Tuesday, April 12, 2011

சரித்திரம் படைப்போம்...!

உண்மைகள்  ஊனமாக்கப்படும்போது ....
ஊமையாகி போகிறோம்...!

நிஜம் எது..?
பொய் எது...?
புரியாத பயணத்தில்...
புதிராகி கரையும்  சிநேகிதங்கள்...!

நம்பிக்கைகள் சிதைக்கபபடும்போது....
உணர்வுகளும் சிதைந்து போகின்றன....!

எதை நோக்கி பயணம்
என்ற நிலை மாறி..
எது பயணம் என
தடுமாறி 
தடம் மாறுகிறோம்..!

எதிர்பார்ப்புகள் நிராகரிக்கபபடும்போது...
ஏமாறுவது  மட்டுமல்ல...
எல்லாமே மாற தொடங்குகிறது...!

தனி மனித ஒழுக்கத்தின் இலக்கண மீறல் கூட...
ஊடகங்கள் வழியாக...
அரிசுவடி யாக ..
போதிக்கப்படுகிறது...!

தேவை எது என்றே..
தெரியாத தேடலில்...
தொலைந்து போகும்...
மனம் கொல்லும் மனிதன்...!

சுயம் மட்டுமே சுகம்...
என சுருங்கிபோகும்...
சாபம்  ஈட்டும் வாழ்க்கை...!

பொய்யான கனவு...!
பொறாமை நிறைந்த..வெளிப்பாடு...!
வீண் பெருமையால்...வீழும்....மனிதாபிமானம்....!
மரத்துப் போகும்..மனசாட்சி....!
சந்தோசம் கூட செயற்க்கையாய்...!
சோகம் கூட வேசமாய்....!

இப்படி தொடரும் நாம்....

இந்த நொடி முதல்
சபதம் எடுப்போம்...!
சரித்திரம்  படைப்போம்...!

மனிதனாய் மாறி 
புனிதப்படுவோம்...!

(வாக்களிப்போம்... !
மனிதனாய் மட்டுமல்ல...
இந்தியன் எனவும்
பெருமை கொள்வோம்...!)

No comments:

Post a Comment