Friday, April 22, 2011

கனவுகள் மெய்ப்பட.. காத்து கொண்டே இருப்போம்...!

காத்திருப்பு....
சுகமானாதா..?
கொடுமையானதா...?

நம் எதிர்பார்ப்பு பலித்தால்...
...சுகம்..!
இல்லையென்றால்...
கொடுமை..!
இது
காலம் காலமாய் கடைப்பிடிக்க படும்...
கட்டாயம்...!

பிரசவ காத்திருப்புகளில்...
வலி கூட..வரமாகும்..!

திரையரங்கு காத்திருப்புகளில்....
நமக்கு முன்னே...
நிற்கும் அப்பாவி கூட..
பயங்கர தீவிரவாதி யாக..
உருமாறி போவான்...!

ரயில்நிலைய காத்திருப்புகளில்..
விளக்கை சுற்றும் விட்டில் பூச்சி கூட..
நம்மை சொந்தம் கொண்டாடும்...!

பொருளாதார காத்திருப்புகள்..
பிச்சைக்காரனின் யாசிப்பை கூட
நியாய படுத்த வலியுறுத்தும்..!

பெற்றவர்களுக்கான ..
பள்ளி குழந்தைகளின் காத்திருப்பு...
கண்ணீர் விழிகளில் ..
பாசத்தை மட்டும் சேமித்து வைக்கும்...!

முதியோர் இல்லங்களில்..
நொடிக்கு நூறுமுறை தெரியும்
ஏக்கம் நிறைந்த எதிர்பார்ப்பு....
சுருக்கப்பட்ட..
இருண்ட விழிகளில்...
பதிந்து போகும் பிம்பங்களில்..
வம்சங்கள்...
வழி மாறிய வரலாறு...
மட்டுமே நெடு தொடராய் தெரியும்..!

காதலில் மட்டுமே
காத்திருப்பு...பந்தம்..சொந்தம்..
என எல்லாவற்றையும்..
பலபடுத்தி வைக்கும்...!

தேர்வு (தேர்தல்)முடிவுக்கான காத்திருப்பு...
சித்திரவதையின்
உச்சக் கட்டம்..என்றாலும்..
வெற்றிக்கு...மட்டுமல்ல..
தோல்விக்கு கூட வாழ்த்துகளை...
பெற வைக்கும்...!

நம்பிக்கைகளை..
பல பரிணாமங்களில் நட்டு வைக்கும்...!

காத்திருப்போம்...

கனவுகள் மெய்ப்பட..
காத்து கொண்டே இருப்போம்...!

Tuesday, April 19, 2011

இனம் கண்டுகொள்ளுங்கள்...!

நம்மோடு சுற்றி திரியும்
துரோகிககளை
எப்படி தெரிந்து கொள்வது
என்பதைவிட..
எப்படி எதிர்க்கொள்வது என்பதுதான்
மிக முக்கியம்...!

வளரும் வரை
நம்மை வணங்குவது போல்
வேஷம் கட்டி..
கொஞ்சம் தலை நிமிர தொடங்கியவுடன்..
கால்களால் கூட
வணக்கம் வைப்பார்கள்...!

உங்களால்
ஒரு காரியம் ஆகும் வரை..
உங்களை பின் தொடர்வதையே
பெரும் பாக்கியம் என
புலம்பி தள்ளுவார்கள்...!
காரியம் நிறைவேறிய
அடுத்த நொடி வரை காத்திருக்காமல்..
பின்னால் இருந்து
முதுகில் குத்துவதையே..
குறிக்கோள் என தெளிவுபடுத்துவார்கள்...!

உங்களை புகழ்வது 
யாராக இருந்தாலும் 
அவர்களின் வம்சங்களையே
இழிவு படுத்த தொடங்கி விடுவார்கள்...!

உங்கள் பெருமைகளை முடிந்தளவு..
முடக்கி வைக்க 
முழு மூச்சாக 
முயன்று கொண்டே இருப்பார்கள்...!

உங்களை பாராட்ட
ஒரு போதும் நினைக்காமல்..
சின்ன தவறுகளை கூட..
ஊரெல்லாம் செய்தியாக்கி..
குரூரமான..சந்தோசத்தை வெளிப்படுத்துவார்கள்...!

இனியாவது
இவர்களை இனம் கண்டுகொள்ளுங்கள்...!

உங்கள்
மன்னிக்கும் தன்மையையும்..
மதிக்கும் தன்மையையும்..
பலப் படுத்தி பாருங்கள்....!

உங்கள் துரோகிககளின்...
செயல்கள்....
உங்களை
ஒரு அணுவும் பாதிக்காது...!

Tuesday, April 12, 2011

சரித்திரம் படைப்போம்...!

உண்மைகள்  ஊனமாக்கப்படும்போது ....
ஊமையாகி போகிறோம்...!

நிஜம் எது..?
பொய் எது...?
புரியாத பயணத்தில்...
புதிராகி கரையும்  சிநேகிதங்கள்...!

நம்பிக்கைகள் சிதைக்கபபடும்போது....
உணர்வுகளும் சிதைந்து போகின்றன....!

எதை நோக்கி பயணம்
என்ற நிலை மாறி..
எது பயணம் என
தடுமாறி 
தடம் மாறுகிறோம்..!

எதிர்பார்ப்புகள் நிராகரிக்கபபடும்போது...
ஏமாறுவது  மட்டுமல்ல...
எல்லாமே மாற தொடங்குகிறது...!

தனி மனித ஒழுக்கத்தின் இலக்கண மீறல் கூட...
ஊடகங்கள் வழியாக...
அரிசுவடி யாக ..
போதிக்கப்படுகிறது...!

தேவை எது என்றே..
தெரியாத தேடலில்...
தொலைந்து போகும்...
மனம் கொல்லும் மனிதன்...!

சுயம் மட்டுமே சுகம்...
என சுருங்கிபோகும்...
சாபம்  ஈட்டும் வாழ்க்கை...!

பொய்யான கனவு...!
பொறாமை நிறைந்த..வெளிப்பாடு...!
வீண் பெருமையால்...வீழும்....மனிதாபிமானம்....!
மரத்துப் போகும்..மனசாட்சி....!
சந்தோசம் கூட செயற்க்கையாய்...!
சோகம் கூட வேசமாய்....!

இப்படி தொடரும் நாம்....

இந்த நொடி முதல்
சபதம் எடுப்போம்...!
சரித்திரம்  படைப்போம்...!

மனிதனாய் மாறி 
புனிதப்படுவோம்...!

(வாக்களிப்போம்... !
மனிதனாய் மட்டுமல்ல...
இந்தியன் எனவும்
பெருமை கொள்வோம்...!)