Monday, February 28, 2011

ஏன்.... மாறிக்கொள்ள கூடாது...!

உங்கள் ஏமாற்றங்களை மட்டுமே ...
புலம்பி தீர்க்கும் நீங்கள்..
எப்போதாவாது..
நீங்கள் ஏமாற்றியததை நினைத்து ....
வருந்தியது உண்டா..?

இல்லை என்று சொன்னால்...
அதுவே ..
நீங்கள் ஏமாற்ற தொடங்குவதின்....
அரிசுவடி...!

சொன்ன சொல்லை..
நிறைவேற்ற முடியாமல் போகும்போது.. .
நீங்கள் செய்யும் சமாதானங்களில் ...
எத்தனை ஏமாற்ற வார்த்தைகள்...
எண்ணி பாருங்கள்..!

உங்களுக்கு தேவை என்று வரும்போது..
அதை அடைய ..
நீங்கள் ஏமாற்றிய விஷயங்கள்..
பட்டியல் போட்டு பாருங்கள்...
உங்களுக்கே அவமானமாய் புரியும்...!

உங்கள் நேசிப்பவர்களின் மனம் கவர .
நீங்கள் நடத்திய நாடகங்களில் ...
ஏமாற்றம் தராத செயல் ஏதாவது தென்படுகிறதா...?
உங்கள் பாசம்
பல வேசம் மாறும் ...!

உங்கள் மேல் ...
நம்பிக்கையை மற்றவர்கள் தரவேண்டும் ..
என்ற ஒரே நோக்ககத்தில் ...
நீங்கள் ஏமாற்ற ...
துணை தந்த ..
நிஜமாக்கப்பட்ட பொய்களை ..
கணக்கெடுத்து பாருங்கள்...!
தவறான விடைகளே கிடைக்கும்...!

உங்களை நிலை நிறுத்த..
நியாயப்படுத்த...
நீங்கள் ஏமாற்றியவர்களின் ...
வரிசையை பாருங்கள்..!
பரிதாப முகம்களுடன்..
பாசம் நிறைந்த....
உங்கள் பந்தங்களுக்கு..
நீங்கள் தந்த துரோகம்
உங்களை மட்டுமே சுடும்..!

நீங்கள் செய்யும் ஏமாற்றம்...
உங்களுக்கு ...
நொடிப்பொழுதின்..
நிறைவான நிம்மதி தரலாம்...
ஆனால்....

வம்சங்களை தாண்டியும்.....
அவப்பெயர்..
உங்கள் சந்ததியையே .
அவமதிப்பில் ....
அழித்து விடும்...!

ஏமாற்ற தொடங்குமுன்னே...
ஏன்....
மாறிக்கொள்ள கூடாது...!

Friday, February 25, 2011

உண்மையாக இருக்க முயற்சி எடுங்கள்...!

எல்லோரிடமும் உண்மையாக இருக்க வேண்டும்...!
முடியாது என மறுத்தால்...
உங்களை நேசிப்பவர்களிடம்..மட்டும்
உண்மையாக இருக்க முயற்சி எடுங்கள்...!

உங்களின் நேசம்,பாசம்,அன்பு,
தனித்து விளங்க வேண்டும்...!
பங்கு போடப்பட்டால்..
பாவம் அவர்கள்..நொறுங்கி போவார்கள்...!

உங்களை நேசிப்பவர்களை..
எந்த சூழ்நிலையிலும்
யாரிடமும்..விட்டு தந்து விடாதீர்கள்..!
விட்டுதரப்படுகிறோம்...
என மனதளவில் உணர்ந்தாலே..
அவர்கள் மனதளவில் மரணித்து போவார்கள்...!

உங்கள் நேசிப்பவர்களின் எதிர்பார்ப்புகள்..
அவர்கள் மூலமே வெளிப்பட வேண்டும்
என காத்திருக்காதீர்கள்..!
உங்களை எதிர்பார்த்து..
காத்திருந்து..காத்திருந்து...
அவர்களின் உள்ளம் காயப்பட்டு போகும்..!

ஒருபோதும்..
அவர்கள் உணர்வுகளை
உதாசீனம் செய்யாதீர்கள்...!
அதுவே
நீங்கள் அவர்களுக்கு சொல்லாலும்..செயலாலாலும்...
செய்யும் துரோகம்...!

அவர்களின் தன்மானம் தகர்க்கப்பட்டது என
உங்களிடம் புலம்பினால்..
அவர்களையே குற்றம் சாற்ற வேண்டாம்...
விரக்தி அடைந்து போவார்கள்...!

மற்றவர்களுக்காக
உங்களை நேசிப்பவர்களை...
தவிர்த்து விடாதீர்கள்...!
தனிமை சிறையில்
மீதி ஆயுளை முடித்து கொள்வார்கள்....!


மற்றவர்கள் உண்மையாக இருக்க வேண்டும்
என நினைக்கும் நீங்கள்...
முதலில்
உண்மையை கடைபிடிக்க தொடங்குங்கள் ...!

இன்று முதல்...!

