Sunday, October 20, 2013

அலைபாயும் எண்ணம் .. கொடுமையான ஆபத்து...!







அலைபாயும் எண்ணம் ..
கொடுமையான ஆபத்து...!

அடிக்கடி மாறும் ...
எதுவுமே ..
அவலத்தை மட்டுமல்ல ...
நம்மை ..
அசிங்கமும் படுத்தி விடும்....!

நமது ...
சொல் செயல்...
மாறாமல் ...
இருக்க வேண்டும்...!
இதற்கான ..
அடிப்படை இலக்கணம்...
சொல்லுவதற்குமுன் ..
சாதக பாதகங்களை ...
அலசுவது அவசியம்..!

செயல்பட துவங்குமுன்..
ஆரம்பம் இப்படித்தான் ...
முடிவுகள் இது தான் ....
என -
வரையறுத்து கொள்ளுவது ..
மிக முக்கியம்...!

பிறகென்ன...

உங்களின் அணுகுமுறை ..
பிறரால் ...
அலட்சிய படுத்த பட்டாலும்...
தரக்குறைவாக ..
அலச பட்டாலும்...
உங்களுக்கு மட்டும் ..
திருப்தியை ...
தந்து கொண்டிருக்கும்...!

வரக்கூடிய முடிவுகளை..
உறுதி படுத்தி கொள்ளுங்கள்...
அதுவரை..
உங்களின்..
அலசல்கள்..
தீர்மாணங்கள்...
அணுகுமுறை..
உங்களுக்குள் ..
நீங்களே செய்யும்...
விவாதங்கள்...
எப்படி வேண்டுமானாலும்..
இருந்து விட்டு போகட்டும்...
ஆனால்..
முடிவெடுத்து ..
தொடங்கிய பிறகு..
அலை பாயும் மனத்தோடு..
உங்கள் முடிவுகளையே
அலச ஆரம்பித்தால்...
அது
கொடுமையான கேவலம்..!

முடிவுகளுக்கு பிறகு...
புது தொடக்கம்..
புத்துணர்வு..
புரிந்து அனுபவியுங்கள்...!

தொடங்கிய பின்...
தொடரும் ..
கடந்ததின் தடுமாற்றங்கள்..
வாழ்க்கையின் அஸ்தமனம்...!

அலை பாயும் ..
எண்ண அலைகளுக்கு...
உங்களிடம் ..
காரணம் இருக்கலாம்...
ஆனால் ..
நிம்மதி..
சந்தோசம்...
திருப்தி...
அன்பு...
அழிந்து போகும்...!

அலை பாயும் ...
மனதை அடக்கி ...
வாழ்வின் ...
அர்த்தத்தை ...
அனுபவிப்போம்...!


No comments:

Post a Comment