Friday, January 31, 2014

ஒவ்வொரு நொடிகளும்.... உன்னை சுற்றியே கடந்து போகிறது...!




ஒவ்வொரு நொடிகளும்....
உன்னை சுற்றியே
கடந்து போகிறது...!

உன்னை
நான்
ஏற்று கொண்ட
அந்த நொடியில்..
உன் விழியில்
வழிந்த
ஒரு துளி கண்ணீர்..
என் தொடரும்
வாழ்க்கையின்
ஆதாரமானது..!

நொடியில் உணர்ந்த
உன் உதடுகள்...
காமம் தொடங்கி..
காதலை அனுபவித்து..
புனிதமானது..!

உன்னை விட்டு
விலகிய
அந்த நொடிப்பொழுது...
மீண்டும்
உன்னை
சேர்ந்த பிறகும் கூட..
வலித்து கொண்டே இருக்கிறது...!

ஒவ்வொரு முறையும்
உன்னை தரிசிக்கும்
அந்த
முதல் நொடியில்..
என்னை
நானே பிரசவிக்கிறேன்..!

என்னை தழுவி போகும்
அந்த
ஒரு நொடி
உன்
பார்வையின் பரிமாற்றம்..
நானும்
வாழ்கிறேன்
என
எனக்கு நிரூபித்தது...!

உன்
ஒரு நொடி
புன்னகை...
என்
சோகங்கள்
அத்தனையையும்
சுகமாய் மாற்றியது...!

உன் அருகில்
நான் வாழும்
ஒவ்வொரு நொடியும்...
என்னை
பெருமை படுத்தி
கொண்டே இருக்கிறது...!

நீ என்னவள்...
என்னுள் வசிப்பவள்...
என்னை
வாழ வைப்பவள்...!

நீ
எனக்கு கிடைத்த பிறகு
ஒவ்வொரு நொடியும்...
உனக்கே கட்டுபடுகின்றன....!

உடல்கள்..
கலக்கும்.
நிமிடங்களின்
சுகத்தை விட...
உள்ளங்கள் இணைந்த
அந்த
ஒரு நொடிப்பொழுது
சுகமே.....
என்
வாழ்க்கையானது...!!


Thursday, January 23, 2014

சந்தேகம் சரியா..? சதியா..?

சந்தேகம்..
வருவது சரியா....!
இல்லை
வரக்கூடாதா தவறா..?

இப்படி ஒரு சந்தேகம்
உங்களுக்குள் வந்திருந்தால்...
என்ன
முடிவெடுததீர்கள்..?

வரிசை படுத்தி பாருங்கள்..!

சந்தேகம்
நம்பிக்கையை
பலபடூத்துகிறதா..?
பாழ்படுத்துகிறதா..?

சந்தேகம்..
உங்கள் உறவுகளை
உறுதிப்படுத்துகிறதா..?
உதறி தள்ள வைக்கிறதா..?

சந்தேகம்..
உங்களுக்கு
நிம்மதியை பெற்று தருகிறதா..?
நிம்மதியை கொன்று விடுகிறதா?

சந்தேகம்
சரியா..?
சதியா..?

இப்படி
அடுக்கி கொண்டே போகலாம்..!

சந்தேகபபடுவது
ஒரு சமயத்தில்
தவறில்லை
என்றாலும்..
சந்தேகப் பட்டு கொண்டே இருப்பது..
நம்மை மட்டுமல்ல..
நம் வாழ்க்கையையே..
பட்டு போக
செய்திடும்..!

நீங்கள் சந்தேகபபட
தொடங்கி இருந்தால்..
காலம் தாழ்த்தி விடாதீர்கள்..
உண்மையானது தான
என உணர்ந்து பாருங்கள்..
உங்களுக்கே புலபடும்..!

யாரிடம் சந்தேகமோ
அவரிடமே
மனம் விட்டு
கேட்டு விடுங்கள்..
சரியான பதில்
கிடைகாவிட்டாலும்..
உங்களுக்கு
திருப்தியும்..
அவர்களிடம்
தெளிவும் பிறந்து விடும்..!

உங்களை ..
சந்தேகபபட
நினைப்பவர்களை
குறை கூறி நிராகரித்து விடாதீர்கள்..!

அவர்களின்
சந்தேகம்
உண்மை என்றால்
சரி செய்ய பாருங்கள்..
இனி தொடராது
என
உங்கள் உறுதியை
அவர்களுக்கு
புரிய வையுங்கள்..!

தவறான சந்தேகம்
உங்கள் மேல்
என்றால்..
விட்டு தள்ளுங்கள்..!
விலகியது கூட
நல்லது
என விட்டு விடுங்கள்..!

ஆக.
சந்தேகம்
தவறில்லை..
சரியில்லை
என்றாலும் ....
சரி செய்ய பட்டாலும்..
சந்தோசமான
வாழ்க்கை
நிச்சயம்...!

Monday, January 6, 2014

உண்மை காதலை கலங்க படுத்ாதீர்கள்...!


காதல்..
காமம் கலக்காத வரை..
புனிதமானது...!

காதல் என்ற
போர்வையில்..
காமத்தை அடைவதை மட்டுமே
இலக்காக கொண்டு
எல்லாம் முடிந்து
கட்டாய பிரிவை ஏற்படுத்தி..
தெய்வீக காதல்
என
புலம்பும் காமக்காதலர்களுக்கு..
முன்னால்
விபசாரம் செய்யும்
விபசாரிகள்
கூட
புனிதமாக தெரிகிறார்கள்..!

காதல் வயபாடும்போதே..
கட்டில் சுகம்
தேட சமயம் தேடும்..
ஆண் பெண்களிடம்..
நிமிடங்களில் முடியும்
உறவின்
அருவேறுப்பு மட்டுமே
அவசியமாகவும்..
அவசரமாகவும்
உணர ப்பாட்டாலும்..!
அதன்
கேவலமான பாதிப்பு..
உங்கள் வாழ்நாள்
முழுவதையும்..
கொச்சைபாடுத்தி..
உங்கள் வருங்காலம்..
ஏன்..
தொடரும்
உங்கள் சந்ததி வரை
சாக்கடை உலகை
உங்களுக்கு
வசப் படுத்திவிடும்..!

தொட்டு கொள்வதும்..
கட்டிகொள்வதும்.
உங்கள்
இச்சைகளை
தணித்துக் கொள்ள.
உடல்களை
கலக்க விடுவது மட்டுமே
காதலின் இலக்கணம்
என
முறைக்கேடாக ..
நீங்கள்
வகுத்து வைத்த
வக்கிரததிற்கு..
காதல்
என
பெயரிட்டு
திசை திருப்ப வேண்டாம்..!

உள்ளத்தை மட்டுமல்ல..
உடலைக்கூட..
வாழ்நாளில்
ஒன்றில் மட்டுமே
என
உறுதி தருவது
உண்மை காதல்..!

உள்ளத்தில் ஒன்று..
பேச்சில் ஒன்று..
எண்ணத்தில் ஒன்று..
மனத்தில் ஒன்று..
நேற்று ஒன்று..
இன்று ஒன்று..
நாளை ஒன்று..
கட்டிலில் ஒன்று..
உடலோடு ஒன்று..
என
தொடர்ந்து கொண்டே போகும்
உங்கள்
வக்கிரங்களுக்கு
விபசாரம்
என
நாங்கள் சொன்னால்...
விபசாரம் செய்பவர்களே
கூசி போவார்கள்..!

தயவு செய்து
காதல்
என
பெயரிட்டு
அழியா வரம்
கண்ட
உண்மை காதலை
கலங்க படுத்ாதீர்கள்...!