Wednesday, February 26, 2014

காக்கவைக்க தொடங்கி விட்டேன்...!


நீ
காத்து
கொண்டிருக்கும்போதுதான்
என் அவசியம்
எனக்கே புரிகிறது...!

மணிக்கணக்காய்..
உன் மூச்சின்
அரவணைப்பில்...
நான் பேசிக்கொண்டிருந்தது...
உனக்கு
எப்படி
நினைவில்லாமல் போனது...!

விட்டு வந்த
நொடி முதல்..
நீ கேட்கும்
ஒற்றை சொல்..

"எப்போ வருவ..?"

அதுவும்
கொஞ்சம் கோபம்..
நிறைய தாபமுடன்...!

நெருங்கி இருக்கும் போது
நீ
உணர்த்திய
காதலை விட..
விலகி இருக்கும் போது
உருகும்
உன் காதல்
எனக்கு
விழிகளில் ஈரததையும்..
நெஞ்சத்தில்..ஏக்கத்தையும்...
நினைவுகளில்
உன்னை மட்டுமே..
செதுக்கி..போகிறது...!

என்
ஒவ்வொரு நொடியும்..
நீ மட்டுமே..

என்னை சுற்றி..
நடந்த நிகழ்வுகளை..
விசாரித்து பார்..!
பிரமித்து போவாய்..!

எதை தொடங்கினாலும்..
நீ வேண்டும்
என புலம்பியதும்...!

எதை முடித்தாலும்
நீ வேண்டும்
என துடித்ததும்...

எது நடந்தாலும்
நீ இருக்க வேண்டும்
என ஏங்கியதும்...!

உனக்கு
தெரியாமல் இருக்கலாம்...

ஆனால்
உன் மனது
உணர்ந்து
உருகி
அனுபவித்து கொண்டே
இருந்திருக்கும்..!

நேரம் ஆக..ஆக..
உன் கோபமும்..
ஏமாற்றமும்..
என் மேல்
பாய காத்திருந்தது..
எனக்கும் தெரியும்..!

நேரம் கடந்து வந்தேன்..
ஒரு நொடி பார்வை..
உன் சுகத்தை
எனக்கு
அனுபவிக்க வைத்தது..!

அருகில்
நெருங்கினாய்..
தண்டனைக்காக
எதிர்பார்த்து காத்திருந்தேன்..!

என் முகத்தை
நிமிர்த்தி
என் உதடுகளில்..
தண்டனை தந்தாய்..!

இப்போது
உன் பெண்மை
எனக்குள் கூசசமாய்!..

என் ஆண்மை
உன்னிடம் எகத்தளமாய்...!

அதனால் பார்..
உன்னிடம்
தண்டனை பெற..
உன்னை மீண்டும்

காக்கவைக்க
தொடங்கி விட்டேன்...!

Thursday, February 20, 2014

உங்களை முறியடிக்க.. யாராலும் முடியாது...!

நம்பிக்கை..
இந்த
ஒற்றை சொல்லில்
உயிர் உள்ளது
என்பதை விட ..
நம் உயிரே..
நமது நம்பிக்கை
என வாழ்க்கையை
தொடங்குங்கள்..
தொடருங்கள்..!

இரு வகை
நம்பிக்கை
எல்லோரும் அறிந்தது..!

நாம்
பிறர் மீது வைக்கும்
நம்பிக்கை..!

நம் மீது
பிறர் வைக்கும்
நம்பிக்கை..!

நாம் வைத்திருக்கும்
நம்பிக்கை பொய்த்து போனால்..
மனவருத்தம்
உயிர் போகும்
வலி கொடுக்கும்..!

நகரும் காலமே
மருந்தாகி
மறந்து போக...
செய்து விடும்..!

ஆனால்
பிறர்
நம் மீது
வைத்திருக்கும்
நம்பிக்கை..
கொஞ்சம் தடுமாறினால்...கூட..
மனவலி..
மரணம் தாண்டியும்
வதையாய் தொடரும்..!

நமது நம்பிக்கை..
நமது எதிர்பார்ப்பு மட்டுமே..
அப்படியே நடக்க வேண்டும்
என
கட்டாயம் கிடயாது..!

நம் மீது
வைத்த நம்பிக்கை..
முழுக்க..முழுக்க..
நம்மில் மட்டுமே பொறுப்பு..!

எண்ணியவர்களை
குற்றம் சொல்வதை விட..
உங்களின்
ஏதோ ஒரு செய்கை..
எப்போதோ..
எங்கேயோ
அவர்களுக்கு..
குறையாய்..
நிராகரிப்பாய்..
அவமதிப்பாய்..
அனுபவிக்க பட்டிருக்கும்..!

சமாதானம் செய்து
சரி செய்து...
நழுவுவதை விட...
முழு மனதோடு
மன்னிப்பு கேட்டுகொள்ளுங்கள்...!

மன்னிப்பு மட்டுமே
ஈடாகாது..
அவர்களின் நம்பிக்கை..
உங்கள் மேல்..
உறுதிப்படும் வரை..
அமைதியாய்..
தொடருங்கள்..!

அவர்களின்
எண்ணம் தவறு
என
ஒரு போதும் வாதாட தீர்கள்....
எண்ணங்களை
அவர்களுக்கு தந்ததே..
நீங்கள் தான் ...
இதை..
உளபூர்வமாக
ஒததுக்கொள்ளுங்கள்..!

