Friday, April 22, 2011

கனவுகள் மெய்ப்பட.. காத்து கொண்டே இருப்போம்...!

காத்திருப்பு....
சுகமானாதா..?
கொடுமையானதா...?

நம் எதிர்பார்ப்பு பலித்தால்...
...சுகம்..!
இல்லையென்றால்...
கொடுமை..!
இது
காலம் காலமாய் கடைப்பிடிக்க படும்...
கட்டாயம்...!

பிரசவ காத்திருப்புகளில்...
வலி கூட..வரமாகும்..!

திரையரங்கு காத்திருப்புகளில்....
நமக்கு முன்னே...
நிற்கும் அப்பாவி கூட..
பயங்கர தீவிரவாதி யாக..
உருமாறி போவான்...!

ரயில்நிலைய காத்திருப்புகளில்..
விளக்கை சுற்றும் விட்டில் பூச்சி கூட..
நம்மை சொந்தம் கொண்டாடும்...!

பொருளாதார காத்திருப்புகள்..
பிச்சைக்காரனின் யாசிப்பை கூட
நியாய படுத்த வலியுறுத்தும்..!

பெற்றவர்களுக்கான ..
பள்ளி குழந்தைகளின் காத்திருப்பு...
கண்ணீர் விழிகளில் ..
பாசத்தை மட்டும் சேமித்து வைக்கும்...!

முதியோர் இல்லங்களில்..
நொடிக்கு நூறுமுறை தெரியும்
ஏக்கம் நிறைந்த எதிர்பார்ப்பு....
சுருக்கப்பட்ட..
இருண்ட விழிகளில்...
பதிந்து போகும் பிம்பங்களில்..
வம்சங்கள்...
வழி மாறிய வரலாறு...
மட்டுமே நெடு தொடராய் தெரியும்..!

காதலில் மட்டுமே
காத்திருப்பு...பந்தம்..சொந்தம்..
என எல்லாவற்றையும்..
பலபடுத்தி வைக்கும்...!

தேர்வு (தேர்தல்)முடிவுக்கான காத்திருப்பு...
சித்திரவதையின்
உச்சக் கட்டம்..என்றாலும்..
வெற்றிக்கு...மட்டுமல்ல..
தோல்விக்கு கூட வாழ்த்துகளை...
பெற வைக்கும்...!

நம்பிக்கைகளை..
பல பரிணாமங்களில் நட்டு வைக்கும்...!

காத்திருப்போம்...

கனவுகள் மெய்ப்பட..
காத்து கொண்டே இருப்போம்...!

No comments:

Post a Comment