Monday, December 16, 2013

பதிலே பேறமுடியாத.. கேள்வி குறியக்கலாம்..!


நேற்றைய
உங்கள் ஆர்வகோளாறுககளால் ...
செய்த ..
அலட்சிய தவறுகள்...
இன்றைய ..
உங்கள் ..
பொன்னான வாய்ப்புகளை ..
வலுக்கட்டாயமாக பறித்து..
நாளைய ..
உங்கள் வாழ்க்கையை ..

பதிலே பேறமுடியாத..
கேள்வி குறியக்கலாம்..!

என்றோ தெரியாமல்..
புரியாமல் செய்த தவறுகள்..
அதன் பாதிப்புகள்...
அதிலிருந்து விடுபட்டு ..
திருந்தி வாழும் ..
இப்போது ...
தண்டனையாய் மாறி ...
என்னை முடக்குவது சரியா..?
என ..
உங்கள் கேள்வி..
எதிரில் உள்ளவர்களிடம் கேட்டு ..
பரிதாபதையும்..
பச்சாதாபதையும்..
பிச்சையாய் கேட்காதீர்கள்...!

உங்கள்
மனசாட்சியை கேளுங்கள்..!

விடுபட்டது உண்மையா..
இல்லை ..
கைதேர்ந்த ..
உங்கள் நடிப்பா..
என .
புரிய வைத்துவிடும்...!

நேற்றைய ..
உங்கள் காதல் அனுபவம்..
ஒருவரோடு மட்டும் இருந்தால்..
உலகமே ..
போற்றி கொண்டாடும்..!

அவ்வளவு ஏன்..
உங்கள் ..
உள்ளம் பயமில்லாமல். ...
உங்கள் ..
தோற்ற காதலை ..
வெற்றியாய் வணங்கும்..!

ஆனால்
பார்த்த..
பழகிய..
பேசிய..
தெரிந்த..
அத்தனை பேர்களையும்..
நீங்கள்
காதலித்து இருந்தால் ..
நீங்கள் ..
மிருக இனம்..!

அதைவிட ...
இந்த அத்தனை பேர்கள் மனத்திலும்..
எண்ணங்களிலும்..
உங்கள் மேல் ...
காதல் வயபட ...
நீங்களும் ...
தூண்டி இருந்தால்..
மிருகங்களே ...
கேவலமாய் பார்க்கும்..
அருவேறுப்பான இனம்..!

நேற்றைய ..
உங்கள் ..
குற்றங்களுக்கு..
இன்றைய ..
பிராயச்சித்தம்..!


உங்கள் எண்ணம்..
நினைவு..
செயல்..
என எதிலும்.
உங்கள் ..
கடந்தகாலம்
அழிக்க மட்டுமல்ல..
ஒழிக்கபடவும்..வேண்டும்..

மிக முக்கியமாக .
உங்கள் ..
நினைவுகளிலும்..
எண்ணங்களிலும்..!!!!

நாளைய ..
சுகமான ..
திருப்தியான..
நிம்மதியான..
நேர்மையான..
உண்மையான..
வாழ்வை..
இப்போதே
அனுபவிக்க
ஆரம்பித்து விடுவீர்கள்...!

Sunday, December 15, 2013

நம் வாழ்க்கை ... நம் கையில்..! நம்பிக்கையில்..!


நம்பிக்கைகள்
நொறுங்கும்போது..
பொய்க்கும் போது..
உங்களை
பலபடுத்திக் கொள்ளுங்கள்..!

நீங்கள் வைத்த
நம்பிக்கை தவறில்லை
என
முழு மனத்தோடு உணருங்கள்..!

உங்கள்
நம்பிக்கைக்குரியவர்களுக்கு தான்
பலத்த பாதிப்பு..!
உங்களுக்கோ..
உங்களின் நம்பிக்கைக்கோ
இல்லவே இல்லை..!

காலங்கள் நகர நகர
உங்களுக்கே தெரியும்..
புரியும்..!

தொடர்ந்து
பொய்கள் மேல்
பொய்கள் அடுக்கி..
உங்களை ஏமாற்றியததை
மனத்துக்குள்
பெரிய சாதனையாய்
நினைத்திருந்தாலும்...
அவர்களுக்கு
அதுதான்
இனி
தொடர போகும்
வேதனை என்பதை
அவர்களே
அறிந்திருக்க மாட்டார்கள்..!


நடந்தது..
நடக்கப்போவது..
என
எல்லாவற்றையும்
உங்களிடம்
மறைத்து
பாசத்துடன் நடிப்பார்கள்...!

அவர்களின்
வேஷம் கலையும் போது..
விஷம்
அவர்களின்
வாழ்க்கையோடு கலந்து விடும்..!

திரும்ப
எங்காவது
அவர்களை
சந்திக்கும்போது கூட
யாரிடமாவது
ஏமாற்றி
நம்பிக்கை துரோகம்
செய்வதையே..
மூச்சாக கொண்டிருப்பார்கள்..!

உங்களுக்குள்
உறுதி எடுங்கள்..
நம்பிக்கைகள்
பொய்த்து போக விட கூடாது
உள்ளொன்று
புறமொன்று..
என
நடிக்க கூடாது..!

எண்ணங்களையும்..
செயல்களையும்
அலைபாய
விட கூடாது..!

தவறுகள் செய்திருக்கலாம்..
செய்து கொண்டே
இருக்க கூடாது..!

நம்பிக்கையை
யாரிடமும்
பலபடுத்துவதை..விட
உங்களுக்குள் பத்திரபடுதுங்கள்...!

நம் வாழ்க்கை ...
நம் கையில்..!
நம்பிக்கையில்..!

