Sunday, December 15, 2013

நம் வாழ்க்கை ... நம் கையில்..! நம்பிக்கையில்..!


நம்பிக்கைகள்
நொறுங்கும்போது..
பொய்க்கும் போது..
உங்களை
பலபடுத்திக் கொள்ளுங்கள்..!

நீங்கள் வைத்த
நம்பிக்கை தவறில்லை
என
முழு மனத்தோடு உணருங்கள்..!

உங்கள்
நம்பிக்கைக்குரியவர்களுக்கு தான்
பலத்த பாதிப்பு..!
உங்களுக்கோ..
உங்களின் நம்பிக்கைக்கோ
இல்லவே இல்லை..!

காலங்கள் நகர நகர
உங்களுக்கே தெரியும்..
புரியும்..!

தொடர்ந்து
பொய்கள் மேல்
பொய்கள் அடுக்கி..
உங்களை ஏமாற்றியததை
மனத்துக்குள்
பெரிய சாதனையாய்
நினைத்திருந்தாலும்...
அவர்களுக்கு
அதுதான்
இனி
தொடர போகும்
வேதனை என்பதை
அவர்களே
அறிந்திருக்க மாட்டார்கள்..!


நடந்தது..
நடக்கப்போவது..
என
எல்லாவற்றையும்
உங்களிடம்
மறைத்து
பாசத்துடன் நடிப்பார்கள்...!

அவர்களின்
வேஷம் கலையும் போது..
விஷம்
அவர்களின்
வாழ்க்கையோடு கலந்து விடும்..!

திரும்ப
எங்காவது
அவர்களை
சந்திக்கும்போது கூட
யாரிடமாவது
ஏமாற்றி
நம்பிக்கை துரோகம்
செய்வதையே..
மூச்சாக கொண்டிருப்பார்கள்..!

உங்களுக்குள்
உறுதி எடுங்கள்..
நம்பிக்கைகள்
பொய்த்து போக விட கூடாது
உள்ளொன்று
புறமொன்று..
என
நடிக்க கூடாது..!

எண்ணங்களையும்..
செயல்களையும்
அலைபாய
விட கூடாது..!

தவறுகள் செய்திருக்கலாம்..
செய்து கொண்டே
இருக்க கூடாது..!

நம்பிக்கையை
யாரிடமும்
பலபடுத்துவதை..விட
உங்களுக்குள் பத்திரபடுதுங்கள்...!

நம் வாழ்க்கை ...
நம் கையில்..!
நம்பிக்கையில்..!

No comments:

Post a Comment