Wednesday, May 11, 2011

விமர்சனங்கள்..

விமர்சனங்கள்..
நம்முள்
எப்படி பிரதிபலிக்கின்றன ..
என்பதை பொறுத்தே ...
நம்மை நாமே ...
அடையாளம் கண்டு கொள்ள முடியும்...!

விமர்சனம்
நம்மை பட்டை தீட்டி கொள்ளவும்..
மெருக்கெற்றி கொள்ளவும்
என நினைத்தால்..
எப்படி பட்ட விமர்சனங்களும்
நம்முள்
எந்த ஒரு பாதிப்பையும் தராது...!

நமக்கு வந்த விமர்சனம்
நம்மால்
தரக்குறைவாக ..
இழிவாக விமர்சனம் செய்ய பட்டால்..
நீங்கள்
நிச்சயம் குற்றவாளி என்பது
உங்களுக்கு மட்டும்
கட்டாயம் புரிந்து விடும்..!

உங்கள் மனசாட்சி
உங்களை மன்னிக்காது..!

தலைக்கனம்..
கர்வம் நிறைந்தவர்களால் மட்டும் 
இதை
ஒருபோதும் ஏற்று கொள்ள முடியாது..!

விமர்சிப்பது என்பது ..
அவர்களின் சுதந்திரம்..
ஏற்றுக்கொள்வதும் ....
ஒதுக்கி தள்ளுவதும்..
உங்கள் விருப்பம்..

ஆனால்-

ஒரு போதும் ..
விமர்சனங்களை ...
விமர்சனம் செய்து ...
உங்கள் ...
குறுகிய மனதை ...
உலகத்திற்கு அடையாளம்..காட்டி விடாதீர்கள்...!

விமர்சனங்களை ...
தரக்குறைவாக ...
விமரீசித்தவர்கள் ...
வாழ்ந்தததை  விட ...
வீழ்ந்த வரலாறுகள் அதிகம்...!

விமர்சனங்களை ...
தலை வணங்கி ஏற்று ....
தலைவன் ஆவோம்..!

No comments:

Post a Comment