Friday, November 15, 2013

 
 
எல்லாமே
மறந்து போகிறது...!

உன்னை பார்த்தவுடன்
நான்
போட்டு வைத்த
திட்டங்கள்
திக்குமுக்காடி போகிறது..!

பார்த்து
பார்த்து வைத்த
என் ஒத்திகை..
நினைவில்
நிற்பதே இல்லை...!

பேச நினைப்பது
மட்டுமல்ல...
பேசுவதே
சிரமமாகி
தடுமாறி..
தடங்குகிறது...!

நொடிப்பொழுது கூட ..
உன் பார்வையை..
என்னால்..
தாங்க முடிவதில்லை..!

உன்னை பார்க்கும் வரை..
எல்லாமே
நினைவில் கூட
நிஜமாகிறது...!
பார்த்த
அந்த
கணத்திர்க்கு
பிறகு
நீ அன்றி
எதுவுமே
நிலைப்பதில்லை...!

தொடர்கிறேன்...
உன் நினைவகளொடு
என்
வாழ்க்கையை...!

Wednesday, November 6, 2013

புலம்புவத்தை புலம் தள்ளி.. புது யுகம் படைப்போம்..!






பல்வேறு பிரச்சனைகளால்
ஒரு நிமிடம் கூட
தாக்கு பிடிக்க முடியாமல்
தடுமாறுகிறீர்களா...!

ஒரு விஷயம்
மட்டும்
உங்களிடம் தடுமாறாமல்
இருந்தால் போதும்..
எல்லாமே
தவிடு பொடியாகும்..!

அந்த ஒரு விஷயம்
உங்கள்
மன உறுதி தான்..!

பிரச்னை வரக்கூடாது..
வந்து விட்டால்..
புலம்ப கூடாது..
எதிர்கொள்ள வேண்டும்..!

பணபிரச்னை..
முதன்மையானது
மட்டுமல்ல..
பொதுவானது கூட..
வரும் வரை
யாருமே
உணர்ந்திட முடியாதது..!

இருப்பதில்
திருப்தி
வளர்த்துக்கொள்ள வேண்டும்..
பணம் தேவை
மட்டுமல்ல
அவசியமில்லை..
என
முடிவெடுக்கும்போது..
பண பிரச்னை
பறந்து போகும்...!

மான பிரச்னை ..
உயிர்வரை
பரவி விடும்...!

இது வரை
யாருமே
உத்தமர் இல்லை
இனியும்
யாரும் வர போவதில்லை..
என
புரிந்து கொள்ளுங்கள்..
நீங்கள்
உங்களுக்கே
மகானாக மாறிவிடுவீர்கள்...
மான பிரச்னை
மறந்து போகும்..!

பாச பிரச்னை
பகிரபடும் போதுதான்
பூத கரமாக மாறும்...
அன்பு கூட
அருவறுப்பாய்
மாறிடும்...!
நாவடக்கம்...
மட்டுமே நலம் தரும்..!

பழி பேசாமல்..
பாராட்டுகள்
பகிர்ந்து கொண்டால்...
பாசம் மட்டுமல்ல
வாழ்வும் பலபடும்..!

பிரச்சனைகள்
எந்த ரூபத்தில்
வெளிப்பட்டாலும்...
முடங்குவதை விட..
முறியடி க்க தொடங்குவோம்...!

புலம்புவத்தை
புலம் தள்ளி..
புது யுகம்
படைப்போம்..!

Sunday, October 20, 2013

அலைபாயும் எண்ணம் .. கொடுமையான ஆபத்து...!







அலைபாயும் எண்ணம் ..
கொடுமையான ஆபத்து...!

அடிக்கடி மாறும் ...
எதுவுமே ..
அவலத்தை மட்டுமல்ல ...
நம்மை ..
அசிங்கமும் படுத்தி விடும்....!

நமது ...
சொல் செயல்...
மாறாமல் ...
இருக்க வேண்டும்...!
இதற்கான ..
அடிப்படை இலக்கணம்...
சொல்லுவதற்குமுன் ..
சாதக பாதகங்களை ...
அலசுவது அவசியம்..!

செயல்பட துவங்குமுன்..
ஆரம்பம் இப்படித்தான் ...
முடிவுகள் இது தான் ....
என -
வரையறுத்து கொள்ளுவது ..
மிக முக்கியம்...!

பிறகென்ன...

உங்களின் அணுகுமுறை ..
பிறரால் ...
அலட்சிய படுத்த பட்டாலும்...
தரக்குறைவாக ..
அலச பட்டாலும்...
உங்களுக்கு மட்டும் ..
திருப்தியை ...
தந்து கொண்டிருக்கும்...!

வரக்கூடிய முடிவுகளை..
உறுதி படுத்தி கொள்ளுங்கள்...
அதுவரை..
உங்களின்..
அலசல்கள்..
தீர்மாணங்கள்...
அணுகுமுறை..
உங்களுக்குள் ..
நீங்களே செய்யும்...
விவாதங்கள்...
எப்படி வேண்டுமானாலும்..
இருந்து விட்டு போகட்டும்...
ஆனால்..
முடிவெடுத்து ..
தொடங்கிய பிறகு..
அலை பாயும் மனத்தோடு..
உங்கள் முடிவுகளையே
அலச ஆரம்பித்தால்...
அது
கொடுமையான கேவலம்..!

முடிவுகளுக்கு பிறகு...
புது தொடக்கம்..
புத்துணர்வு..
புரிந்து அனுபவியுங்கள்...!

தொடங்கிய பின்...
தொடரும் ..
கடந்ததின் தடுமாற்றங்கள்..
வாழ்க்கையின் அஸ்தமனம்...!

