Tuesday, April 19, 2011

இனம் கண்டுகொள்ளுங்கள்...!

நம்மோடு சுற்றி திரியும்
துரோகிககளை
எப்படி தெரிந்து கொள்வது
என்பதைவிட..
எப்படி எதிர்க்கொள்வது என்பதுதான்
மிக முக்கியம்...!

வளரும் வரை
நம்மை வணங்குவது போல்
வேஷம் கட்டி..
கொஞ்சம் தலை நிமிர தொடங்கியவுடன்..
கால்களால் கூட
வணக்கம் வைப்பார்கள்...!

உங்களால்
ஒரு காரியம் ஆகும் வரை..
உங்களை பின் தொடர்வதையே
பெரும் பாக்கியம் என
புலம்பி தள்ளுவார்கள்...!
காரியம் நிறைவேறிய
அடுத்த நொடி வரை காத்திருக்காமல்..
பின்னால் இருந்து
முதுகில் குத்துவதையே..
குறிக்கோள் என தெளிவுபடுத்துவார்கள்...!

உங்களை புகழ்வது 
யாராக இருந்தாலும் 
அவர்களின் வம்சங்களையே
இழிவு படுத்த தொடங்கி விடுவார்கள்...!

உங்கள் பெருமைகளை முடிந்தளவு..
முடக்கி வைக்க 
முழு மூச்சாக 
முயன்று கொண்டே இருப்பார்கள்...!

உங்களை பாராட்ட
ஒரு போதும் நினைக்காமல்..
சின்ன தவறுகளை கூட..
ஊரெல்லாம் செய்தியாக்கி..
குரூரமான..சந்தோசத்தை வெளிப்படுத்துவார்கள்...!

இனியாவது
இவர்களை இனம் கண்டுகொள்ளுங்கள்...!

உங்கள்
மன்னிக்கும் தன்மையையும்..
மதிக்கும் தன்மையையும்..
பலப் படுத்தி பாருங்கள்....!

உங்கள் துரோகிககளின்...
செயல்கள்....
உங்களை
ஒரு அணுவும் பாதிக்காது...!

No comments:

Post a Comment