Thursday, February 24, 2011

சுயபலத்தின் அஸ்திவாரம்..!

நினைப்பதும்..நடப்பதும்..
வேறு வேறாக இருந்தால்..
இனி சங்கடபடுவதை ...
ஓரம் தள்ளி ..
சந்தோசப்பட்டு பாருங்கள்...!

நினைப்பதெல்லாம்..
நடந்து கொண்டே இருந்தால் ..
வாழ்க்கை ..
அர்த்தமில்லாமல் அஸ்தமித்து போகும்....!

ஏமாற்றத்தின் அறிமுகம்தான் ....
புதியவைகளின் வெளிப்பாடு ...!

நிராகரிப்பின் மறுபக்கம் தான் ..
நமக்குள் விஸ்வரூபமேடுக்கும் ...
சுயபலத்தின் அஸ்திவாரம்..!

மறுக்கபடும் உதவிகளின் மூலம் ...
நம் தனித்துவத்தின் மறு பிறப்பை...
மகத்துவமாக்குவோம்...!

உதாசீனபடுத்தப்படும் போதெல்லாம்..
உழைப்பை உணர்ந்து..
உறுதிப்படுத்துவோம்...!

கிடைக்காததற்கெல்லாம் ...
இனி ஏக்கம் வேண்டாம்..
வானஎல்லை தாண்டும் முயற்சியின்...
ஏற்றம் விதைப்போம்..!

ஒதுக்கப்படும்போதும்..
ஒடுக்கபபடும்போதும்..
ஓடி ஒளிவதை தவிர்த்து..
துணிவை ..
வாழ்க்கையின் ஒளியாக்குவோம்..!

நினைப்பது நடப்பதைவிட..
நடந்ததை சந்தோசமாய்..
நினைத்தே வாழ்வோம்...!

Wednesday, February 23, 2011

இனி மாற்றி... மாறி பாருங்கள்..!

நம்மால் முடியும் என்பதை மட்டுமே
உணர்த்தினால் போதுமானது...!

பிறரால் முடியாது
என  சுட்டி காட்ட தேவையுமில்லை..
அவசியமுமில்லை...!

நமது முடக்கமும்..
தடைகளும்...
தோல்வியும்...வந்ததன் காரணம்
எது..யாரால்..எப்படி..
என அலசி..ஆராய்ந்து..
நம்மை நாமே சமாதானப்படுத்தி
பரிதாபபட்டு கொள்வது..
நம் வீழ்ச்சியின் பாதை...!

நமது முன்னேற்றததை தடுத்து கொண்டு இருப்பது...
இவைகள் தான் என வரிசைப்படுத்தி ...
புலம்பி தவிப்பதை...விட ....

இந்த நொடியில் இருந்து ...
நீங்கள் வரிசை படுத்தி...
அழகு பார்த்த அத்தனையையும் விட்டு  பாருங்கள்....!

உங்ககளாலும் ...
மிக... மிக.... மிக.... எளிதாக வெற்றியை ...
அனுபவிக்க முடியும்...!

உங்கள் வெற்றிக்கு காரணம் நீங்கள் இல்லை ..
என்பதை எப்படி
உங்களால் ஏற்று கொள்ளமுடிவதில்லையோ..

அதேபோல்..
உங்கள் தோல்விக்கு மட்டும் ...
ஏன் மற்றவர்களை..
காரணப்படுத்த வேண்டும்...?

கொஞ்சம்
இனி மாற்றி...
மாறி பாருங்கள்..!

உங்கள்
வெற்றியின் காரணம்
பலர் என
கை காட்டி பாருங்கள்...!

தொடரும்
உங்கள் வெற்றிக்கு ..
பலர் பாதுகாப்பை
தந்து கொண்டே இருப்பார்கள்..!

உங்கள் தோல்விக்கு காரணம்
நீங்கள் மட்டுமே
என உறுதியாக இருங்கள்...!

வெற்றியின் வழியில்
உங்கள் தோள் கொடுக்க
பலர் போட்டி போடுவார்கள்...!


Saturday, February 19, 2011

நீங்கள் நீங்கள் தான்...!

நான் நானாக இருக்க வேண்டும்...!
சொல்லிப்பார்ப்பததில்  சுகமில்லை...!
வாழ்ந்து பாருங்கள்
வலியின்...வகைகள் புரியும்...!

அன்பானவன்...என நீங்களே உறுதி கொள்ளவேண்டாம்...!
பிரதி பலன் இல்லா அன்பா உங்களது..?
மனசாட்சி உதறல் எடுத்து மறுத்து விடும்..!

அழகு உங்களுக்கு மட்டுமே அதிகம் என கற்பனை வேண்டாம்..!
எது அழகு..?எப்படி அழகு..!
பதிலில்லா கேள்விகள் பல உங்களிடம்...!

உழைப்பில் உங்கள் இணையாக வெளிப்படுத்த யாராலும் முடியாது
என இறுமாப்பு வேண்டாம்..!
சுயத்தேவையின் கட்டாயங்கள்...
கலக்காத உழைப்பை வரிசைப்படுதுங்கள்...
ஏதுமே இருக்காது..!

தியாகமும்..விட்டு கொடுப்பதுமே...உங்களின் சொத்து
என பொய் கணக்கு காட்ட வேண்டாம்...!
வேண்டாததை...கிடைக்காததை...எல்லாம்  விட்டு கொடுப்பது என....
யாராலும் நியாயப்படுத்த முடியாது...!

தான தர்மத்தில்...நீங்கள் கொடை வள்ளல் என பட்டம் சூடி கொள்ளாதீர்கள்...!
தனக்கு மிஞ்சியதுதான் உங்கள் தானமா...?
ஆம் என்றால் அதுவே உங்கள் அவமானம்....!

எதுவுமே கட்டாயமில்லாத....
எதையுமே எதிர்பார்க்காத...
தற்பெருமை இல்லாத..
தலை கணம் கொள்ளாத..

உங்களில்..இருக்கும் உங்களை
தேடி பிறப்பெடுங்கள்..

இனி...

சொல்லி பார்க்கவோ ...
உணரவோ தேவை இல்லை...

நீங்கள் நீங்கள் தான்...!

Sunday, February 13, 2011

காதல் மட்டுமே மெய்ப்படும்..!

காதல்....!

வரைமுறைகளில்
அடங்காத விதிமுறை...!

கருவில் உருவாகும்..
நம் முதல் அணு...!

சுகமாய் சுமக்கும் சோகம்...!
ஏக்கம்கூட இன்பமாய்...!

காதல் என்றால் என்ன என்று தெரியாதவர்கள்...
இதுவரை
பிறந்திருக்க வாய்ப்பே இல்லை...!
இனி
பிறப்பேடுக்க...சாத்தியமும் இல்லை...!

விழிகளில் 
இலக்கியம் கற்கும் மொழிகளும்...

அசைவுகள்
ஆயிரம் அர்த்தங்கள்...சொல்வதும்...

எதுவுமே
அழகாய் மாறிவிடுவதும்...

காதலித்து பாருங்கள்...புரியும்....!

காத்திருப்பின் கோபம் கூட
ஆறுதலை
தருவதும்..பெறுவதும்...
அருகிலிருந்தால்.....
தவிர்த்து..தவிப்பத்தும்...
விலகி இருந்தால்...
துடித்து.. ஏங்குவதும்...நெருங்குவதும்...
காதல் வசபபடுவத்தின்
நிஜங்கள்...!

ஓயாத இரைச்சல் கூட
இன்பமாய் இசைக்கும....

அமைதிகூட  ...
நெஞ்சை ஆழமாய் கிழிக்கும்....

எப்போது அழவேண்டும்..
ஏன் சிரிக்க வேண்டும்..
எதுவுமே தெரியாத
கட்டாய உணர்வுகளின் வாழ்க்கை...!

காதல் அனுபவத்தின்
வழி இல்லா வலிகள்...!

வெற்றி..தோல்வி..
எப்படி ..எது..ஏன்..என்று
தீர்மானிக்கப்பட முடியாத
வேடிக்கையான விபரீத விளயாட்டு...!

முதல் எது
முடிவு எது என கண்டுபிடிக்க முடியாத..கூடாத..
குழப்பம் இல்லாத சிக்கல்...!

காதல் உணர்த்தும் உன்னதம்..!

மொத்தத்தில்...

எதுவுமே...
பொய்த்து போகலாம்...!

காதல் மட்டுமே
மெய்ப்படும்..!


நேற்றைய..மிச்சங்கள்...!

புதியது...
என எதை எல்லாம் சொல்ல முடியும்...!

விரல் விட்டு எண்ணி வையுங்கள்..!

எண்ணிய விஷயங்களில்
எத்தனை..உங்களுக்கு புதிது...
எத்தனை உலகத்திற்கு புதிது...
வரிசை படுத்தி பாருங்கள்..
உண்மை புரியும்....!

புதியது என்பதெல்லாம்..
 உங்களுக்கு அதிசயம்..
 என தோன்றலாம்...!
மற்றவர்களுக்கு அது ..
சகஜம்தான்....!

உங்கள் மழலையின்..கொஞ்சல் மொழி..
உங்களுக்கு...
ஆயிரம் புதிய அர்த்தம் தரலாம்...!
உங்களை சார்ந்தவர்களும் ..
அதை ரசித்து தான் ஆக வேண்டும் ..
என...
கட்டாயப்படுத்த முடியாது..!

உங்களின் செயலை...
உங்கள்  தாய்...
புதுமையின் உயர்வாய் ஒப்பிடலாம்...!
மற்றவர்களுக்கு  ...
அது சராசரி வாழ்வியலின்
வழக்கமான ஒன்று..!

உங்கள் தோள் படர்ந்து..
நடை பயிலும் ...
உங்கள் துணை உங்களுக்கு  புது இதம் தரலாம்...!
மற்றவர்களின் பார்வையில்...
அது கொச்சை படுத்த படும்...!...!

