Monday, December 24, 2012

பெண்மை....!


பெண்மை....!
உச்சரிக்கும்போதும்..
உணரும் போதும் மென்மை
நம் உயிருக்குள்ளும் கலந்து விடுகிறது...!

தாய்மையில் மறைந்து இருக்கும் பெண்மை....!
எதற்குமே ஈடாகாது..!
பிரசவ வலியின் கண்ணீரில் கூட தேனை சுவைத்தவள்....!
விட்டு கொடுத்தே தன் விதியை முடித்தவள்...!

சகோதரிக்குள் ஒளிந்து இருக்கும் பெண்மை....!
அன்பை கற்று தந்தவள்....!
பாசத்தை புரிய வைத்தவள்...!
முதல் ரசிகை..முதல் எதிரியும் கூட....
ஆனால் ஆணை தோற்க விடாதாவள்...!

தோழிக்குள் அடங்கி இருக்கும் பெண்மை....!
தன்னம்பிக்கை தந்தவள்...!
அன்புக்கு புது இலக்கணம் வகுத்து தந்தவள்...!
வரம்புகளை புரிய வைத்தவள்...!
ஏக்கம் அழித்து...ஏற்றம் தந்தவள்...!

மனைவிக்குள் மிளிர்ந்திடும் பெண்மை...!
பாசம் துறந்து..நேசம் மறந்து..
ஆணில் கலந்த மற்றொரு உயிர்...!
ஆணின் வக்கிரங்களை..சகித்து..
ஆணை ....உலகிற்கு ....
ஆண் என நிரூபிததவள்...!
தாய்மையை உணர்த்தியவள்....!
ஆணை
எப்போதும் சகித்தவள்..
சுகித்தவள்...!

மகளுக்குள்...மின்னும் பெண்மை...!
மாற்றம் இல்லாதது...!
ஆணை அடக்கியும்..
கட்டுபடவும் கற்று தந்தது ..!
ஆணுக்கும் கண்ணீர் ஊற்றை ..
அறிமுகடுத்தி வைத்தவள்..!

பெண்மைக்குள் ...
இத்தனை உண்மைகள் இருக்கும்போது...
உணர்வுகள்..தொலைத்து..
உணர்ச்சிகளுக்கு அடிமை பட்டு..
மிருகங்களுக்கே கூசும் முறையற்ற செயல்களை..
இனியாவது
மனதுக்குள்ளும் விடாது

பெண்மைக்கு இணையானது ....
ஆண்மையும் தான்...
என நிருபிப்போம் ...!

Saturday, August 4, 2012


தடுமாற வைக்காத..ஆறுதல்..!

பிரதிப்பபலன் எதிர்பார்க்காத பற்று...!

உண்மை நிறைந்த ஊக்கம்..!

உறுதியான உறுதுணை..!

பலன் எதிர்பார்க்காத பலம்...1

தன்னை தவிர்த்து
உன்னை நேசிக்கும் பாசம்....!

எதொடும் பங்கு போடாத தனித்துவம்...!

உன் தோல்வியில்
உன்னை துவ ழ விடாமல் செய்த துணை...!

உன் வெற்றியில்
ஒளிந்து இருக்கும் அஸ்திவாரம்...!

இப்படி
எதை சொன்னாலும்..
எழுதினாலும்..
எண்ணினா லும்.....
பேசினாலும் ....

உன் நட்பிற்கு ..
இ ணை யா கு மா....?

என் மூச்சில்
உயிர் தந்த ...
என் தோழமை உள்ளங்களுக்கு...

என் உயிர் கலந்த ..
வந்தனங்கள்...!

நம் வாழ்வுக்கு ..
பிறகும்  ..
வாழட்டும்...
நம்    ந     ட்    பு...!

Tuesday, July 3, 2012

உங்கள் உழைப்பும்,
திறமையும்,பெயரும்,
புகழும்,பெருமையும்....
பிறரால் திருடப்படுகிறதா....?

வருத்தப் படவேண்டாம்...!
அவர்கள் யார் யார் ..
என இனம்காணுங்கள்...!

உங்களோடு நெருங்கி..
உங்கள் மேல் அக்கறை கொள்வதாக..
பசப்பு காட்டி
வேசம் கூட்டி..
வாழ்வு பிச்சை எடுக்கும் ஒட்டுண்ணிகள்...!

