Monday, March 21, 2011

எண்ணங்கள்

நம் எண்ணங்களின் படி ..
வாழ்க்கை தொடர்ந்தால்
எவ்வளவு சுகமாக இருக்கும்....!
ஆனால்
சுவையாக இருக்குமா..?

நம் எண்ணங்கள் பொருளாதார ரீதியில்...
கற்பனையை விதைத்தால்..
நிம்மதி தொலைந்து போகும்...!

கட்டாயமாக்கப்பட்ட
எண்ணங்களின் வெளிபாட்டால்....
மனிதாபிமானம் மரத்து போகும்...!

காதல் வயப்படும் போது ..
எண்ணங்களின் மாற்றங்களை
தடுக்க முடியாது...
அனுபவிக்க மட்டுமே முடியும்...!

எண்ணங்கள் அப்படியே நிறைவேற தொடங்கினால்..
ஆணவமும்...சுய தம்பட்டமும்..
நம்மிடம் இருந்து வெளிப்படுவதை
மறுக்கவே முடியாது...!

எண்ணங்கள் நிறைவேறாமல் போனால்
எல்லாமே எதிரிகளாக மாறிவிடும் .....
கடவுள் உட்பட.....!

எண்ணங்களை நம்மோடு மட்டும்
நிறுத்திக்கொள்ளாமல்
மற்றவர்களுக்கும்
அதை கட்டாயமாக்கும்போதுதான்..
விரோதம்..பகைமை..எதிர்ப்பு
என
எல்லாமே முரண்பட்டு போகும்...!

எண்ணங்களை செதுக்கி கொள்ளுங்கள்..
சீர் படுத்தி பாருங்கள்..
நியாயப்படுத்தி பாருங்கள்...
நடுநிலைமையை கடைப்பிடியுங்கள்...
பிறகென்ன...
உங்கள் எண்ணங்கள் ...
வரலாற்று பதிவாக மாறுவதை ...
யாராலும் தடுக்க முடியாது...!

எண்ணங்களால் ஏமாற்றி..
ஏமாறுவதை மாற்றி...
எண்ணங்களையே மாற்ற தொடங்குவோம்...!

No comments:

Post a Comment