கஷ்டம்..துக்கம்...சோதனை...
இதெல்லாமே...
நீங்கள் மட்டுமே...
புதிதாய் அனுபவிப்பதாய் சொந்தம் கொண்டாடுவது..
எவ்வளவு தவறு ....
என.. மற்றவர்களின் ...
அன்றாட.... வரலாறு புரட்டி பார்த்தால் புரியும்...!

அதேபோல்..

உங்கள் வெற்றி..சாதனை..தியாகம்....
என எதுவுமே புதியது ...
என நிரூபிக்க முடியாது...!
யாரோ..எங்கோ..எதையாவது..
வெற்றி..சாதனை..தியாகம்... 
என வழக்கப்படுத்தி கொண்டிருப்பார்கள்...!

நிறைவாக..

உங்களின் ...
இன்றைய..புதுமைகள்..
நேற்றைய..மிச்சங்கள்...!

நாளைய...புதுமைகள்...
நம்பிக்கையின் தேடல்கள்...!

Saturday, February 12, 2011

பண்பான....உலகம் உங்கள் வசம்...!

பரிமாற்றம்....!

இந்த சொல்
உண்மையில் ஒரு மந்திர சொல்..!

எதையும் ..எதற்கும்....
எப்படியும்...ஏன்...
என்று காரணம் கேட்காமல்...
ஏற்க வைக்கும்....
ஒரு ஆளுமை சொல்..!

பரிமாற்றம் ஒரு வழி பாதை அல்ல...!
பல்முனை
பல வழி கொண்ட
முடிவே இல்லாத  பாதை ...!

அதே போல்
உங்களை பிரதிபலிக்கும் சக்தியும்
பரிமாற்றம் எனபதில் அடங்கி விடும்...!

பரிமாறி கொள்வதை விட...
எதை பரிமாற வேண்டும்...
என்ற வரைமுறையும் வேண்டும்...!

அன்பை பரிமாறி பாருங்கள்.....
அமைதியான வாழ்க்கை உறுதி..!

அறிவை பரிமாறி பாருங்கள்....
பண்பான....உலகம் உங்கள் வசம்...!

உதவியை பரிமாறி பாருங்கள்...
நிம்மதியான சுகம் உங்களை சூழும்...!

மரியாதையை  பரிமாறி பாருங்கள்...
மானமுள்ள மதிப்பு...எப்போதும்...!

ஆனால்..

கோபம்..
வெறுப்பு..
துரோகம்..என இது போன்ற எதையும்
பரிமாறிக்கொள்ள இடம் தராதீர்கள்...!

இடம் தர எண்ணினாலே....

நம்மை அறியாமல்
நம் வாழ்க்கையின்
அத்தனையும் அழிந்து போகும்...!
அவபெயர்..மட்டுமே மிஞ்சும்..!

ஆக..

பரிமாற்றம்...

நம்மை தலை கவிழ செய்யாமல்...
தலைவனாக மாற்ற வேண்டும்..!

Thursday, February 10, 2011

விதியின் தத்துவமும்... ! மதியின் மகத்துவமும் ...!

எல்லாமே விதிப்படித்தான் நடக்கும்....!

விதியை மதியால் வெல்லலாம்...!

இந்த இரண்டுமே சரி.. தவறு..
என விவாதித்து...
நேரத்தை இழப்பதை விட..
இந்த இரண்டுக்குமே  அடிப்படை
எது..?   யார்..?   என்ன...?
என உங்களையே கேட்டு தெளிவு பெற்று பாருங்கள்..
உண்மை புலப்படும்..!

விதியை நம்புகிறவர்கள்....
தடைகளுக்கு அஞ்சி வாழ்வை நகர்த்த கூடாது..!

மதியை நம்புகிறவர்கள்....
தடைகளை உடைத்து வாழ்வுக்கு வழி தேட வேண்டும்..!

தோல்வி என்றால்..விதியை...நொந்து கொள்வதும்..
வெற்றி என்றால்..மதியை..புகழ்ந்து கொள்வதும் கூடாது...!

எல்லாமே விதி வசம் தான் என ஒதுங்கும் போது..
நம்மை அறியாமலே..நாம் புறக்கணிக்க படுகிறோம்....!

எல்லாமே மதியால் தான் என மற்றவர்கள் புரிந்து கொண்டால்..
உங்கள் வளர்ச்சி..புகழ்...எல்லாமே அரவணைக்கபடும்...!

விதியை குருட்டு தனமாக நம்புகிறவனின்....
சொல்.. செயல்..எல்லாமே நிலையாய் இருக்காது...!

மதியை உறுதியாய் நம்பி வெளிப்படுத்துப்பவனுக்கு..
முடக்கம்..தடை என எது வந்தாலும்
அது
அவனை நிலைகுலைய வைக்காது....!

விதி...என்பது.. .
உண்மை.. பொய்.. 
நடக்கும்... நடக்காது..
இருக்கும் ..இருக்காது..
என எதையுமே போட்டு குழம்பி கொள்வதை விட..
விதிபடித்தான் நடக்கிறது என ஓரம் தள்ளி
உங்கள் எண்ணங்கள் படி 
வாழ்ந்து பாருங்கள்..!

