Tuesday, March 20, 2012

இந்தியா..வல்லரசாகும் தமிழகம் நல்லரசாகும்...!

நல்லது
ஒன்றை செய்தால் நலம் ...
என தோன்றியது...!

எது நல்லது ..
என்றே புரியவில்லை...!

நல்லது ...
நமக்கு செய்தால் நலமா...?
பிறருக்கு செய்தால் நலமா...?
பெரும் குழப்பத்தில் ..
என்ன செய்வது என்பதே ..
மறந்து போனது.!

பொதுவாக தோன்றுவதை கடைப்பிடித்தால்...
எல்லோருக்கும் நலம் ..
என ஞானதொயம் வந்தது...!


எது பொதுவான ஒரு விஷயம்...?
எல்லோருக்கும் ஒத்துப் போகும் ...
பொதுவான ..
ஒரு விஷயம் என்றால்...
அது ...
நம் அடிப்படை உரிமைகளை ..
மீட்டெடுப்பது தான்....!

எது அடிப்படை உரிமை...
நீங்களே வரிசை படுதுங்கள்...!
மின்சாரம்...குடிநீர்..கல்வி..ஊதியம்...சாலை வசதி...
இப்படி பல இருந்தாலும்....
கவனிக்க மறந்த விஷயம் ...
இரயில் வசதிகள்...!

இந்தியாவில் ...
இல்லாத ஊர்களுக்கும் ..
இரயில் உண்டு..!

தமிழகத்தில் ...
கோட்டம் இருந்தும் ...
இரயில் இல்லை...!

ஒவ்வொரு தமிழனும் ...

ஒவ்வொரு ..
ஊருக்கும் ...
இரயில் வேண்டும் ..
என அடம் பிடித்தால்...!


இந்தியா..வல்லரசாகும்
தமிழகம் நல்லரசாகும்...!

இப்போதய
நம் அடிப்படை உரிமை..
இரயில் வசதிதான்....

குரல் கொடுப்போமா...?

எல்லோரும்..?!?!?!?!?!!!
 

No comments:

Post a Comment