Saturday, February 2, 2013

வெற்றிக்கு உயிர் தருவோம்...!


எப்போதும் தோற்று விடாமல்...
எதையும் இழக்காமல்..
யாரிடமும் அவமானப்படாமல்.....
யாராலும் உதாசீனம் செய்யப்படாமல்...
யாருடைய எதிர்ப்பும் இல்லாமல்...
யாருடைய துரோகத்தையும்...உணராமல்...
யாருடைய பொறாமையும் நம் மீது விழாமலும்...
யாருடைய வெறுப்பும்...உணராமல்.....
எந்த எதிர்ப்பும் நம்மோடு இல்லாமல்..
எந்த கேவலத்தையும்..தாங்காமல்...

வெற்றியை உணர்ந்து பாருங்கள்..

அதில் உயிரே இருக்காது...!

வெற்றி..நமக்கு திருப்தி தர வேண்டும் என்றால்...
நிறைய தேடல்களுக்கு
பின்னால் தான் கிடைக்க வேண்டும்...

போராடி பெற்றால் தான்
வெற்றியை இழந்து விடாமல்
தொடர்ந்து நம்மோடு பத்திரப்படுத்த...முடியும்.....!

தேடி..தேடி..அலைந்து
பெரும் வெற்றி...
வாழ்வின் அர்த்தத்தை விளக்கும்...!

உங்களை கண்மூடித்தனமாக எதிர்க்கும்
அத்தனை பெரும்
உங்கள் வெற்றியை
வெறுப்புடன் ஏற்று கொண்டவர்கள்...!

உங்களை கேவலமாய் விமர்சிப்பவர்கள்...
உங்கள் வெற்றியை
சகிக்க முடியாமல் ஒப்பு கொண்டவர்கள்....!

உங்களை தரக்குறைவாக விமர்சிப்பவர்கள்...
உங்கள் வெற்றியை
பொறாமையுடன் பொருந்தி கொண்டவர்கள்....!

வெற்றிய நோக்கி
பயணப்படும்போது போது...
இலக்கு மட்டுமே..
நம்மோடு வசப்படும்...
மற்றதெல்லாம்..
உதிர்ந்து போகும்..
உணருவோம்...
வெற்றிக்கு உயிர் தருவோம்...!

இந்தியா எனது தாய் நாடு...! இஸ்லாம் எனது வழிபாடு...!


இந்தியா எனது தாய் நாடு...!
இஸ்லாம் எனது வழிபாடு...!
நான் பிறப்பால் இஸ்லாமியன்...!

விஸ்வரூபம்...தடை..!
அதை தொடர்ந்து பரவி வரும் கருத்து மோதல்கள்...
குறித்த என் பதிவு...இது...!


இது.
உணர்வுகளின்..போராட்டம்....!
உறவுகளின் போராட்டம் அல்ல....!
காலம் காலமாய்..நமக்குள் ஒருபோதும்
வேறுபாடுகள்..வருவதில்லை...!
வந்தாலும் நிலைப்பதுமில்லை..!!
நீடிபப தும் இல்லை...!

நம்மை பிரித்து ஆள நினைக்கும்..
பிரிவினை சக்திகள்..
ஒவ்வொருமுறையும் படு தோல்வியை மட்டுமே சந்திக்கின்றன..!
இது அனுபவ உண்மை...!

நான் மட்டுமல்ல
என் இஸ்லாமிய சகோதரர்கள்....
மாற்று மாத சகோதரர்கள்..
பிறந்து கண் விழித்து பார்த்தது..
பிரசவம் பார்த்த
இந்து அல்லது பிற மதத்தை சார்ந்த
டாக்டர் தாயை தான்..!

அருவருப்பு பார்க்காமல்
நம்மை சுத்தப்படுத்தி
நமது உறவுகளிடம் ஒப்படைத்தது..
கிறிஸ்துவ அல்லது பிற மதத்தை சார்ந்த செவிலி சகோதரிதான்...!

இப்படி தொடங்குகிறது நமது பயணம்...
ஒவ்வொரு கால கட்டத்திலும்..
பிற மதத்தை சார்ந்தவர்களோடு..
சுவாசம் கலந்து வாழ்ந்து வருகிறோம்..!

நமது பலவீணம்..ஒன்றே ஒன்றுதான்...!
சம்பதப்பட்ட வர்கள் கலந்து பேசாமல்..
சம்பந்தமே இல்லாதவர்கள்..
பேசி பேசி பிரச்னை களை பெரிதாக்குவது தான்...!

கமலும்
இதனால் உணர்வுகள் பாதிகாபதுகிறது
என முறை இடும் சகோதரர்களும் ..
ஒரே ஒரு முறை
யாருடைய..தலையீடும்..
குறுக்கிடும் இல்லாமல் பேசி பார்க்கட்டும்
நிச்சயம் ஒரு தீர்வு பிறக்கும்....!

இது போன்ற பிரச்சனைகள்
உருவாக்கபபடுவது..
நம் உறவுகளை பலப்டுத்ததான்...
பலவீண படுத்த அல்ல..
என உளபூர்வமாக உறுதி எடுப்போம்..!
கை கோர்த்து எதிர்த்து நிற்போம்..!