிலைமாறி..
செயல் மாறி...
நேர்மையாய் .....
வாழ்வது போல்
நடிப்பவர்களிடம் தான் அதிகமாய் இருக்கும்...!

அவர்களை ..
இனம் கண்டு ..
களை ...
எடுத்து கொள்ளுங்கள்..!

உங்கள் மனம் பத்திரப்படட்டும்...!

உருவாக்கியவர்கள்..
தோள் தந்து நடை பழக்கியவர்கள்..
என ...
யார் யார் எல்லாம்...
தன் வளர்ச்சிக்கு..உறுதுணை ...
என தொடர்ந்தார்களோ...
அவர்களை..
மட்டம் தட்டுவதை ....
தன் வாழ்க்கையின் ..
குறிக்கொளாக்கி கொள்வார்கள்...!

இவர்களால் சுயமாய் ..
எதையும் செய்ய முடியாது..
எதையாவது சார்ந்து மட்டுமே
செயல் பட முடியும் ..!
அதையே
தன் திறமை
என ...
மூச்சுக்கு முன்னூறு முறை
புலம்பி பெருமை பட்டு கொள்வார்கள்...!

தனியே வந்து செயல்பட்டு ,,,
தன் திறமையை  காட்ட துணிவு அற்றவர்கள்..!

அடிக்கடி தன் நிலையை மாற்றி ,,,,
பசையுள்ள பக்கம் போவதை தான் ,,,,,
லட்சியம் என மறைமுகமாக வெளிப்படுத்திவிடுவார்கள்..!

தன்னை ஏற்றி விட்டவர்களை..
மறவமால் திரும்பி பார்த்து
எச்சில் உமிழமல் வரமாட்டார்கள்....!

நம் வாழ்வொடு
இவர்கள் கட்டாயம் வேண்டும்...!

அப்போதுதான்  ...
உங்கள் வாழ்க்கையில்  ....
உங்கள் உழைப்பால் கிடைக்கும் ....
சின்ன வெற்றி கூட ....
இனிதது கொண்டே இருக்கும்...!