Thursday, January 23, 2014

சந்தேகம் சரியா..? சதியா..?

சந்தேகம்..
வருவது சரியா....!
இல்லை
வரக்கூடாதா தவறா..?

இப்படி ஒரு சந்தேகம்
உங்களுக்குள் வந்திருந்தால்...
என்ன
முடிவெடுததீர்கள்..?

வரிசை படுத்தி பாருங்கள்..!

சந்தேகம்
நம்பிக்கையை
பலபடூத்துகிறதா..?
பாழ்படுத்துகிறதா..?

சந்தேகம்..
உங்கள் உறவுகளை
உறுதிப்படுத்துகிறதா..?
உதறி தள்ள வைக்கிறதா..?

சந்தேகம்..
உங்களுக்கு
நிம்மதியை பெற்று தருகிறதா..?
நிம்மதியை கொன்று விடுகிறதா?

சந்தேகம்
சரியா..?
சதியா..?

இப்படி
அடுக்கி கொண்டே போகலாம்..!

சந்தேகபபடுவது
ஒரு சமயத்தில்
தவறில்லை
என்றாலும்..
சந்தேகப் பட்டு கொண்டே இருப்பது..
நம்மை மட்டுமல்ல..
நம் வாழ்க்கையையே..
பட்டு போக
செய்திடும்..!

நீங்கள் சந்தேகபபட
தொடங்கி இருந்தால்..
காலம் தாழ்த்தி விடாதீர்கள்..
உண்மையானது தான
என உணர்ந்து பாருங்கள்..
உங்களுக்கே புலபடும்..!

யாரிடம் சந்தேகமோ
அவரிடமே
மனம் விட்டு
கேட்டு விடுங்கள்..
சரியான பதில்
கிடைகாவிட்டாலும்..
உங்களுக்கு
திருப்தியும்..
அவர்களிடம்
தெளிவும் பிறந்து விடும்..!

உங்களை ..
சந்தேகபபட
நினைப்பவர்களை
குறை கூறி நிராகரித்து விடாதீர்கள்..!

அவர்களின்
சந்தேகம்
உண்மை என்றால்
சரி செய்ய பாருங்கள்..
இனி தொடராது
என
உங்கள் உறுதியை
அவர்களுக்கு
புரிய வையுங்கள்..!

தவறான சந்தேகம்
உங்கள் மேல்
என்றால்..
விட்டு தள்ளுங்கள்..!
விலகியது கூட
நல்லது
என விட்டு விடுங்கள்..!

ஆக.
சந்தேகம்
தவறில்லை..
சரியில்லை
என்றாலும் ....
சரி செய்ய பட்டாலும்..
சந்தோசமான
வாழ்க்கை
நிச்சயம்...!

No comments:

Post a Comment