அலை பாயும் ..
எண்ண அலைகளுக்கு...
உங்களிடம் ..
காரணம் இருக்கலாம்...
ஆனால் ..
நிம்மதி..
சந்தோசம்...
திருப்தி...
அன்பு...
அழிந்து போகும்...!

அலை பாயும் ...
மனதை அடக்கி ...
வாழ்வின் ...
அர்த்தத்தை ...
அனுபவிப்போம்...!


Friday, October 18, 2013

முடிவுகள் ... முழுமை பெறும்....!









முடிவெடுக்க
தடுமாறுவது இயல்புதான்...!
அதர்க்காக
முடிவெடுப்பதை
தள்ளி போடுவது
தவறானது...!

வெற்றியோ
தோல்வியோ...
நம்மை கட்டுபடுத்தாது
என தெளிந்தால்..
தெரிந்தால்...
சட்டென்று முடிவெடுத்து
செயல் படுத்தியும் காட்டுவீர்கள்...!

வெற்றிதான் என
உறுதியுடன் இருந்தால்
பக்கவிளைவுகள்
யோசிக்காமல்
முடிவெடுத்ததை
விட்டுதர மாட்டீர்கள்...!

தோல்விதான் என
லேசாக சந்தேகம்
பொறி தட்டினால் கூட...
சரியான
முடிவெடுததல் கூட
நிராகரிக்க பட்டுவிடும்..!

பயம் கலந்து
முடிவெடுத்தால்..
பரிதாபம் மட்டுமே
பக்கபலமாய்
நம்மை
பாழ் படுத்திவிடும்..!

கோபம் கலந்து
முடிவெடுப்பது..
நம்மை
பாவம் சுமக்க
வைத்து விடும்..!

ஏக்கம் கலந்து
முடிவெடுப்பது....
நம் ஏற்றத்தை கூட
திருப்தியில்லாமல்
ஆக்கிவிடும் ...!

விரக்தியில்
முடிவெடுப்பது
விபரீதம் தரும்..!

சோகத்தில் முடிவெடுபபது..
சோதனையாய் மாறி
சுமை தரும்..!

புரியாமல் முடிவெடுப்பது....
புதிராய் மாறி
எல்லாவற்றையும்
சிக்கல் ஆக்கிவிடும்...!

பாசத்தில் முடிவெடுப்பது...
மறுபரிசீலனை
செய்ய முடியாதது..
சுயததை
அழிக்க தொடங்கி விடும்..!

எப்படி..
எப்போது
ஏன்
எதர்க்காக
என
எதுவுமே
சேராமல்
முடிவெடுக்க முயலுங்கள்..!

முடிவுகள் ...
முழுமை பெறும்....!

முழு வாழ்க்கையிலும்
தெளிவு
தொடரும்...!

Wednesday, October 9, 2013

நீ வேண்டும் எனக்கு...!

உனக்கெங்கே
தெரிய போகிறது .
புரிய போகிறது...
என் ஒவ்வொரு
அணுவின் தேடல்கள்..!

என் பெண்மையின் உண்மை...
நீ பார்க்கும்
என்னில் இல்லை..
என்னுள்..
உனக்காக மட்டுமே
ஏங்கும்...
துடிப்பில் வாழ்கிறது..!

என்
பார்வைகள் மட்டுமே
உனக்கு பரிச்சயம்..!
எனக்கோ..
உன் விழி
அசைவுககளே
அன்பின் அரிசுவடி...!

பார்த்தும்...
பாராமல் போவது....
உனக்கு வாடிக்கை...!

நீ
பார்க்காத போதும்...
உணர்வுகளை கூட...
வெட்கபட வைப்பதே..
என் வாழ்க்கை..!

உன்
விருப்பத்தை...
மட்டுமே தெரிய படுத்தி
தொடங்கினாய்
 உன் நேசத்தை...!

உன் பெயரின்..
ஒவ்வொரு எழுத்தும்..
என்னுள்
உச்சரிக்கபபடும்போது
உதடுகள்
உன்னையே
சுவைக்கின்றன...!

தொட்டுவிடும் தூரத்தில்
நீ
அமர்ந்து
என்னை
தொட மறுத்து..மறந்து..
என்ன
சாதிக்க போகிறாய்...!

ஒட்டாமல்
உரசி செல்லும்
உன் அருகாமை...
என்னுள்
உன்னை
விதைத்து போகிறது..!
வதைத்தும் போகிறது!

என் மேலே படரும்
உன் மூச்சு காற்று...
உன்னுள்...
என்னை...
மூழ்கடிக்க தொடங்குகிறது,.

உனக்காக
காத்திருப்பதும்...!
வந்தபின்
தவித்ிருப்பதும்..
போனபின்
துடித்திருப்பதும்...
நீ
அறியாத..
நான்..!

என்னிடம்..
உனக்கு எதுவுமே..
தேவை இல்லாமல்
இருக்கலாம்...!

ஆனால்

என்
எல்லாமும்...
உன் பார்வைக்காக...
உன் சிரிப்புக்காக...
உன் பேச்சுக்காக..
உன் அருகாமைக்காக...!

இரவுகளில்
விழித்திருந்து..
உன்னையே
நினத்திருந்து..
தலையணை நனைந்து..
உன்னால்
நான் விடும்
கண்ணீர் கூட
சுகம் தான்...!

எதுவுமே ..
தேவை இல்லை..
எப்போதும்....!

சேர்ந்து வாழ
முடியாவிட்டாலும்..
நினைத்து
வாழ...

நீ
வேண்டும்
எனக்கு...!

Sunday, October 6, 2013

நம்மால் மட்டுமே முடியும்..!

நம்மால் மட்டுமே முடியும்..!