அவர்களை ஒழிக்க நினைப்பதை விட ...
ஒதுங்கி கொள்ளுங்கள்...!

உங்கள் திறமையின் மேல் ...
அசயாத நம்பிக்கை வையுங்கள்..!
அது
எத்தனை எட்டப்பர்களால் ..
திருடப்பட்டா லும் ..
வற்றாத ஊற்று...!

உங்கள் உழைப்பை...
நயவஞ்சககமாய்..
சொந்தம் கொண்டாடிய ..
சுயம் இழந்த கயவர்களை ..
கண்டு கவலை வேண்டாம்..!

உங்களின் பெரிய தானம்
இது ...!
நிச்சயம்பல மடங்காய் உருமாறி
உங்களை
தலைவனாக்கும்..!

உங்கள் பெயரை கெடுப்பது மட்டுமே ..
தன் பிறப்பின் நோக்கமென..
திரும்பிய இடம் எல்லாம்..
உங்களை அவமதிக்கும் ..
அவர்களை ..
அலட்சிய படுதுங்கள்...!

உங்கள் பெயர்
வரலாற்றில் இடம் பிடிப்பதே..
உங்கள் நோக்கம்..
ஓரம் கட்டி..
ஓடி கொண்டே இருங்கள்...!

உங்கள் புகழ்...
நிச்சயம் இவர்களால்
ஏற்று கொள்ளவே முடியாது....!
ஏதாவது இல்லாத காரணத்தை காட்டி..
உங்களை மட்டம் தட்டி மகிழும் ..
இவர்கள் மானம் விற்ற ..
மாமா மன்னர்கள்..!

புகழ் உங்களை ..
தேடி வருவதை ...
யாராலும் தடுக்கவே முடியாது...!

உங்கள் பெருமைகளை ..
சிறுமை படுத்தவதை..
தனக்கு பெருமை என..
முடிந்த அளவு ..
உங்களை ..
மட்டம் தட்டும் ..
சுயம் விற்ற சுயநலக்காரர்கள்....!

ஒன்று மட்டும் நிச்சயம் ..
உங்கள் பெருமைகள் உண்மை..!
அதை அவமதிப்பது அவர்கள் மடமை...!

இவர்களை எப்படி ...
அடையாளம் காண்பது...?

யாரை சுற்றி ..
ஜால்ரா கூட்டம் உள்ளதோ...
அவர்கள்தான்...
இவர்கள்..!

ஒதுக்குங்கள் ....!

ஒதுங்குங்கள்...!

அவர்களே
அழிவை தேடிகொள்வார்கள்...!

Friday, April 13, 2012

காயப்படுவது... காயப்படுத்துவது.. எதில் சுகம் அதிகம்...!

காயப்படுவது...
காயப்படுத்துவது..
எதில் சுகம் அதிகம்...!
இரண்டு பிரிவாக பிரிந்து
நம்மை நாமே
காயப்படுத்திக் கொள்ளவேண்டாம்...!

இரண்டையும் தவிர்பது
நம்மை முன்னேற்றத்திற்கு வழி நடத்தும்...!

காயம் படும் போதெல்லாம்..
கலங்குவது வாடிக்கை..
அதுதான் நமது எதிரீகளுக்கும் வேடிக்கை...!

காயம்..
மனதில் உருவாக்கபடும் போது
முடங்கி போகாமல்..
உங்களை நிலை நிறுத்த
எதிர்த்து நில்லுங்கள்..
எல்லாமே தவிடு பொடியாகும்...!

உங்களை
காயப்படுத்தும்..அவர்களை
பழி சொல்லாதீர்கள்..
உங்கள் வெற்றிக்கு
வழி காட்டிய உத்தமர்கள்
என உருவகப்படுத்தி பாருங்கள்..!

மனதில்
காயம் உண்டாகும் போது..
கோபத்தை தவிர்த்து..
திட்டம் வளருங்கள்..!

முடங்கி போகாமல் 
முறியடிக்க தொடங்குங்கள்...!

பொறாமை தவிர்த்து 
பெருமை படுங்கள்...!

