Friday, January 31, 2014

ஒவ்வொரு நொடிகளும்.... உன்னை சுற்றியே கடந்து போகிறது...!




ஒவ்வொரு நொடிகளும்....
உன்னை சுற்றியே
கடந்து போகிறது...!

உன்னை
நான்
ஏற்று கொண்ட
அந்த நொடியில்..
உன் விழியில்
வழிந்த
ஒரு துளி கண்ணீர்..
என் தொடரும்
வாழ்க்கையின்
ஆதாரமானது..!

நொடியில் உணர்ந்த
உன் உதடுகள்...
காமம் தொடங்கி..
காதலை அனுபவித்து..
புனிதமானது..!

உன்னை விட்டு
விலகிய
அந்த நொடிப்பொழுது...
மீண்டும்
உன்னை
சேர்ந்த பிறகும் கூட..
வலித்து கொண்டே இருக்கிறது...!

ஒவ்வொரு முறையும்
உன்னை தரிசிக்கும்
அந்த
முதல் நொடியில்..
என்னை
நானே பிரசவிக்கிறேன்..!

என்னை தழுவி போகும்
அந்த
ஒரு நொடி
உன்
பார்வையின் பரிமாற்றம்..
நானும்
வாழ்கிறேன்
என
எனக்கு நிரூபித்தது...!

உன்
ஒரு நொடி
புன்னகை...
என்
சோகங்கள்
அத்தனையையும்
சுகமாய் மாற்றியது...!

உன் அருகில்
நான் வாழும்
ஒவ்வொரு நொடியும்...
என்னை
பெருமை படுத்தி
கொண்டே இருக்கிறது...!

நீ என்னவள்...
என்னுள் வசிப்பவள்...
என்னை
வாழ வைப்பவள்...!

நீ
எனக்கு கிடைத்த பிறகு
ஒவ்வொரு நொடியும்...
உனக்கே கட்டுபடுகின்றன....!

உடல்கள்..
கலக்கும்.
நிமிடங்களின்
சுகத்தை விட...
உள்ளங்கள் இணைந்த
அந்த
ஒரு நொடிப்பொழுது
சுகமே.....
என்
வாழ்க்கையானது...!!


No comments:

Post a Comment