முடியும்...!
முடியாது..?

இந்த
இரண்டு வார்த்தைகளுக்குள்
எல்லாமே அடங்கி விடும்....!

எப்படி முடிவெடுக்கிறோம்..
என்பதுதான்
நம்மை வழி நடத்தும்...!

எதுவுமே
தொடங்குமுன்..
முடியுமா..?..முடியாதா..?..
என அலசலாம்..!
தொடங்கியபின்
தடுமாறினால்
நிம்மதி தடம் மாறிப் போகும்..!

முடியும்..
என தீர்மானிக்கும்போதே..
உங்கள்
முதலடியும்..முடிவும்..
முகம் மலர செய்யும்...!

முடியாது
என எண்ணம்
உங்களுக்குள் எழும்
அந்த நொடியிலிருந்து...
தடுமாற்றங்கள்..
உங்கள் நிம்மதியை ..
உங்கள் சந்தோசங்களை...
தடம் மாற செய்துவிடும்...!

தொடங்கிய
அடுத்த நொடி
உங்களிடம் ...
முடியும்...முடியாது...
என
கேள்விகள் வர தொடங்கினால்
சஞ்சலத்தை மட்டுமல்ல
சங்கடங்களை..
உங்கள்
தொடரும் வாழ்க்கை
முழுவதும்
நிரந்தரமாக்கிவிடும்...!

முடியாது..
என்ற எண்ணம்..
நமது பயத்தின்
பரிதாபம்...!

நம்
இயலாமையின்..இழிவு...!

ஏக்கம் தரும்
துக்கம்..!

தன்னம்பிக்கையின்
தலைகுனிவு.....!

சந்தேகத்தின் சதி...!

சந்தோசத்தின் சாபக்கேடு...!

முன்னேற்றத்தின் முடக்கம்..!

முடியாது என்ற வார்த்தை..
இனி
உங்கள் நினைவுகளில் கூட
நீக்கப்படவேண்டும்...!

முடியும் என்று
மனத்துக்குள்
நினைத்து பாருங்கள்...!

தோற்பது கூட சந்தோசமாகும்..!
கிடைக்காதது கூட திருப்தி தரும்..!
உதாசீனம் கூட உற்சாகம் தரும்...!
ஏக்கம் கூட ஏற்றம் தரும்..!
சோகம் கூட சுகம் தரும்..!

முடியும்
எதுவுமே
நம்மால் மட்டுமே
முடியும்..!

Tuesday, October 1, 2013

நிமிடமும்..உன் நினைவுடன்..!

நிமிடமும்..உன் நினைவுடன்..!

சில உறவுகள்..
எப்படி என புரியாமலேயே...
நம்முள் பதிந்து போகும்..!

ஏன் இப்படி
என எண்ணம்
எழும் முன்...
ஏங்க வைக்க தொடங்கி விடும்...!

சரியா..தவறா..
என தீர்மானிப்ப தற்குள்..
அதிலேயே தஞ்சமடைந்து விடும்..!

மாறமுடியாதது..
என உறுதி..
தருவ தற்குள்..
அதிலேயே உறைந்து போகும்...!

தவிர்க்கலாம்
என நினைக்கும்போதே
தவிப்புகள் தொடங்கி விடும்...!

வேண்டாம்
என எண்ணினால்...
நினைவுகள்
அதை சுற்றியே வட்டமிடும்...!

விலகி விட
ஒரு நொடி நினைத்தாலும்..
நெஞ்சம் அணைத்து
செல்ல தீட்டம் தீட்டும்..!..

புரிய வைத்து
பிரிய நினைக்கும் போதே
புரிந்து கொண்டு
புது தொடக்கத்தை
தொடர செய்யும்...!

விழிகளை
தவிர்க்க நினைத்தால்..
பார்க்கும் பார்வைகள் வலிக்கும்...!

பேசுவதை குறைத்தால்....
வாழ்வதே கசக்கும்....!

சின்ன சின்ன
தீண்டல்களை நிராகரித்தால்..
உணர்வுகளின் தூண்டல்
உச்சம் பெரும்...!

வேண்டாம் என
கட்டுபடுத்தினால்..
வேண்டும் வேண்டும்
என கட்டளை பிறப்பிக்கும்..!

இது வேதனையின் சோகம்
என முடிவெடுக்கும் போதே..
சேர்ந்திருந்த
நொடிகளின் சுகம்
வந்து போகும்...!

சரி தவறு என
அலச போவதில்லை...
முடியும் முடியாது என
காத்திருக்க போவதில்லை...
வேண்டும் வேண்டாம்
என தயங்குவதில்லை..

நேற்றும் நாளையும்..
நிஜமில்லை...!

இன்று மட்டுமே போதும்..!

நிதமும் உன் நினைவுடன்...!

Monday, September 30, 2013

அன்பு கூட அவஸ்தையாகுமா.. !

அன்பு கூட
அவஸ்தையாகுமா.. !

அனுபவித்தவர்களுக்கும்..
அனுபவித்துகொண்டிருப்பவர்களுக்கம்...
தெரியும்..
புரியும்...!

நேசிப்பவர்களின் ..
அன்பை பெறும் வரை..
உங்களின் அவஸ்தை ..
அளவிட முடியாதது...!

அன்பை உறுதி செய்த பின்தான் ..
உண்மை அவஸ்தையே ..
தொடங்கும்..!
உங்களை தவிர ..
வேறு யாருடனும்..
பேசினாலும்..
சிரித்ாலும்
உங்கள்
உள்மனது..
அவஸ்தை பட ..
ஆரம்பித்துவிடும்..!