விரக்தியை விரட்டி...
வெற்றிக்கு வழி விடுங்கள்...!

புலம்புவதை புறம் தள்ளி..
புது யுகம் படையுங்கள்..!

உங்கள் எதிரிகளுக்கு
காயபபடுத்த மட்டுமே தெரியும்..!

ஆனால்
காயப்படுவது....காயப்படுத்துவது.
இரண்டையும் தவிர்த்து
கை குலுக்க ...
உங்களுக்கு மட்டுமே தெரியும்..!

Tuesday, March 20, 2012

பிறப்பே பிழையானது..!

திறமைகளை..
திருடி..
பிழைப்பை நடத்தும் கூட்டம்....
வீழ்வதற்க்காக ..
வாழ்வார்கள்...!

உங்கள் திறமைகள்...
உங்களோடு சுற்றி திரியும்..
உறவாடி கெடுக்கும் கூட்டத்தால்
கொள்ளை அடிக்க படுகிறதா...?

கவலை படுவதை ஒதுக்கி வைத்து
காத்திருக்க தொடங்குங்கள்...!

உங்கள் கண்ணெதிரே
அவர்களின் தோல்விகளுக்கான
அஸ்திவாரம் பலப்படும்..!

எங்கு சென்றாலும்..
அவர்களின்
பிறப்பின் குணம் மாறாது..!

எப்படியும்
அங்கேயும்
தங்கள் திருட்டு தனத்தை
காலம் தாழ்த்தி தொடங்குவார்கள்..!

பிறகென்ன..
உங்கள் துரோகிகள்
எங்கு சென்றாலும்..
ஓரம் கட்டபபடுவார்கள்...!

ஒழுக்கமானவர்கள் ..
தங்கள்
சுய திறமையுடன் வாழ்வார்கள்...!

பிறரின் திறமைகளை
திருடி பிழைப்பவர்களின்
பிறப்பே பிழையானது..!

அவர்கள் மாற வேண்டும்
என எண்ணுவத்தை விட...
உங்கள் திறமைகளை
உறுதி படுத்தி கொள்ளுங்கள்...!
ஊக்கப்படுத்தி கொள்ளுங்கள்...!

உங்கள்
மகத்தான வெற்றியே
அவர்களை அழித்து விடும்...!!
 

இந்தியா..வல்லரசாகும் தமிழகம் நல்லரசாகும்...!

நல்லது
ஒன்றை செய்தால் நலம் ...
என தோன்றியது...!

எது நல்லது ..
என்றே புரியவில்லை...!

நல்லது ...
நமக்கு செய்தால் நலமா...?
பிறருக்கு செய்தால் நலமா...?
பெரும் குழப்பத்தில் ..
என்ன செய்வது என்பதே ..
மறந்து போனது.!

பொதுவாக தோன்றுவதை கடைப்பிடித்தால்...
எல்லோருக்கும் நலம் ..
என ஞானதொயம் வந்தது...!


எது பொதுவான ஒரு விஷயம்...?
எல்லோருக்கும் ஒத்துப் போகும் ...
பொதுவான ..
ஒரு விஷயம் என்றால்...
அது ...
நம் அடிப்படை உரிமைகளை ..
மீட்டெடுப்பது தான்....!

எது அடிப்படை உரிமை...
நீங்களே வரிசை படுதுங்கள்...!
மின்சாரம்...குடிநீர்..கல்வி..ஊதியம்...சாலை வசதி...
இப்படி பல இருந்தாலும்....
கவனிக்க மறந்த விஷயம் ...
இரயில் வசதிகள்...!

இந்தியாவில் ...
இல்லாத ஊர்களுக்கும் ..
இரயில் உண்டு..!

தமிழகத்தில் ...
கோட்டம் இருந்தும் ...
இரயில் இல்லை...!

ஒவ்வொரு தமிழனும் ...

ஒவ்வொரு ..
ஊருக்கும் ...
இரயில் வேண்டும் ..
என அடம் பிடித்தால்...!


இந்தியா..வல்லரசாகும்
தமிழகம் நல்லரசாகும்...!

இப்போதய
நம் அடிப்படை உரிமை..
இரயில் வசதிதான்....

குரல் கொடுப்போமா...?

எல்லோரும்..?!?!?!?!?!!!