Saturday, August 4, 2012


தடுமாற வைக்காத..ஆறுதல்..!

பிரதிப்பபலன் எதிர்பார்க்காத பற்று...!

உண்மை நிறைந்த ஊக்கம்..!

உறுதியான உறுதுணை..!

பலன் எதிர்பார்க்காத பலம்...1

தன்னை தவிர்த்து
உன்னை நேசிக்கும் பாசம்....!

எதொடும் பங்கு போடாத தனித்துவம்...!

உன் தோல்வியில்
உன்னை துவ ழ விடாமல் செய்த துணை...!

உன் வெற்றியில்
ஒளிந்து இருக்கும் அஸ்திவாரம்...!

இப்படி
எதை சொன்னாலும்..
எழுதினாலும்..
எண்ணினா லும்.....
பேசினாலும் ....

உன் நட்பிற்கு ..
இ ணை யா கு மா....?

என் மூச்சில்
உயிர் தந்த ...
என் தோழமை உள்ளங்களுக்கு...

என் உயிர் கலந்த ..
வந்தனங்கள்...!

நம் வாழ்வுக்கு ..
பிறகும்  ..
வாழட்டும்...
நம்    ந     ட்    பு...!