ஆக..
நமது நம்பிக்கையை விட..
நம் மீது
பிறர் வைத்த..
வைக்கும் ..
வைக்க போகும் ..
நம்பிக்கை மட்டுமே..
நமக்கு
நிலையான
நிம்மதியான..
வாழ்வு தரும்..
என முடிவெடுங்கள்..

உங்களை
முறியடிக்க..
யாராலும் முடியாது...!

Thursday, February 13, 2014

எல்லா நாளும் காதலர் தினம் தான்...!




சப்தம் அடங்கிய
பின்னிரவில்..
மெல்லிய ஓசை
ஆழமாய்
பதிந்து போகிறது..!
அது
உன் சிரிப்பா..
சிணுங்கலா...
புரிந்தும்
புரியாமல் நான்..!

என்
கை போர்வைக்குள்
பலமுறை
நீ
அடங்கி இருந்தாலும்..
உன்
கண்ணீர் துடைத்து..
கன்னங்கள் தொட்ட
அந்த நொடி சுகம் ..
காலம் கடந்தும்..
நமக்குள் வாழ்ந்து
நம் காதலை
வாழவைத்து
கொண்டே இருக்கும்...!

நிஜத்தில்
என்
நெஞ்சொடு
நொடி நேரம் கூட
விட்டு விலகாத நீ..
என்னையே
தொட்டும்
தொடர்ந்தும்..
படர்ந்தும்
இணைந்தும்..
பிணைந்தும்..
அருகிலே
அணைத்து..
வாழ்ந்து கொண்டு
இருந்தாலும்..
புகைபடம் எடுத்த
அந்த நொடி பொழுதில்..
என் அருகில்
தொட்டும் தொடாமல்
நெருங்கி நின்று
நான் உனக்கானவன்..
என உறுதியுடன்
சிரித்த அந்த கணம்..
எனக்கு மட்டுமே புரியும்..!

உன்
செல்ல சீண்ட ல்கள்...
யாருமே இல்லாத
நேரங்களில்..
உன்..
எல்லை மீறும்..
தீண்டல்கள்..
எனக்கு கூட
நாணமும்
வெட்கமும் உண்டு
என
தெரியபடுத்தியது...!

நீ
என் அருகில்
நெருங்கும் போது
நானும் சிவக்கிறேன்...!

எதர்க்க்காக
தனியாக
ஒரு நாளில்
காதலர் தினத்தை
கொண்டாட வேண்டும்..?

காதலை புரியாதவர்களுக்கு
வேண்டுமானால்
காதலர் தினம் தேவை..!

உன்னையும்
என்னையும் போல்
காதலை புரிந்து கொண்டு..
காதல் புரிபவர்களுக்கு.. ..
வாழும் போதும்..
வாழ்ந்து முடிந்த போதும்..
எல்லா நாளும்

காதலர் தினம் தான்...!

Sunday, February 9, 2014

உங்கள் வசமே...!

சந்தேகம்...!

இந்த ஒரு சொல்..
அத்தனையையும்..
அழித்து
ஒழித்து விடும்..!

நம் மீது
யார்
சந்தேக பட்டாலும் சரி...!
நாம்
யார் மீதும்
சந்தேக பட்டாலும் சரி...!

அத்தனை
சந்தேகங்களும்
உறவுகளையும்..
உணர்வுகளையும்..
உள்ளங்களையும்..
உடைக்கத்தான்..
என்று
உறுதி படுத்தவும் முடியாது...!

சில சமயம்
நமக்குள் எழும்
சந்தேகம் பலம் தரும்..!
பலசமயம்
பலவீண படுத்திவிடும்...!

நமது
எண்ணங்களில்
நமக்கே
சந்தேகம் கூடாது...!
எதுவுமே..
கேவலபபட்டு விடும்..!

நமது
செயல்களில்
சந்தேகம்
அவசியமே இல்லை..!
விரக்திக்கு
வழி காட்டிடும்...!

நமது
உழைப்பில்
சந்தேகம்
உருவாக கூடாது...!
ஏக்கம் மட்டுமே
எங்கும் வெளிப்படும்...!

முயற்சியில் சந்தேகம்..
முதலிடம் பிடித்தால்...
இடிந்து போய்
முடிந்து போவோம்...!

நமது
வெற்றியில்
நமக்கு மட்டும்
சந்தேகம்
வரவே கூடாது..!
பெருமை மறந்து..
பொறாமை..
நம்மை சூழும்..!

காதலில்..
சந்தேகம்..
வாழ்க்கையையே
கொச்சை படுத்தி
கேவலமாக்கி
மீண்டும்
இணையவே முடியாத..
இழிவை தந்து விடும்...!

அன்பில்
சந்தேகம்
அவசியமாற்றது..
அர்த்தமில்லாத
பிரிவுக்கு
அடிபணிய வைத்து விடும்...!

பாசத்தில்
சந்தேகம் கூடாது..
பாவங்களை
வாழ்நாள் எல்லாம்
சுமக்க வைத்துவிடும்...!

கற்பில்
சந்தேகம் கூடாது...
களங்கமும்..
கொடூரமும்..
உங்களை மட்டுமல்ல..
உறவுகளையும்..
உணர்வுகளையும்...
பிணமாக்கிவிடும்...!

சந்தேகம்..
வந்தால்..
பூட்டியும் வைக்காதீர்கள்..
மறைத்து..
ஏமாற்றவும்
நினைக்காதீர்கள்..!
சரி செய்ய பாருங்கள்..
அல்லது..
ஒதுக்கி தள்ளுங்கள்..!

ஒளிமயமான
வாழ்க்கையின்
பெருமையும்
அருமையும்..
எப்போது
உங்கள் வசமே...!