அன்பு ..
சுகத்தை மட்டுமே ..
நமக்கு தந்தால்..
அதில் ..
சுறுசுறுப்பு இருக்காது..!

அன்பு..
பாசம் மட்டுமே ..
பொழிந்தால்..
பரபரப்பே இருக்காது..!

அன்பு ..
நிம்மதியை மட்டுமே ..
தந்தால்..
நிரந்தரமாய் தொடராது...!

அன்பு ...
திருப்தியை மட்டுமே ..
கொடுத்தால் ..
திகட்டி போகும்..!

அன்பு எனும் ..
உணர்வின் ..
அடிப்படை இலக்கணமே ..
அது ..
அவஸ்தையை தந்து கொண்டே ..
இருக்க வேண்டும்...!

அதன் ...
அர்த்தம்
பல வழிகளிலும்..
வகைகளிலும்..
உயிருள்ளவரை
உங்களோடு
வாழ தொடங்கிவிடும் ..!

உங்கள் ..
உயிருக்கு....
வாழ ...
எதிர்பார்ப்புகளை ..
உருவாக்கி தந்து விடும்...!

அன்பு..
அக்கறை. மட்டுமல்ல..!

அன்பு..
புரிந்துகொள்ளல் மட்டுமல்ல...!

அன்பு ..
அரவணைப்பு மட்டுமல்ல...

அன்பு ...
விட்டுக்கோடுத்தல் மட்டுமல்ல..

அன்பு ..
அவஸதையும் அடங்கியது...!

அந்த ..
அவஸ்தைக்கு
இது வரை ..
எதுவுமே இணையாகாது..!
இனியும்
இணையாக
எதுவுமே கிடயாது..!

அன்பை ..
இனி ..
"அவஸ்தையுடன் "
அனுபவிப்போமா..!

Saturday, September 28, 2013

பிடித்திருக்கிறது....!

பிடித்திருக்கிறது....!

சொன்னாலும் சரி...
கேட்டாலும் சரி...
மனதை மயக்கும்
மந்திர சொல்...!

எந்த காலகட்டத்திலும்..
எப்படிப்பட்ட சூழ்நிலையிலும்...
யாரிடம் சொன்னாலும்
மனம் அடிமைபடும்...
தந்திர சொல்..!

எதை தொடங்கினாலும்..
எப்படி முடித்தாலும்
பிடித்திருக்கிறது என்று
சொல்லிபாருங்கள்...
சொக்கி போவார்கள்...!

குழந்தையிடம் பிடித்திருக்கிறது
என சொன்னால்
நம் கன்னங்களை
முத்தமழை கொண்டு
ஈரமாக்கும்..!

குமாரியிடம் பிடித்திருக்கிறது
என சொல்லிப் பாருங்கள்..
வாழ்வே
நீங்கள் தான் என
வரம் தருவார்கள்...!

தோழ மையிடம்
பிடித்திருக்கிறது
என சொல்லிப் பாருங்கள்...!
ஆத்மார்த்த உறவு நிலைப்பபடும்...!

உறவுகளிடம் பிடித்திருக்கிறது
என சொல்லி பாருங்கள்...
பாசம் பத்திரபடும்...!

செய்யும் தொழில் பிடித்திருக்கிறது
என.. சொல்லிப் பாருங்கள்...!
திருப்தியின் உண்மை உணரப் படும்...!

தனிமை உங்களுக்கு பிடித்திருந்தால்..
மனம் கவர்ந்தவர்களின்
நினைவுகளை அனுபவிக்கிறீர்கள்...!

இசை உங்களுக்கு பிடித்திருந்தால்
இதயத்தில் யாரையோ
பத்திரபடூத்துகிறீர்கள்...!

காத்திருப்பது பிடித்திருந்தால்
உங்கள் உறவு
உறுதியாகிரது..!

விழிகள் பிடித்திருந்தால்..
உங்கள் உள்ளம் வரை
உங்களை உணர்ந்தவர்களின்
பார்வை ஊடுருவி
பதிந்து
பத்திரப் பட்டுவிட்டது..!

ஒவ்வொரு சொல்லும் ..
பிடித்திருந்தால்..
உங்கள் நேசம் நிஜம்...!

சின்ன சின்ன தீண்டல்களும்
ஸ்பரிசங்களும் பிடித்திருந்தால்...
உங்களை
நம்பிக்கையுடன்
ஒப்படைக்க ஆரம்பிக்கிறீர்கள்..!

கனவுகளும்
நினைவுகளும் பிடித்திருந்தால்...
வாழ்க்கை துவங்கும்..!

பிடித்திருக்கிறது..
என்ற ஒருவார்த்தை..
எல்லாவற்றையும்
உங்கள் வசமாக்கும்..!

Friday, September 27, 2013

நம்பிக்கை துரோகம்...!

நம்பிக்கை துரோகம்...
திட்டமிட்டு செய்வதும்....
தற்செயலாய் செய்வதும்..
விளயாட்டாய் செய்வதும்..
தெரிந்தே செய்வதும்..
சுயலாபத்திர்க்காக செய்வதும்..
என எப்படி ...
நியாயபபடுத்தினாலும்..
மன்னிக்க முடியாத
மாபாவம்...!

இதைவிட..
ஒருமுறை
மன்னிக்கப் பட்ட
நம்பிக்கை துரோகம்..
மறுபடியும் ...
இன்னொருமுறை ...
துளிர் விட்டால்..
அது -
மீளவே முடியாத
மிகபெரிய சாபம்...!

நம்பிக்கை துரோகம் ..
உங்களுக்குள் எட்டிப்பார்க்கிறது ...
என யார் சொன்னாலும்..
எதிர் வாதம் வேண்டாம்..
வேரோடு ..
அழிக்க முயலுங்கள்...
உங்கள் வாழ்க்கை ...
பலம் பெறும்...!

