Saturday, February 2, 2013

வெற்றிக்கு உயிர் தருவோம்...!


எப்போதும் தோற்று விடாமல்...
எதையும் இழக்காமல்..
யாரிடமும் அவமானப்படாமல்.....
யாராலும் உதாசீனம் செய்யப்படாமல்...
யாருடைய எதிர்ப்பும் இல்லாமல்...
யாருடைய துரோகத்தையும்...உணராமல்...
யாருடைய பொறாமையும் நம் மீது விழாமலும்...
யாருடைய வெறுப்பும்...உணராமல்.....
எந்த எதிர்ப்பும் நம்மோடு இல்லாமல்..
எந்த கேவலத்தையும்..தாங்காமல்...

வெற்றியை உணர்ந்து பாருங்கள்..

அதில் உயிரே இருக்காது...!

வெற்றி..நமக்கு திருப்தி தர வேண்டும் என்றால்...
நிறைய தேடல்களுக்கு
பின்னால் தான் கிடைக்க வேண்டும்...

போராடி பெற்றால் தான்
வெற்றியை இழந்து விடாமல்
தொடர்ந்து நம்மோடு பத்திரப்படுத்த...முடியும்.....!

தேடி..தேடி..அலைந்து
பெரும் வெற்றி...
வாழ்வின் அர்த்தத்தை விளக்கும்...!

உங்களை கண்மூடித்தனமாக எதிர்க்கும்
அத்தனை பெரும்
உங்கள் வெற்றியை
வெறுப்புடன் ஏற்று கொண்டவர்கள்...!

உங்களை கேவலமாய் விமர்சிப்பவர்கள்...
உங்கள் வெற்றியை
சகிக்க முடியாமல் ஒப்பு கொண்டவர்கள்....!

உங்களை தரக்குறைவாக விமர்சிப்பவர்கள்...
உங்கள் வெற்றியை
பொறாமையுடன் பொருந்தி கொண்டவர்கள்....!

வெற்றிய நோக்கி
பயணப்படும்போது போது...
இலக்கு மட்டுமே..
நம்மோடு வசப்படும்...
மற்றதெல்லாம்..
உதிர்ந்து போகும்..
உணருவோம்...
வெற்றிக்கு உயிர் தருவோம்...!

No comments:

Post a Comment