Tuesday, March 20, 2012

பிறப்பே பிழையானது..!

திறமைகளை..
திருடி..
பிழைப்பை நடத்தும் கூட்டம்....
வீழ்வதற்க்காக ..
வாழ்வார்கள்...!

உங்கள் திறமைகள்...
உங்களோடு சுற்றி திரியும்..
உறவாடி கெடுக்கும் கூட்டத்தால்
கொள்ளை அடிக்க படுகிறதா...?

கவலை படுவதை ஒதுக்கி வைத்து
காத்திருக்க தொடங்குங்கள்...!

உங்கள் கண்ணெதிரே
அவர்களின் தோல்விகளுக்கான
அஸ்திவாரம் பலப்படும்..!

எங்கு சென்றாலும்..
அவர்களின்
பிறப்பின் குணம் மாறாது..!

எப்படியும்
அங்கேயும்
தங்கள் திருட்டு தனத்தை
காலம் தாழ்த்தி தொடங்குவார்கள்..!

பிறகென்ன..
உங்கள் துரோகிகள்
எங்கு சென்றாலும்..
ஓரம் கட்டபபடுவார்கள்...!

ஒழுக்கமானவர்கள் ..
தங்கள்
சுய திறமையுடன் வாழ்வார்கள்...!

பிறரின் திறமைகளை
திருடி பிழைப்பவர்களின்
பிறப்பே பிழையானது..!

அவர்கள் மாற வேண்டும்
என எண்ணுவத்தை விட...
உங்கள் திறமைகளை
உறுதி படுத்தி கொள்ளுங்கள்...!
ஊக்கப்படுத்தி கொள்ளுங்கள்...!

உங்கள்
மகத்தான வெற்றியே
அவர்களை அழித்து விடும்...!!
 

இந்தியா..வல்லரசாகும் தமிழகம் நல்லரசாகும்...!

நல்லது
ஒன்றை செய்தால் நலம் ...
என தோன்றியது...!

எது நல்லது ..
என்றே புரியவில்லை...!

நல்லது ...
நமக்கு செய்தால் நலமா...?
பிறருக்கு செய்தால் நலமா...?
பெரும் குழப்பத்தில் ..
என்ன செய்வது என்பதே ..
மறந்து போனது.!

பொதுவாக தோன்றுவதை கடைப்பிடித்தால்...
எல்லோருக்கும் நலம் ..
என ஞானதொயம் வந்தது...!


எது பொதுவான ஒரு விஷயம்...?
எல்லோருக்கும் ஒத்துப் போகும் ...
பொதுவான ..
ஒரு விஷயம் என்றால்...
அது ...
நம் அடிப்படை உரிமைகளை ..
மீட்டெடுப்பது தான்....!

எது அடிப்படை உரிமை...
நீங்களே வரிசை படுதுங்கள்...!
மின்சாரம்...குடிநீர்..கல்வி..ஊதியம்...சாலை வசதி...
இப்படி பல இருந்தாலும்....
கவனிக்க மறந்த விஷயம் ...
இரயில் வசதிகள்...!

இந்தியாவில் ...
இல்லாத ஊர்களுக்கும் ..
இரயில் உண்டு..!

தமிழகத்தில் ...
கோட்டம் இருந்தும் ...
இரயில் இல்லை...!

ஒவ்வொரு தமிழனும் ...

ஒவ்வொரு ..
ஊருக்கும் ...
இரயில் வேண்டும் ..
என அடம் பிடித்தால்...!


இந்தியா..வல்லரசாகும்
தமிழகம் நல்லரசாகும்...!

இப்போதய
நம் அடிப்படை உரிமை..
இரயில் வசதிதான்....

குரல் கொடுப்போமா...?

எல்லோரும்..?!?!?!?!?!!!