Wednesday, September 28, 2011

நமது எண்ணங்கள் ... பொய்த்து போகும் போது ...!

சில சமயம் ...
நமது எண்ணங்கள் ...
பொய்த்து போகும் போது ...
நாம் விதியை ....
குற்றம் சொல்கிறோம்...!

உங்கள் ...
எண்ணம் போல் ...
உங்களால் செயல் பட முடிகிறதா...?

நிச்சயமாக முடியாது...!

பிறகெப்படி...
உங்கள் எண்ணங்கள் படி ..
மற்றவர்களால் மாற முடியும்...!

நீங்கள் ..
எண்ணுவதெல்லாம் ..
ஈடேற வேண்டும் ..
என்ற கட்டாயம் கிடையாது...!

உங்கள் ..
எண்ணங்கள் படியே ..
எல்லாமே நடக்க வேண்டும் ...
என்ற நிர்பந்தம் கிடையாது...!

சூழ்நிலைகள்..!
அவரவர்களின் மனநிலைகள்...!
சுய தேவைகளின் அவசியங்கள்...!
எதிர்பார்ப்புக்ளின் ஏமாற்றங்கள்....!
நிறைவேறா நிஜங்களின் நிர்பந்தங்கள்...!
அங்கீகாரம் இல்லா உழைப்புகளின் வெளிப்பாடு...!
இப்படி பல உண்மைகள் ..!
உங்கள் ...
எண்ணங்களின் தோல்விக்கு ...
காரணமாய் அணிவகுக்கும்....!

நிஜத்தை...
நினைவு படுத்தி கொள்ளுங்கள்...!

உங்கள் எண்ணங்கள் சரி...!
ஆனால்....
அது நிறைவேற கட்டாயம் ஏதும் இல்லை...!

அதற்காக...
உங்கள் எண்ணங்களுக்கு ...
தடையும் போட வேண்டாம்...!

எண்ணங்களின் ...
முடிவை ...
ஏற்கும் மனநிலையை ...
நீங்கள் ...
வளர்த்து பாருங்கள்....!

வாழ்வு வளம் பெரும்....!

1 comment: