Wednesday, November 6, 2013

புலம்புவத்தை புலம் தள்ளி.. புது யுகம் படைப்போம்..!






பல்வேறு பிரச்சனைகளால்
ஒரு நிமிடம் கூட
தாக்கு பிடிக்க முடியாமல்
தடுமாறுகிறீர்களா...!

ஒரு விஷயம்
மட்டும்
உங்களிடம் தடுமாறாமல்
இருந்தால் போதும்..
எல்லாமே
தவிடு பொடியாகும்..!

அந்த ஒரு விஷயம்
உங்கள்
மன உறுதி தான்..!

பிரச்னை வரக்கூடாது..
வந்து விட்டால்..
புலம்ப கூடாது..
எதிர்கொள்ள வேண்டும்..!

பணபிரச்னை..
முதன்மையானது
மட்டுமல்ல..
பொதுவானது கூட..
வரும் வரை
யாருமே
உணர்ந்திட முடியாதது..!

இருப்பதில்
திருப்தி
வளர்த்துக்கொள்ள வேண்டும்..
பணம் தேவை
மட்டுமல்ல
அவசியமில்லை..
என
முடிவெடுக்கும்போது..
பண பிரச்னை
பறந்து போகும்...!

மான பிரச்னை ..
உயிர்வரை
பரவி விடும்...!

இது வரை
யாருமே
உத்தமர் இல்லை
இனியும்
யாரும் வர போவதில்லை..
என
புரிந்து கொள்ளுங்கள்..
நீங்கள்
உங்களுக்கே
மகானாக மாறிவிடுவீர்கள்...
மான பிரச்னை
மறந்து போகும்..!

பாச பிரச்னை
பகிரபடும் போதுதான்
பூத கரமாக மாறும்...
அன்பு கூட
அருவறுப்பாய்
மாறிடும்...!
நாவடக்கம்...
மட்டுமே நலம் தரும்..!

பழி பேசாமல்..
பாராட்டுகள்
பகிர்ந்து கொண்டால்...
பாசம் மட்டுமல்ல
வாழ்வும் பலபடும்..!

பிரச்சனைகள்
எந்த ரூபத்தில்
வெளிப்பட்டாலும்...
முடங்குவதை விட..
முறியடி க்க தொடங்குவோம்...!

புலம்புவத்தை
புலம் தள்ளி..
புது யுகம்
படைப்போம்..!

No comments:

Post a Comment