நீங்கள் புரிந்த ..
நம்பிக்கை துரோகத்தை ...
ஒருபோதும்..
நியாயபபடுத்தா தீர்கள்...!
தவிர்த்து விடுங்கள் ..
மனித தன்மை ...
உங்களுக்குள் வாழும்...!

நம்பிக்கை துரோகாதீர்க்கான ..
காரணங்களை ..
வரிசை படுத்த வேண்டாம்...
விட்டு விலகுங்கள்..
உறவுகளில் ....
உண்மை விதைக்கபடும்...!

நம்பிக்கை துரோகத்தினால் ...
நீங்கள் அடைந்த ...
சுய லாபம்..
உங்களுக்குள் ...
கலக்கும் நச்சு..
சுத்தப்படுங்கள்..
சுகமான ..
சுதந்திர திருப்தி ...
உங்களிடம் மட்டுமே...!

நம்பிக்கை துரோகம் ..
உங்களுக்குள் எட் டி பார்த்தால்...
எல்லாமே ..
கேவல பட்டு போகும்...!
தோல்வியும்..
விரக்தியும் ..
நஷ்டமும்...
சோகமும்...
தடையும்..
தொடர்ந்து கொண்டே போகும்..!


நம்பிக்கை துரோகம் 
நம் வாழ்க்கை
அகராதியில்
நீக்கபட வேண்டும்...!

பிறகென்ன ....

நமது வாழ்க்கை
முழுவதும்
நம்மோடு
நம்பிக்கையும்
துணை வரும்.....!...!

Thursday, September 26, 2013

காத்திருப்பது சுகமானதுதான்..!

காத்திருப்பது..
சுகமா....!?சோகமா....?!
உணர்ந்து பாருங்கள்
உறவின் வலி அனுபவிக்கபடும்.!

வாசலில் அசையும்
வெறுமையின் நிழல் கூட
உள்ளத்தை சில்லிட வைக்கும்..!

நொடிகள் கூட
நீண்டு போய்
யுகமாய் மாறும்..!

ஒரு நொடி எதிர்பார்ப்பும்...
மறு நொடி ஏமாற்றமும்..
ஒரே மாதிரி
சுகம் தருவதும்
காத்திருப்பதில்தான்...!

காத்திருக்கும் நேரங்கள்
உண்மையில்
உறவுகளை பலபடுத்தும்
அஸ்திவாரம்..!

காத்திருக்கும் கணங்களில்
உருவான எண்ணங்கள்....
கானல் நீரா..?காற்று குமிழியா...
காத்திருப்பத்தின் காரணம்
நிறைவேறியதும்
கலைந்து போனது எப்படி..?

காத்திருக்கும்போது
உங்கள் துணை சேர்ந்த..
கடிகாரம் கூட
தட்டுத்தடுமாறி நேரம் காட்டும்..
அல்லது கூட்டும்..!

விழிகளின் இமைகள் கூட
இயங்க மறுக்கும்..!

சிரிப்பது கூட
செயல்பட தவிக்கும்...!

வற்றாத கண்ணீர்
துடைக்க துடைக்க
ஊற்றேடுக்கும்...!

விருப்பமானது எல்லாம்
வெறுப்பாய் தவிர்க்கபட்டு
ஒதுக்கபடும்..!

உயிர்  வாழ்வது கூட
பெரும் பாரமாய்
கஷ்டபடுத்தும்...!

எல்லாம் மறந்து போகும்...
மரத்து போகும்...
காத்திருப்பு நிறைவேறியதும்..
மீண்டும் காத்திருக்க
காத்திருக்க
மனம்
எண்ண தொடங்கிவிடும்..!

ஆக...
காத்திருப்பது
சுகமானதுதான்..!

<iframe allowfullscreen="" frameborder="0" height="270" src="//www.youtube.com/embed/UWv56Q0854Y" width="480"></iframe>

Tuesday, September 24, 2013

புரியாத புதிர் கூட புனிதப்படும்..


புரிந்து கொள்ளுதல்...
புதிராக மாறினால்...
நிம்மதி கூட
நிலை இல்லாமல் போகும்...!

புரிந்து கொள்வதில்
சந்தேகமும்
துணை சேர்ந்தால்...
சந்தோசம் கூட
சிரமமாய்..உணரப்படும்..!

புரிந்து கொள்வது என்பது எது..
என்ன..என்பதை
அடிப்படையில்..
முதலிலிருந்து
நாம் புரிந்து கொள்ள
முயற்சி எடுப்போம்..!

வாழ்க்கை என்ன
என்று புரிந்து கொள்வதற்கு முன்...
வார்த்தைகள் எப்படி
என்ன
புரிந்து கொள்வோம்..!

இன்று சுகம்
என சொன்னால்..
நேற்றும்..
நாளையும் சோகம்
என புரிந்து கொள்ளுதல் கூடாது..!

இரவின் நிலவு
நெஞ்சை அள்ளும் என்றால்...
சூரியனின் பகல்
நமக்கு வெறுப்பு என்ற
புரிதல் அல்ல...!

தனிமையில்..
உன் நினைவுகள் மட்டுமே
என்னுள் சுவாசம் தந்து
உயிரை மீட்கிறது என்றால்...
நிஜத்தில்
நீ வெண்டாம் என்ற புரிதல்..
கொடுமையானது..!

புரிந்து கொள்வதில் தவறு...
உங்களிடம் தான்
என புரிந்து கொள்ளுங்கள்..!

உங்களை
நீங்கள் உணருவீர்கள்...!

