Wednesday, September 28, 2011

நமது எண்ணங்கள் ... பொய்த்து போகும் போது ...!

சில சமயம் ...
நமது எண்ணங்கள் ...
பொய்த்து போகும் போது ...
நாம் விதியை ....
குற்றம் சொல்கிறோம்...!

உங்கள் ...
எண்ணம் போல் ...
உங்களால் செயல் பட முடிகிறதா...?

நிச்சயமாக முடியாது...!

பிறகெப்படி...
உங்கள் எண்ணங்கள் படி ..
மற்றவர்களால் மாற முடியும்...!

நீங்கள் ..
எண்ணுவதெல்லாம் ..
ஈடேற வேண்டும் ..
என்ற கட்டாயம் கிடையாது...!

உங்கள் ..
எண்ணங்கள் படியே ..
எல்லாமே நடக்க வேண்டும் ...
என்ற நிர்பந்தம் கிடையாது...!

சூழ்நிலைகள்..!
அவரவர்களின் மனநிலைகள்...!
சுய தேவைகளின் அவசியங்கள்...!
எதிர்பார்ப்புக்ளின் ஏமாற்றங்கள்....!
நிறைவேறா நிஜங்களின் நிர்பந்தங்கள்...!
அங்கீகாரம் இல்லா உழைப்புகளின் வெளிப்பாடு...!
இப்படி பல உண்மைகள் ..!
உங்கள் ...
எண்ணங்களின் தோல்விக்கு ...
காரணமாய் அணிவகுக்கும்....!

நிஜத்தை...
நினைவு படுத்தி கொள்ளுங்கள்...!

உங்கள் எண்ணங்கள் சரி...!
ஆனால்....
அது நிறைவேற கட்டாயம் ஏதும் இல்லை...!

அதற்காக...
உங்கள் எண்ணங்களுக்கு ...
தடையும் போட வேண்டாம்...!

எண்ணங்களின் ...
முடிவை ...
ஏற்கும் மனநிலையை ...
நீங்கள் ...
வளர்த்து பாருங்கள்....!

வாழ்வு வளம் பெரும்....!

Saturday, September 17, 2011

நம்பிக்கைகள் ...!

நம்பிக்கைகள் ...
பொய்த்து போகும் போது ....
உங்கள் நிலை என்ன...?

உங்களை உணர்ந்து கொள்கிறீர்களா..?

உடைந்து போகிறீர்களா..?

அல்லது -

கடந்து சென்று விடுகிறீர்களா..?

நம்பிக்கை என்பது ..
இயற்கையாய் உதிப்பது அல்ல..!
நம்மால் ..
உருவாக்கப் படுவதுதான்...!

இயலாது ..
என மனதில்..
தோன்றும் போதெல்லாம்..
.நம்பிக்கைகள்..
தகர்ந்து போகின்றன...!

முடியும் என ..
முடிவெடுக்கும் போது ....
நம்பிக்கைகள் ...
முழு வெற்றி தருகின்றன...!

நம்பிக்கைகள் ...
நடக்காது போனால்...
தலைவிதியை...
நொந்து நம்புகிறோம்...!

நிறைவான சூழ்நிலையில் ..
உங்கள்...
திருப்திகரமான வெற்றி....
உங்கள் மேல் ...
பிறர் கொண்ட நம்பிக்கையை ..
உங்களுக்கே அறிமுகம் செய்கின்றன...!

எது நம்பிக்கை..?
இப்போது புரிந்திருக்கும்...!

உங்கள் ...
எண்ணம்..எதிர்பார்பு..செயல்..
இந்த கலவையின் பரிணாமம்..
நம்பிக்கை..!

நீங்கள் ..
உருவாக்கிய படைப்பு ...
நம்பிக்கை..!

உங்களால் நம்பிக்கை ...
உருவாகும் போதே ..
அதில் ..
வெற்றி.. தோல்வியை படைப்பதும் நீங்கள்தான்..!

உங்களை நீங்கள் ...
நம்பினால்..
உங்கள் நம்பிக்கைகள் ...
அடுத்த பட்சம் தான்...!

Friday, September 16, 2011

பழி போடுபவரா நீங்கள்...!

