Friday, June 24, 2011

போட்டியை .. உணர்த்து .... உயர்வோம்...!

போட்டிகள் நிறைந்த வாழ்க்கை
யாராலும்
விரும்ப படுவதே இல்லை...!

அதே சமயம்
போட்டிகள் இல்லை என்றால்..
வாழ்வதில் அர்த்தமே இல்லை...!

நம்மை நாமே..
உணர்ந்து கொள்வது ..
வெற்றி அடையும் போதுதான்...!

நம்மை நாமே ...
நொந்து கொள்வது ..
தோல்விகளை ..
தொடர்ந்து சந்திக்க ...
தொடங்கும் போதுதான்..!

இந்த இரண்டுக்குமே ..
முதல் காரணம் ..
போட்டிகள் தான்..!

போட்டிகளில் வென்றவர்களை விட ...
தோற்றவர்கள் தான் ...
அதிகம் தெரிந்தும் கொள்கிறார்கள்..
அதே சமயம் ...
புரிந்தும் கொள்கிறார்கள்...!

தோற்பது தெரிந்தே ...
துணிவாய் ..
போட்டியை சந்தித்தவன் ..
ஒருபோதும் ..
வாழ்க்கையில் ..
தோற்றதே இல்லை..
மனம் உடைந்ததும் இல்லை...!

வெற்றி எளிது ...
என தெரிந்தும் புரிந்தும்..
போட்டியை ...
தவிர்க்க முயலு பவன்..
எல்லாம் இருந்தும் ..
எதையும் ..
அனுபவிக்காமல் ..
தவிக்க தொடங்குகிறான்..!
வெற்றிகளை கூட ..
தோல்வியாய் அனுபவிக்கிறான்...!

போட்டி என்றால் ..
வெற்றி
தோல்வி மட்டுமே என்ற ..
அர்த்தம் ..
அபத்தமானது..
ஆபத்துமானது...!

போட்டி ...
நம்மை நமக்கே ...
அறிமுகபபடுத்தும் ...
இரண்டாம் தாய்மை..!

போட்டி ...
சுக துக்கங்களில் ..
தோள் கொடுக்கும் ..
துணை சேர்க்கும் துணைவி...!

போட்டி ..
நம்மை நாமே ...
தட்டி கொள்ளவும்..
மீறும்போது ..
தட்டி வைக்கவும் வரும் ..
தோழமை...!

மொத்தத்தில் ..
போட்டி ..
பொறாமைக்காக இல்லை ..
பெருமைக்காக...!

போட்டியை ..
உணர்த்து ....
உயர்வோம்...!

Saturday, June 18, 2011

உங்களால் மட்டுமே ..... இல்லை..!

தவிர்பது.,
நிராகரிப்பது..,
தாமதபடுத்துவது..,
ஒதுக்குவது...,
உதாசினபடுத்துவது..,
அவமான படுத்துவது...,
அங்கீகாரம் தர மறுப்பது..,
இப்படி இதெல்லாம்..
வேறு வேறாக அர்த்தம் தந்தாலும்...
பலன் ஒன்றுதான்..
அது -
மனம் உடைய செய்வதுதான்...!

உங்கள் சுய லாபங்கள்..
உங்களின் சுகம்...
சரிதான்..!
அது எத்தனை பேர்களுக்கு..
சோகம்..
சுமை..
சோதனை..
என எண்ணி பார்த்தது உண்டா..?

உங்களின் ..
இன்றய வெற்றி ..
ஈடு இணை இல்லாதது..
உண்மைதான்..!

ஆனால்-

உங்களால் ..
வலுக்கட்டாயமாக தோற்கடிக்க பட்டவர்களின்...
நேற்றைய...
இன்றய...
நாளைய நிலை ...?

உங்களின்உயர்வு ..
உங்களால் ..
பெருமை படுத்த படலாம்...!

அதற்கு தோள் கொடுத்தவர்கள் ..
இன்னமும் ..
கீழிருந்து ..
உங்களை ..
உயர்த்தி கொண்டே உள்ளார்கள்...!

அவர்களின்
சுகமான சுமைகளின் ...
பிரதிபலிப்பு ..
நீங்கள் ..
சொந்தம் கொண்டாடும் ..
சந்தோசங்களின் ...
சோகமான சுயரூபம்...!

உங்கள் ..
வளர்ச்சி ..
உங்களால் மட்டுமே ..
விதைக்க பட்டது அல்ல...!
முகம் தெரியாத ..
மனம் மட்டுமே ..
வெளிக்காட்டிய ...
பலரால் வளர்க்க படுவது...!

எதையும்..
யாரையும்..
தவிர்பதற்கு முன் ..
அவர்களோடு ...
வாழ்ந்த .
கடந்த காலத்தை ..
உணர்ந்து பாருங்கள் ..!
யாரையும் உதாசீனம் செய்ய
உங்கள் ..
மனசாட்சி இடம் தராது..!

நாளைய வாழ்க்கை
உறுதி தா முடியாதது..!

நேற்றைய வாழ்க்கை
நிஜத்தில் நிலைக்காதது..!

இன்றய வாழ்க்கை..
..........
...........

உங்களால் மட்டுமே ..... இல்லை..!

Sunday, June 12, 2011

நட்பின் .... இலக்கணம்...!

பல சமயம் ..
நண்பர்களை விட ...
எதிரிகள் ...
நம்மை ..
ஏற்று கொள்ளும் சம்பவம்....
உங்களுக்கும் நடந்திருக்கலாம்...!

உண்மையான நட்பு...
ஊமையாகத்தான் இருக்கும் ...
நம்மை ..
மனதளவில் ஊனமாக்காது...!

உங்கள் ..
முகத்தொடும் ..
முதுகொடும் ..
யார் நிஜமாய் ..
செயல்படுகிறார்கள் ..
என உணருங்கள்...
உண்மையான ...
நட்பின் இலக்கணம் ..
உங்களுக்கு ..
புரிய தொடங்கிவிடும்...!

உங்கள் வளர்ச்சி ...
உங்கள் ..
நட்பு வட்டாரத்தால்..
பெருமை படுத்த பட்டால்..
நம்பிக்கையான நண்பர்கள் ...
உங்களிடம் அதிகம் ...
என நம்பலாம்...!

தனிமையில் ...
உங்களை ..
உங்கள் ஆற்றலை...
விண்ணை தொடுமளவுக்கு...
உயர்த்தி..
சபையில் ...
உங்களை ..
மட்டம் தட்ட ...
மாபெரும் கூட்டத்தை ...
மறைமுகமாக உருவாக்கும்...
உங்கள் ..
நட்பை ...
இனம் கண்டு...
களை பிடுங்கி ...
உங்கள் ..
உணர்வுகளில் ...
வெற்றி உரமிட்டு கொள்ளுங்கள்...!

உங்கள் ...
உண்மை நண்பன்...
உங்கள் ...
தவறை திருத்த ..
ஆலோசனை வழிகள் ...
பல சொல்லி ..
உங்களை ..
உயர்வுக்கு வழி நடத்துவான்...!

ஒரு போதும்..
பிறரை தூண்டி விட்டு ...
பழி பேச துணை தர மாட்டான்...!


மறைந்திருந்து ..
உங்களை புகழ்வது போல் ...
இகழ்ந்து தள்ளும்...
நண்பர்களை விட...
நேராக நின்று ..
உங்களை ...
எதிர்க்கும் பகைவனை கூட ...
நட்பாய் மாற்றிக்கொள்ளுங்கள்...!

நட்பின் ....
இலக்கணம் சரிபடும்..!