புரியாத புதிர்
கூட
புனிதப்படும்..!
 
http://www.raaga.com/play/?id=308729 
 
 

Saturday, September 21, 2013

ஆரம்பம்...! அபூர்வ அதிசயம்..!

ஆரம்பம்...!
எப்படி என யாராலும் 
கண்டுபிடிக்க முடியாத 
அபூர்வ அதிசயம்..!

வாழ்க்கையின் ஆரம்பம்..
எது என
அறிந்து கொள்ளமுடியுமா..?

முதலில் உச்சரித்த
வார்த்தையின் ஆரம்பம்
எப்போது என
கனிக்க முடியுமா..?

சிரிப்பின் ஆரம்பம்
எப்போது எதனால்
என உறுதி படுத்த முடியுமா..?

உங்களை நீங்கள்
உணர ஆரம்பித்தது
எந்த தருணத்தில்..
சொல்லுங்கள்...!

உங்கள் பொறுப்புகளின் ஆரம்பம்...
உங்கள் தேடல்களின் ஆரம்பம்...
உங்கள் வெற்றியின் ஆரம்பம்..
உங்கள் தடுமாற்றங்களின் ஆரம்பம்...!
உங்கள் ஏக்கம் ஆரம்பித்தது எதை பார்த்து...?
உங்கள் கோபம் ஆரம்பித்தது ஏன்...?

இப்படி ஆரம்பங்களை அடுக்கலாம்..!
அடுக்கி கொண்டே போகலாம்..!

ஆனால்..
இதெல்லாம் முடிவுகள் என்ற
முற்றுப்புள்ளியுடன் முடியும்!

ஆனால்
முடிவே இல்லாத ஆரம்பம்
என உங்கள் வாழ்க்கையோடு
வந்த விசயம் எது என
நினைவுகளை புரட்டி பார்த்து
சொல்ல முடியுமா...!

ஆம்
அது காதலின் ஆரம்பம்...!

எப்போது..
எதனால்..
ஏன்..
எப்படி..
எங்கே..
என காதல் ஆரம்பி க்க தொடங்கிய
ஒவ்வொரு நொடியும்
நீங்காத கல்வெட்டு காளாய்
பதிந்து போகும்..!

ஆனால்
முற்று பெறாத
முடிவே தொடரும்..!

காதல் மட்டுமே
முடிவே இல்லாத
ஆரம்பம்...!
-B M ஷபி

Thursday, September 5, 2013

கருத்து வேறுபாடு.... ஆரம்ப புள்ளியிலேயே.. முடக்கபடவேண்டும்...!



கருத்து வேறுபாடு....
ஆரம்ப புள்ளியிலேயே..
முடக்கபடவேண்டும்...!
தொடர்ந்தால்
உறவுகளில்
முற்று புள்ளி நிரந்தரமாகிவிடும்...!

வழக்கம் போல்
இதிலும் சம்பந்த பட்டவர்கள்..
சந்தித்து..
வார்த்தைகளோடும்..விழிகளோடும்..
உளப் பூர்வமாக...
உணர்வுகளை விட்டு கொடுத்து...
ஓரிரு வார்த்தைகள் பரிமாறி கொண்டாலே போதும்...
உறவும் பலப்படும்..
உள்ளமும் வசப்படும்...!

புரிந்து கொள்வதிலும்..
புரிய வைப்பதிலும்...
புரிந்து கொண்டே ஆக வேண்டும்
என்ற கட்டாயததிலும்..
ஏற்படும் தடுமாற்றமே..
கருத்து வேறுப்பாட்டின் துவக்கம்...!

கருத்து வேறுபாடு
கவனிக்க படவேண்டிய விஷயம்..என்றாலும் ..
அலட்சிய படுத்தினால்...
அன்பின் அழிவு ஆரம்பிக்க தொடங்கும்...!

மனம் விட்டு பேசுவோம்..
விட்டு கொடுத்து விளக்குவோம்..!
ஏற்று கொண்டு..
நியாய படுத்து வோம்...!

கருத்துகளில் வேறுபட்டாலும்..
வாழ்க்கையில் ஒன்று படு வோம்...!!!

உணர்வோம்...!
உயர்வோம்.....!!!!
-B M ஷபி-சேலம்

தோல்வி கூட நமக்கு தோள் கொடுக்கும்

Add caption
எதிலும்..எங்கும்..
எப்போதும்...தோல்விதான்...
என
ஏக்கம் கலந்த பெருமூச்சு விடவேண்டாம்..!

தோல்வியின் காரணம் கண்டுபிடியுங்கள்...!

அதை தவிர்த்து பாருங்கள்...!

வெற்றி நிச்சயம்
என
உறுதி தரவில்லை...!

தோல்வி கூட
நமக்கு
தோள் கொடுக்கும்
நம்பிக்கை தரும்..!

-B M ஷபி

Sunday, May 19, 2013

நிராகரிப்பது..
வெறுப்பது..
தவிர்ப்பது...
உதாசினப்படுத்துவது...
விலகுவது...
ஒதுங்குவது....

இப்படி வரிசைப்படுத்தும்
அத்தனையும் 
முறையாக
சரியான சமயத்தில்
வெளிப்படுத்தினால்
விரோதங்கள்  விலகும்...!

தவறினால் 
உங்கள் வாழ்வே
உங்களுக்கு விரக்தியாகும்...!

தகுதிக்கு மீறிய தேவை
           நிராகரிக்கப்பட வேண்டியது...!

முறை தவறிய முன்னேற்றம்
            வெறுக்கபட வேண்டியது...!

காதலில் கட்டாயம்
            தவிர்க்க படவேண்டியது...!

நாணயம் இழந்து பெற்ற எதுவும்
             உதாசின படுத்த படவேண்டியது...!