உங்கள் குறைகளையும்,..
பிழைகளையும்,..
தவறுகளையும்,...
தோல்விகளையும்...ஏற்றுக்கொள்ளாமல்...
பிறர் மீது ..
பழி போடுபவரா நீங்கள்...!

ஆம் என்றாலும்..
இல்லை என்றாலும்...
தொடருங்கள்...!

உங்கள் மனசாட்சி ...
உங்களை மதிக்கிறதா..?

நிம்மதியாக தூங்கியது ..
எப்போது என ...
நினைவில் உள்ளதா...?

எதையாவது இழக்கப்போகும் ..
உணர்வுகள் ..
உங்களை சூழ்ந்துள்ளதா...?

யாரை கண்டாலும் ..
பொறாமை பட ..
தூண்டுகிறதா..?

எதிர்மறையாக பேசுகிறீர்களா..?

இதெல்லாம்..
உங்கள் ..
சார்வாதிகார போக்கின் ...
அறிகுறிகள் அல்ல...!

உங்கள் ...
சரிவின் அடிப்படை...!

கொஞ்சம் திருந்தி..
பிறரை ...
பழி சொல்வதையும்,...
குற்றப் படுத்துவதையும்,,
குறை கூறுவதையும்...
விட்டொழித்து...
மற்றவர்களை ..
முகத்திற்கு நேராக மட்டுமல்லாமல் ..
மனதோடும் மதியுங்கள்,,,!

மனிதனாய் ...
உணரபபடுவீர்கள்...
மற்றவர்களால் அல்ல..

உங்களாலேயே...!

Thursday, September 15, 2011

எந்தவித பாதிப்பும் கிடையாது ...!

உங்களால் ...
யாருக்கும் ...
எந்தவித பாதிப்பும் கிடையாது ...
என உறுதி தரமுடியுமா...?

தரமுடியும் என்றால் ..
உங்களின் ...
வாழ்க்கையின் அர்த்தம் ....
யாராலும் ...
ஏன்...
உங்களால் கூட உணர முடியாதது...!

மனிதன் என்றால் ...
எப்போதும்..
எதற்காக என வரைமுறை படுத்தாமல் ....
பாதிக்க வைக்க பட வேண்டும்...!

அது ...
நியாயம்.... அநியாயம்...
என ...
பாகுபடும் இல்லாமலிருக்க வேண்டும்...!
சரி..தவறு..
என்ற ...
அலசாலும் கூடாது...!

நீங்கள் வெளிப்படுத்திய ...
சுகமான பாதிப்புகள்...
உங்களின் ...
வெற்றி சரித்திரத்தை ..
வருங்காலத்தில் பதிக்க தொடங்கும்...!

உங்களின் ..
கோபம் வெறுப்பு...
துரோகம்..பழிவாங்கும் இயல்பு..
பொறாமையின் வெளிப்பாடு  சார்ந்த பாதிப்புகள்....
உங்களை ...
அடியோடு ...
அழிக்க தொடங்கி விடும்...!

உங்களால் ...
தோற்கடிக்க படுவது கூட  ....
பெருமை படுத்த படவேண்டும்..!

முயலுங்கள்....!  

முடியாதது ...
ஒன்றுமே இல்லை ...

உங்கள் வாழ்வில்..!

Wednesday, September 14, 2011

காரணம்....!

காரணம்....!

இந்த வார்த்தை
இப்போதெல்லாம்
எரிச்சலை
உற்பத்தி செய்து விடுகிறது...!

எங்கு..எதற்கு..
ஏன்...எப்படி..
எதனால்...என புரியாமலே
காரணம்
நம்முள் திணிக்கபபடும்போது...
எரிச்சலோடு...
நமது நம்பிக்கைகள் தகர்க்கபபடுகின்றன...!

காரணம் சொல்வது
உங்களின் கற்பனை திறன் ...
என் பெருமை வேண்டாம்.....!
உங்கள் அவமானத்தின் தொடக்கம்...!
உங்கள் தோற்றலின் உச்சக்கட்டம்...!
உங்கள் மனிதத்தின் மாற்றம்...!

இனி காரணம் ..
தேடி அலைவதை தவிர்த்து ..
உண்மையை உரைப்போம்..!
ஏற்றுக்கொள்வோம்...!
எப்போதும்...!.....