Friday, May 6, 2011

களை ... எடுத்து கொள்ளுங்கள்..!

தலைகனமும்..
திமிரும்..
உதாசினமும்..
அலட்சியுமும்...
உழைத்து வெற்றி பெற்றவர்களிடம் இருப்பதில்லை..!

பணம்..புகழுக்குகாக...
அடிக்கடி நிலைமாறி..
செயல் மாறி...
நேர்மையாய் .....
வாழ்வது போல்
நடிப்பவர்களிடம் தான் அதிகமாய் இருக்கும்...!

அவர்களை ..
இனம் கண்டு ..
களை ...
எடுத்து கொள்ளுங்கள்..!

உங்கள் மனம் பத்திரப்படட்டும்...!

உருவாக்கியவர்கள்..
தோள் தந்து நடை பழக்கியவர்கள்..
என ...
யார் யார் எல்லாம்...
தன் வளர்ச்சிக்கு..உறுதுணை ...
என தொடர்ந்தார்களோ...
அவர்களை..
மட்டம் தட்டுவதை ....
தன் வாழ்க்கையின் ..
குறிக்கொளாக்கி கொள்வார்கள்...!

இவர்களால் சுயமாய் ..
எதையும் செய்ய முடியாது..
எதையாவது சார்ந்து மட்டுமே
செயல் பட முடியும் ..!
அதையே
தன் திறமை
என ...
மூச்சுக்கு முன்னூறு முறை
புலம்பி பெருமை பட்டு கொள்வார்கள்...!

தனியே வந்து செயல்பட்டு ,,,
தன் திறமையை  காட்ட துணிவு அற்றவர்கள்..!

அடிக்கடி தன் நிலையை மாற்றி ,,,,
பசையுள்ள பக்கம் போவதை தான் ,,,,,
லட்சியம் என மறைமுகமாக வெளிப்படுத்திவிடுவார்கள்..!

தன்னை ஏற்றி விட்டவர்களை..
மறவமால் திரும்பி பார்த்து
எச்சில் உமிழமல் வரமாட்டார்கள்....!

நம் வாழ்வொடு
இவர்கள் கட்டாயம் வேண்டும்...!

அப்போதுதான்  ...
உங்கள் வாழ்க்கையில்  ....
உங்கள் உழைப்பால் கிடைக்கும் ....
சின்ன வெற்றி கூட ....
இனிதது கொண்டே இருக்கும்...!

No comments:

Post a Comment