Monday, December 24, 2012

பெண்மை....!


பெண்மை....!
உச்சரிக்கும்போதும்..
உணரும் போதும் மென்மை
நம் உயிருக்குள்ளும் கலந்து விடுகிறது...!

தாய்மையில் மறைந்து இருக்கும் பெண்மை....!
எதற்குமே ஈடாகாது..!
பிரசவ வலியின் கண்ணீரில் கூட தேனை சுவைத்தவள்....!
விட்டு கொடுத்தே தன் விதியை முடித்தவள்...!

சகோதரிக்குள் ஒளிந்து இருக்கும் பெண்மை....!
அன்பை கற்று தந்தவள்....!
பாசத்தை புரிய வைத்தவள்...!
முதல் ரசிகை..முதல் எதிரியும் கூட....
ஆனால் ஆணை தோற்க விடாதாவள்...!

தோழிக்குள் அடங்கி இருக்கும் பெண்மை....!
தன்னம்பிக்கை தந்தவள்...!
அன்புக்கு புது இலக்கணம் வகுத்து தந்தவள்...!
வரம்புகளை புரிய வைத்தவள்...!
ஏக்கம் அழித்து...ஏற்றம் தந்தவள்...!

மனைவிக்குள் மிளிர்ந்திடும் பெண்மை...!
பாசம் துறந்து..நேசம் மறந்து..
ஆணில் கலந்த மற்றொரு உயிர்...!
ஆணின் வக்கிரங்களை..சகித்து..
ஆணை ....உலகிற்கு ....
ஆண் என நிரூபிததவள்...!
தாய்மையை உணர்த்தியவள்....!
ஆணை
எப்போதும் சகித்தவள்..
சுகித்தவள்...!

மகளுக்குள்...மின்னும் பெண்மை...!
மாற்றம் இல்லாதது...!
ஆணை அடக்கியும்..
கட்டுபடவும் கற்று தந்தது ..!
ஆணுக்கும் கண்ணீர் ஊற்றை ..
அறிமுகடுத்தி வைத்தவள்..!

பெண்மைக்குள் ...
இத்தனை உண்மைகள் இருக்கும்போது...
உணர்வுகள்..தொலைத்து..
உணர்ச்சிகளுக்கு அடிமை பட்டு..
மிருகங்களுக்கே கூசும் முறையற்ற செயல்களை..
இனியாவது
மனதுக்குள்ளும் விடாது

பெண்மைக்கு இணையானது ....
ஆண்மையும் தான்...
என நிருபிப்போம் ...!