Tuesday, July 3, 2012

உங்கள் உழைப்பும்,
திறமையும்,பெயரும்,
புகழும்,பெருமையும்....
பிறரால் திருடப்படுகிறதா....?

வருத்தப் படவேண்டாம்...!
அவர்கள் யார் யார் ..
என இனம்காணுங்கள்...!

உங்களோடு நெருங்கி..
உங்கள் மேல் அக்கறை கொள்வதாக..
பசப்பு காட்டி
வேசம் கூட்டி..
வாழ்வு பிச்சை எடுக்கும் ஒட்டுண்ணிகள்...!

அவர்களை ஒழிக்க நினைப்பதை விட ...
ஒதுங்கி கொள்ளுங்கள்...!

உங்கள் திறமையின் மேல் ...
அசயாத நம்பிக்கை வையுங்கள்..!
அது
எத்தனை எட்டப்பர்களால் ..
திருடப்பட்டா லும் ..
வற்றாத ஊற்று...!

உங்கள் உழைப்பை...
நயவஞ்சககமாய்..
சொந்தம் கொண்டாடிய ..
சுயம் இழந்த கயவர்களை ..
கண்டு கவலை வேண்டாம்..!

உங்களின் பெரிய தானம்
இது ...!
நிச்சயம்பல மடங்காய் உருமாறி
உங்களை
தலைவனாக்கும்..!

உங்கள் பெயரை கெடுப்பது மட்டுமே ..
தன் பிறப்பின் நோக்கமென..
திரும்பிய இடம் எல்லாம்..
உங்களை அவமதிக்கும் ..
அவர்களை ..
அலட்சிய படுதுங்கள்...!

உங்கள் பெயர்
வரலாற்றில் இடம் பிடிப்பதே..
உங்கள் நோக்கம்..
ஓரம் கட்டி..
ஓடி கொண்டே இருங்கள்...!

உங்கள் புகழ்...
நிச்சயம் இவர்களால்
ஏற்று கொள்ளவே முடியாது....!
ஏதாவது இல்லாத காரணத்தை காட்டி..
உங்களை மட்டம் தட்டி மகிழும் ..
இவர்கள் மானம் விற்ற ..
மாமா மன்னர்கள்..!

புகழ் உங்களை ..
தேடி வருவதை ...
யாராலும் தடுக்கவே முடியாது...!

உங்கள் பெருமைகளை ..
சிறுமை படுத்தவதை..
தனக்கு பெருமை என..
முடிந்த அளவு ..
உங்களை ..
மட்டம் தட்டும் ..
சுயம் விற்ற சுயநலக்காரர்கள்....!

ஒன்று மட்டும் நிச்சயம் ..
உங்கள் பெருமைகள் உண்மை..!
அதை அவமதிப்பது அவர்கள் மடமை...!

இவர்களை எப்படி ...
அடையாளம் காண்பது...?

யாரை சுற்றி ..
ஜால்ரா கூட்டம் உள்ளதோ...
அவர்கள்தான்...
இவர்கள்..!

ஒதுக்குங்கள் ....!

ஒதுங்குங்கள்...!

அவர்களே
அழிவை தேடிகொள்வார்கள்...!