தனிமனித ஒழுக்கம் தவறும் இடங்களை விட்டு
               விலகுவது...!

அநாவசிய அரட்டைக் பேச்சுக்களை விட்டு
                ஒதுங்குவது...!

   இப்படி......

          முடிந்த வரை முயலுங்கள்..

                                   முழு திருப்தியை
          முழுமையாய் உணர்வீர்கள்...!

-B M SHAFI                         B M ஷபி

Saturday, February 2, 2013

வெற்றிக்கு உயிர் தருவோம்...!


எப்போதும் தோற்று விடாமல்...
எதையும் இழக்காமல்..
யாரிடமும் அவமானப்படாமல்.....
யாராலும் உதாசீனம் செய்யப்படாமல்...
யாருடைய எதிர்ப்பும் இல்லாமல்...
யாருடைய துரோகத்தையும்...உணராமல்...
யாருடைய பொறாமையும் நம் மீது விழாமலும்...
யாருடைய வெறுப்பும்...உணராமல்.....
எந்த எதிர்ப்பும் நம்மோடு இல்லாமல்..
எந்த கேவலத்தையும்..தாங்காமல்...

வெற்றியை உணர்ந்து பாருங்கள்..

அதில் உயிரே இருக்காது...!

வெற்றி..நமக்கு திருப்தி தர வேண்டும் என்றால்...
நிறைய தேடல்களுக்கு
பின்னால் தான் கிடைக்க வேண்டும்...

போராடி பெற்றால் தான்
வெற்றியை இழந்து விடாமல்
தொடர்ந்து நம்மோடு பத்திரப்படுத்த...முடியும்.....!

தேடி..தேடி..அலைந்து
பெரும் வெற்றி...
வாழ்வின் அர்த்தத்தை விளக்கும்...!

உங்களை கண்மூடித்தனமாக எதிர்க்கும்
அத்தனை பெரும்
உங்கள் வெற்றியை
வெறுப்புடன் ஏற்று கொண்டவர்கள்...!

உங்களை கேவலமாய் விமர்சிப்பவர்கள்...
உங்கள் வெற்றியை
சகிக்க முடியாமல் ஒப்பு கொண்டவர்கள்....!

உங்களை தரக்குறைவாக விமர்சிப்பவர்கள்...
உங்கள் வெற்றியை
பொறாமையுடன் பொருந்தி கொண்டவர்கள்....!

வெற்றிய நோக்கி
பயணப்படும்போது போது...
இலக்கு மட்டுமே..
நம்மோடு வசப்படும்...
மற்றதெல்லாம்..
உதிர்ந்து போகும்..
உணருவோம்...
வெற்றிக்கு உயிர் தருவோம்...!

இந்தியா எனது தாய் நாடு...! இஸ்லாம் எனது வழிபாடு...!


இந்தியா எனது தாய் நாடு...!
இஸ்லாம் எனது வழிபாடு...!
நான் பிறப்பால் இஸ்லாமியன்...!

விஸ்வரூபம்...தடை..!
அதை தொடர்ந்து பரவி வரும் கருத்து மோதல்கள்...
குறித்த என் பதிவு...இது...!


இது.
உணர்வுகளின்..போராட்டம்....!
உறவுகளின் போராட்டம் அல்ல....!
காலம் காலமாய்..நமக்குள் ஒருபோதும்
வேறுபாடுகள்..வருவதில்லை...!
வந்தாலும் நிலைப்பதுமில்லை..!!
நீடிபப தும் இல்லை...!

நம்மை பிரித்து ஆள நினைக்கும்..
பிரிவினை சக்திகள்..
ஒவ்வொருமுறையும் படு தோல்வியை மட்டுமே சந்திக்கின்றன..!
இது அனுபவ உண்மை...!

நான் மட்டுமல்ல
என் இஸ்லாமிய சகோதரர்கள்....
மாற்று மாத சகோதரர்கள்..
பிறந்து கண் விழித்து பார்த்தது..
பிரசவம் பார்த்த
இந்து அல்லது பிற மதத்தை சார்ந்த
டாக்டர் தாயை தான்..!

அருவருப்பு பார்க்காமல்
நம்மை சுத்தப்படுத்தி
நமது உறவுகளிடம் ஒப்படைத்தது..
கிறிஸ்துவ அல்லது பிற மதத்தை சார்ந்த செவிலி சகோதரிதான்...!

இப்படி தொடங்குகிறது நமது பயணம்...
ஒவ்வொரு கால கட்டத்திலும்..
பிற மதத்தை சார்ந்தவர்களோடு..
சுவாசம் கலந்து வாழ்ந்து வருகிறோம்..!

நமது பலவீணம்..ஒன்றே ஒன்றுதான்...!
சம்பதப்பட்ட வர்கள் கலந்து பேசாமல்..
சம்பந்தமே இல்லாதவர்கள்..
பேசி பேசி பிரச்னை களை பெரிதாக்குவது தான்...!

கமலும்
இதனால் உணர்வுகள் பாதிகாபதுகிறது
என முறை இடும் சகோதரர்களும் ..
ஒரே ஒரு முறை
யாருடைய..தலையீடும்..
குறுக்கிடும் இல்லாமல் பேசி பார்க்கட்டும்
நிச்சயம் ஒரு தீர்வு பிறக்கும்....!

இது போன்ற பிரச்சனைகள்
உருவாக்கபபடுவது..
நம் உறவுகளை பலப்டுத்ததான்...
பலவீண படுத்த அல்ல..
என உளபூர்வமாக உறுதி எடுப்போம்..!
கை கோர்த்து எதிர்த்து நிற்போம்..!