Saturday, June 18, 2011

உங்களால் மட்டுமே ..... இல்லை..!

தவிர்பது.,
நிராகரிப்பது..,
தாமதபடுத்துவது..,
ஒதுக்குவது...,
உதாசினபடுத்துவது..,
அவமான படுத்துவது...,
அங்கீகாரம் தர மறுப்பது..,
இப்படி இதெல்லாம்..
வேறு வேறாக அர்த்தம் தந்தாலும்...
பலன் ஒன்றுதான்..
அது -
மனம் உடைய செய்வதுதான்...!

உங்கள் சுய லாபங்கள்..
உங்களின் சுகம்...
சரிதான்..!
அது எத்தனை பேர்களுக்கு..
சோகம்..
சுமை..
சோதனை..
என எண்ணி பார்த்தது உண்டா..?

உங்களின் ..
இன்றய வெற்றி ..
ஈடு இணை இல்லாதது..
உண்மைதான்..!

ஆனால்-

உங்களால் ..
வலுக்கட்டாயமாக தோற்கடிக்க பட்டவர்களின்...
நேற்றைய...
இன்றய...
நாளைய நிலை ...?

உங்களின்உயர்வு ..
உங்களால் ..
பெருமை படுத்த படலாம்...!

அதற்கு தோள் கொடுத்தவர்கள் ..
இன்னமும் ..
கீழிருந்து ..
உங்களை ..
உயர்த்தி கொண்டே உள்ளார்கள்...!

அவர்களின்
சுகமான சுமைகளின் ...
பிரதிபலிப்பு ..
நீங்கள் ..
சொந்தம் கொண்டாடும் ..
சந்தோசங்களின் ...
சோகமான சுயரூபம்...!

உங்கள் ..
வளர்ச்சி ..
உங்களால் மட்டுமே ..
விதைக்க பட்டது அல்ல...!
முகம் தெரியாத ..
மனம் மட்டுமே ..
வெளிக்காட்டிய ...
பலரால் வளர்க்க படுவது...!

எதையும்..
யாரையும்..
தவிர்பதற்கு முன் ..
அவர்களோடு ...
வாழ்ந்த .
கடந்த காலத்தை ..
உணர்ந்து பாருங்கள் ..!
யாரையும் உதாசீனம் செய்ய
உங்கள் ..
மனசாட்சி இடம் தராது..!

நாளைய வாழ்க்கை
உறுதி தா முடியாதது..!

நேற்றைய வாழ்க்கை
நிஜத்தில் நிலைக்காதது..!

இன்றய வாழ்க்கை..
..........
...........

உங்களால் மட்டுமே ..... இல்லை..!

No comments:

Post a Comment