விதியே உங்கள் வசம் வந்து
உங்கள் கட்டளைக்கு கட்டுப்பட்டு அடி பணியும்...!

மதியால் தான் எல்லாமே நடந்தது
என ஆணவத்துடன்  அகங்காரத்துடன்..
எதையும் மட்டமாய் கருதுவதே
குறிக்கோள் என கொள்ளாமல்....
புரிந்து..
புரியவைக்க வைத்து தொடரும் ..
உங்கள் வாழ்க்கையில் ...
விதி என்று ...
ஏதாவது குறுக்கிட்டதா..?
என கேட்டுப்பா ருங்கள்..!

விதியின் தத்துவமும்...
மதியின் மகத்துவமும் .
தெளிவாகும்...!


விதியையும்..மதியையும்..
உங்கள் செயல்களுக்கு அடிமையாக்குங்கள்...!

இனி..

விதிக்கும் ..
மதிக்கும்..
உங்களால் தான் ....
வாழ்வு என மாறட்டும்...!

Wednesday, February 9, 2011

அடுத்தது என்ன..!?!

அடுத்தது என்ன..!?!

இந்த கேள்வியை...வெளிப்படுத்துவதில் பல விதம் உண்டு..!

நிறைய பணி சிரமத்துடன் முடித்து கொண்டிருக்கும் போது....
அடுத்தது என்ன..!?!
இது
நிர்பந்தததின் வெளிப்பாடு...!

எல்லா வேலைகள் முடித்தபின் ..எதிர்பார்க்கபடும்
அடுத்தது என்ன..!?!
இது
ஈடுபாட்டின் எடுத்து காட்டு..!

வெவ்வேறு விசயங்களை...புரிந்து கொண்டிருக்கும் போதே..வரும்..
அடுத்தது என்ன..!?!
இது
குழப்பததின் உச்சகட்டம்...!

கடன் சுமைகளால் மூழ்கும்போது வரும்..
அடுத்தது என்ன..!?!
இது
விரக்தியான வாழ்க்கை..!

நிராகரிக்கபடும் போது  தொடரும்...
அடுத்தது என்ன..!?!
இது
ஆதரவுக்கான தேடல்.....!

நிம்மதியை தொலைத்த பின்..
அடுத்தது என்ன..!?!
இது
போலி நிறைந்த வாழ்க்கை..!

காதலில்..
அடுத்தது என்ன..!?!
இது
சுகம்.. சோகம்.. இணைந்த பரவசம்..!

வெறுப்பின் வெளிப்பாடு..
அடுத்தது என்ன..!?!
இது
உறுதியாகும் பகைமை...!

பொறாமையின் உச்சகட்டம்
அடுத்தது என்ன..!?!
இது...
வலம் வரும் கீழ்தரமான கருத்துகள்...!

இயலாமையின் தொடர் பாதிப்பு..
அடுத்தது என்ன..!?!
இது
வழி நடத்தும் தோல்வி...!

அன்பு..உதவி..உழைப்பு..நாணயம்..நம்பிக்கை...நேசம்..பாசம்..
அடுத்தது என்ன..!?!
இது
உண்மையான மனித தன்மை...!

அடுத்தது என்ன..!?!
எல்லோரும் போற்றி பின்பற்ற தூண்டும்..
வெற்றியான சுக வாழ்வு..!

Tuesday, February 8, 2011

"களை" எடுங்கள்..!

தொல்லை கொடுப்பதற்கென்றே...
சில ஜீவராசிகள்...
நம்மோடு வசிக்கும்...!

அவர்களை..
...அடையாளம்..கண்டு ..கொள்ள
சில விதிமுறைகள்...!

உங்கள்மேல்
அளவுக்கு அதிகம்
அக்கறை இருப்பது போல்
வேசம் கட்டுவார்கள்..!

கிரங்கி போய்..
அவர்களை...மனதில்..வைத்தால்.....
உங்கள் மதிப்பு
அவர்களால் மழுங்க வைக்க படும்..!

உங்கள் புகழை...
அவர்களால்..
ஜீரனித்து கொள்ள முடியாமல்...
இல்லாத குறைகளை...
அம்பல படுத்துவார்கள்..!

நீங்கள் அசிங்கப்படும்..
முன்..
அவர்களை
உங்கள் வாழ்க்கை பாதையில் இருந்து அப்புறபடுத்துங்கள்...!

மாபெரும் சபையில்
நீங்கள் மதிக்கப்படும் போதெல்லாம்...
மறைந்திருந்து...
உங்களை ஏளனப்படுத்துவார்கள்..!

அவர்களின்
முகத் திரை..கிழித்து..
உங்கள்முகவரியை..பத்திரபடுத்துங்கள்...!

காரணமே இல்லாமல்
உங்கள் கருத்துகளை
மிருகதனமாக..விமர்சிப்பார்கள்...!

