Saturday, March 26, 2011

சந்தேகம் எப்போதும் நிரந்தரமாவதில்லை..!

புரிந்து கொள்வதில் ஏற்படும் ..
தடுமாற்றமே..!

சந்தேகம்...!

சந்தேகம் எப்போதும் நிரந்தரமாவதில்லை..!
நொடி பொழுதின் கணிப்பின் தவறுதல்...
தலை எழுத்தையே பிழையாக்கிடும்..!

சில நேரம்
சந்தேகம் நேசத்தை பாசமாய் மற்றிவிடும்....!

பலநேரம் ..
பாசத்தில் விஷம் சேர்த்துவிடும்..!

உங்கள் சந்தேகம் முறையானது என ..
உங்கள் மனசாட்சி ஒப்புக்கொண்டால்...
உடனே மனம் திறந்து
உங்கள் உணர்வுகளை
அவர்களிடமே   வெளிப்படுதுங்கள்..!

உங்கள் அக்கறையையும்... பரிவையையும்..
உணர்வின் மூச்சாக மாற்றி ...
மாறிகொள்வார்கள்...!

ஒருபோதும்...
உங்கள் மனமே ஒப்புக்கொண்டாலும் ..
சந்தேகங்களை அவர்களை விட்டு ..
மற்றவர்களிடம் பகிர்ந்து..
ஆறுதல் தேட முயளாதீர்கள்..!

மரண வாழ்க்கையை அனுபவிக்க
செய்த பாவம்
உங்களை மட்டுமே எப்போதும் சார்ந்து விடும்..!

சந்தேகப்படுவது குற்றம் என்பது எப்படி சரியோ...
அதேபோல்...
சந்தேகபபடும் விசயங்களை..
நிவர்த்தி செய்யாமல் வேண்டுமென்றே..தொடர்வதும்
மாபெரும் குற்றம்..!பாவமும்கூட...!

புரிந்து கொள்ளுதலை..பலப்படுத்தினாலே...போதும்
சந்தேகம் பிறக்க வழியுமில்லை...!வாய்ப்புமில்லை...!

சந்தேகபபடுவதை...குற்றம் சொல்லாமல்..
புரிய வையுங்கள்...புது வாழ்க்கையின் அர்த்தமும் புரியும்...
நம்பிக்கையும் பிறக்கும்...!

புரியாவைத்து..புரிந்து கொண்டாலே போதும்...
சந்தேகம்....
சரி செய்து கொள்ளப்படும்...!

No comments:

Post a Comment