அவர்களை
விட்டு விலகி பாருங்கள்..
வித்தியாசத்தை உணருவீர்கள்..!

உங்களை சுற்றி படர்ந்து...
உங்களை இடறி ..வீழ்த்துவார்கள்...
இடம்கொடுக்காமல்....
முன்னெச்சரிக்கையுடன் முறியடியுங்கள்..!

தனிமையில்....
மலையளவு ..பாராட்டி புகழுவார்கள்...!

மயங்காமல்...
மறைந்து அவர்களின் செயல்களை நோட்டமிடுங்கள்...
தெளிவாகும்..!

உங்களை சுற்றிய அவர்களை
"களை" எடுங்கள்..!

வெற்றியாய் வாழும் "கலை "
உங்களுக்கே வந்து விடும்..!

தவறுகளின் வெளிப்பாடு...!

தவறுககளில் இருந்து தான்
நிறைய கற்று கொள்ள முடியும்...!

தயங்கி..பயந்து..
ஒதுங்கி...ஓடுவதைவிட...
துணிந்து மேற்கொள்ளுங்கள்..!

தவறு ஏற்பட்டாலும்...
மறுமுறை
அது உங்கள் மூலமே சரி செய்ய படும்..!

தவறே இல்லாமல் போனால்...
புதிய கண்டுபிடிப்புகள்...
பிறந்திருக்க...வாய்ப்பே இல்லை..!

தெரியாமல்..
புரியாமல்....
அறியாமல்...
தவறை யார் செய்திருந்தாலும்..
அதை திருத்திக்கொள்ளும்..சக்தியும்
அவர்களிடமே உண்டு..!

பிறர் உதவி தேவையுமில்லை..
அவசியமும் இல்லை...!

தவறுகளின் அனுபவம்..
பக்குவத்தின்..பலம்...!

தவறுகளின் வெளிப்பாடு...
தன்னம்பிக்கையின் அறிமுகம்...!

தவறுகளின் பலன்....
தடை தகர்க்கும் துணிவு...!

தவறுகள் முடக்கம் அல்ல ..
முன்னேற்றம்..!

தவறுகள் தோல்வி அல்ல....
வெற்றியின் சரியான வழி...!

ஆனால்..

பிடிவாதத்தால்..
தொடரப்படும் தவறுகள்..
உங்கள் வேரறுக்கும்...
விஷ வேர்கள்...!

தவறும்..
புரிதலின் பயிற்சி
என தெளிவு பெறுவோம்....!

தவறுகள்
நமக்கு கற்று தரும் பாடம் 

அனுபவம்...!

அனுபவம்
நமக்கு கற்று தரும் பாடம் ..

நம் வெற்றிக்கு வழி ...!

Monday, February 7, 2011

வாழ்க்கையின் அஸ்திவாரங்கள்..!

கற்பனை..
கனவு....
இது இல்லாமல்
யார் வாழ்க்கையும் தொடராது...!

கற்பனையில்...
எதை வேண்டுமானாலும் 
எதிர்பார்க்கவும் கூடாது...!

கற்பனையில்....
கண்ட அனைத்தும்
நிஜ வாழ்க்கையில்..
நடக்கும் என்ற
எதிர்பார்ப்பும் கூடாது..!

நியாயமான...
அத்தனையும்..
உங்கள் கனவில்
வர வேண்டும்..!

அந்த கனவுகள் தான்
உங்கள் நிஜ வாழ்க்கையை
வழி நடத்தும்....!

கற்பனையும்..
கனவும்...
பொழுதுபோக்கென வீணாகமல்..
நம்மை வழிநடத்தும்
திசைக்காட்டியாக
மாறி விட வேண்டும்...!

கற்பனையும்..
கனவும் ..
உங்கள்
வாழ்க்கையின் அஸ்திவாரங்கள்..!

சரியாகவும்...
முறையாகவும்....
அதை அமைத்துகொள்வது...
உங்களை மட்டுமே சார்ந்தது..!

வெறும் கனவும்... ...
வீணான கற்பனையும்..
நம் வாழ்வின்
திசையையே மாற்றிவிடும்..!

நிஜத்தை மட்டுமே
கற்பனை செய்வோம்..!

நடப்பதை மட்டுமே
கனவாக்குவோம்...!

Sunday, February 6, 2011

அளவோடு வெளிப்படுத்துவோம்..!

பின் வாங்குதல்....
தோல்வியின் கடைசி படி...
என
சோர்ந்து போகாமல்..

வெற்றியின் முதல் படி..என
எதிர்கொள்ளுங்கள்...!

இயற்கையின் சீற்றங்களில்..
எதிர்த்து நிற்பதை விட
பின் வாங்குவதே பாதுகாப்பு...!

எதிரியின்
படை பலத்தை கண்டு பயந்து
பின் வாங்குவதை விட..

எதிர்ப்பதில் மனபலத்தை..
வெளிப்படுத்துவதே..
வீரத்தின்..அடையாளம்..!

பிறரின் சாதனைகளை 
ஏக்கதோடு...பாராட்டி...
அதை செயல்படுத்த 
துணிவில்லாமல் பின்வாங்குவதை விட....

சாதனைகளை  முறியடிக்கும் 
புது சரித்திரத்தை... உருவாக்கி ...
எல்லோரையும் பெருமையுடன்
நம் மேல் பார்வைகளை பதிக்க செய்வோம்...!

நம்மிடம்...
அளவிலாத சக்தி உண்டு...

அதை ...
அளவோடு வெளிப்படுத்துவோம்..!

முரண்பாடுகளில்
பின் வாங்குவோம்..!

முடியும் என்றால்....
முதலில் நிற்போம்..!

முடியாததை
காற்றுக்கொள்வோம்...!

தெரியாததை...
தேடி பெறுவோம்...!

புரியாததை...
தெரிந்து கொள்வோம்..!

திருப்தி அடையும் வரை
ஓய்வே வேண்டாம்..!

ஆக..

பின்வாங்குதலில்கூட
புத்திசாலித்தானத்தை
பயன்படுத்துவோம்...!

நாம் முன்னேறுவதை
பாராட்டுவதற்கு..
யாரும்..
பின்வாங்க மாட்டார்கள்....!

Friday, February 4, 2011

செயல்பட.. தாமதிக்காமல்..!

தள்ளிபோடப்படுவதும்...
தாமதப்படுத்துவதும்.....
சிலவற்றிற்கு..பொருந்தலாம்..!

பலவற்றிற்கு....சரிப்படாது...!
உங்கள் -
அன்றாட செயல்களில்
எதை தள்ளி போட்டீர்கள்..?
எதை தாமதப்படுததினீர்கள்...?
கணக்கெடுத்து பாருங்கள்...!

அதனால்
உண்டான விளைவுகளையும்...
நடுநிலையோடு அலசி பாருங்கள்...!
தெளிவு மட்டுமல்ல...
புது தெம்பும் உணரப்படும்...!

கோபத்தை தள்ளிப் போடலாம்...!
உதவியை தாமதப் படுத்த கூடாது...!

பொழுது போக்கிற்காக...
நேரம் ஒதுக்குவதை தள்ளி போடலாம்...!
நம்மிடம்
ஒப்படைக்கப்பட்ட பணியை முடிக்க தாமதப்படுத்த கூடாது..!

வேகத்தில் அவசரம் காட்டுவதை தள்ளி போடலாம்..!
உயிர் காக்கும் எந்த விஷயத்தையும்...
தாமதப்படுத்த கூடாது..!

அவசரமாய் சாப்பிடுவதை தள்ளிப் போடலாம்..!
பிறர் பசிபோக்க தாமதப்படுத்த  கூடாது...!

கடன் பிறரிடம் பெறுவதை தள்ளி போடலாம்...!
கடன் திரும்ப செலுத்துவதை தாமதப்படுத்த கூடாது...!

காதல் வயபபடுவதை தள்ளி போடலாம்...!
காதலை களங்கப்படுத்தாமல்...
கரம் பிடிக்க.. தாமதிக்க கூடாது...!

நாம் வேலைகளை
பிறர் வசம் ஒப்படைப்பதை தள்ளி போடலாம்..!
பிறரின் வேலைகளையும்
செய்து முடிக்க  தாமதப்படுத்த கூடாது...!

தவறுகளை..
தள்ளி போடலாம்.!
திருந்திக்கொள்வதில்
தாமதம் கூடாது...!

மொத்தத்தில்...
வேண்டாதை
புரிந்து தள்ளி போடுவோம்...!

அவசியங்களை அறிந்து..
செயல்பட..
தாமதிக்காமல்..
தலை நிமிர்வோம்...!

Thursday, February 3, 2011

நிம்மதியின் அஸ்திவாரங்கள்..!

சிலசமயம்...
மன்னிப்பே ...
தண்டனையாக மாறும்...!

பல சமயம்
மன்னிப்பே...
மறுப்பிறப்பை தரும்...!

தெரியாமல் செய்த தவறுக்கு ..
மன்னிப்பது
திருந்த தரும் வாய்ப்பு...!

திரும்ப திரும்ப செய்யும் தவறுக்கு..
தண்டனை தருவது... 
மட்டுமே மன்னிப்பு...!

தாயின் கர்ப்ப காலம்...
மறந்து....
முதியோர் இல்லத்தில் சேர்க்கும் பந்தத்திற்கு ..
தாய் தரும் மன்னிப்பு...
கண்ணீர் கலந்த வாழ்த்து...!

நேசம் மறந்து..
பாசம் மறந்து...
சகோதரத்துவத்தை....
சொத்து..சுகத்திற்காக ...
பங்கு போடுவது..
மன்னிக்க முடியாது...என்றாலும்...
விட்டு கொடுப்பதே
மாபெரும் மன்னிப்பு..!

மறுக்கபடும்... உதவி...!
மறக்கபடும்... ஊக்கம்..!
மறைக்கபடும்..  தியாகம்...!
துரத்தப்பபடும்..இரக்கம்..!
சுயநலம் தந்த... கொடூரம்..!
வருமானத்திற்க்காக இழக்கபடும் ....தன்மானம்..!
புகழ் வேண்டி புதைக்கபடும்... தோழமை...!
இல்லற சுகத்தை பங்கு போடும் ....ஆண்மை..!
தாய்மையை...மண்மூட...செய்யும்....  பெண்மை...!
புறம் பேச சொல்லும்.... பொறாமை..!
குற்றம் மறைக்கும் ..பொய்மை...!
ஓரம் கட்டபடும்...பிறர் பெருமை...!
ஓயாது புலம்ப படும்..தற்பெருமை...!

இதெல்லாம்..
மன்னிப்பே தர முடியாத
மாபாவங்கள்..!

தவிர்பது...
தடுப்பது..
நம் வருங்கால
நிம்மதியின் அஸ்திவாரங்கள்..!

மன்னிப்பு வேண்டுவது ..
மட்டும் அல்ல...

மன்னிப்பு மறுப்பதும்.....

உயிரற்ற வாழ்க்கைக்கு
வழி வகுக்கும்...!

Wednesday, February 2, 2011

மனம் உடந்து போன பின்பு தான்...!

உடைந்து போவது என்ற நிலை 
நம்மை முடித்து விடக்கூடாது...
தொடங்கி வைக்க வேண்டும்...!

எதிர்பார்ப்பு உடைந்து போனால்...
ஏமாற்றம் என்பதை விட...
புதிய மாற்றம் தர வழி
என தொடர வேண்டும்...!

உதவி இன்றி உடைந்து போனால்...
சிதைந்து போகாமல்....
சுயபலத்தை..
உணர்ந்து வெளிப்படுத்த முடியும்...!

ஆதரவு மறுத்து உடைந்து போனால்...
ஆடி போகாமல்...
ஆளுமை திறமையை புரிந்து
எதையும் ஆட்படுத்த முடியும்..!

பண.. பொருள் ஈட்டும் முயற்சி உடைந்து போனால்....
முடிந்து போகாமல்...
முடிவு வரை முயற்சிக்க வேண்டும்...!

காதலில் தோற்று உடைந்து போனால்...
கல்லறை புகாமல்...
காவியம் படைக்கும் கவிஞனாக
புது பிறப்பேடுக்க வேண்டும்...!

கற்றுக்கொள்வதில்..தடை வந்து உடைந்து போனால்...
பின் தங்கிடாமல்...
திறமைகள் தந்து
புது வழி படைக்க வேண்டும்..!

உடைந்து போவது தொடர்ந்தால்..
உறைந்து போகாமல்..
உங்களை உணர கிடைத்த
உன்னத வாய்ப்பு
என உயிர் வாழுங்கள்..!

ஏனென்றால்...

மனிதன்...

மனிதன் என மாறுகிறான்..

மனம் உடந்து போன பின்பு தான்...!

Tuesday, February 1, 2011

நம்மால் தான் தீர்மானிக்கபபடுகிறது...!

நம்மோடு பழகுபவர்களின் தன்மை
நம்மால் தான்
தீர்மானிக்கபபடுகிறது...!

இதை
...ஏற்றுகொள்பவர்கள்
சந்தோசமாய் படியுங்கள் தொடர்ந்து....!

மறுப்பவர்கள்...
பலமுறை ..படியுங்கள் ....
புரிந்து கொள்வீர்கள்...!

உதவி தேவை என்றால்....
எதிர்பார்ப்புடன் கேளுங்கள்...
நிர்பந்தம் கூடாது...!

ஆலோசனை அவசியப்பட்டால்....
அனுபவங்களை கேளுங்கள்....
அலட்சியம் கூடாது...!

பண,பொருள் தேவைக்கு....
நம்பிக்கையை உறுதியாக்கி கேளுங்கள்...
சமாதானம் ..கூடாது...!

அன்பை வெளிப்படுத்த....
ஆதரவாய் இருங்கள்.....
சந்தேகம் வேண்டாம்...!

செய்யும் தொழிலில்
விசுவாசம் வெளிப்பட வேண்டும்...
ஒப்பிடுதல் கூடாது...!

முடிவெடுக்கும் முன்
பலவாறு யோசியுங்கள்....
செயல்படுத்தும் போது...
மறு பரிசீலனை...ஆகாது...!

முன்னேறும் போது...
எதிரே கவனம் தேவை...
பின்னோக்கி பார்த்து...
பிசகிட கூடாது....!

உங்கள் உயர்வுக்கும்..
வளர்ச்சிக்கும்...
நீங்கள் போதும்....
மற்றவர்களை நம்பி
தோற்பது கூடாது...!

ஆக,

உங்கள் முன் உள்ளவர்களை...
உருமாற்றும் சக்தி உங்களிடமே..
இதில்
உறுதியாய் வாழுங்கள்...!

உலகம் பற்றிய கவலை
உங்களை மட்டும்
ஒன்றுமே செய்யாது...!