Monday, May 30, 2011

மன காயங்கள்... மாறாத வடுக்கள்..!

மன காயங்கள்...
மறைக்க..
மறக்க... முடியாத ..
மாறாத வடுக்கள்..!

எதிர்பார்க்கும் போது ...
ஏற்படுவது சிலசமயம்..!

எதிர்பாராமல் ...
உண்டாக்கபபடுவது..
பல சமயம்...!

முன் பின் தெரியாதவர்களின் உதாசீனம்..
ஒரு போதும் ..
உணரபபடுவதும் இல்லை..!

காயங்களை ..
உருவாக்குவதும் இல்லை.!

ஆனால்..

உயிரானவர்களின்....
உதட்டு சுளிப்பு கூட...
உலகமே இருள செய்து விடும்..
கூடவே ....
மனதை காயபபடுத்தும் ..
என்பதை விட ...
காயததையே மனதக்கி விடும்..!

யாரையும் ..
முன்னே புகழ்ந்து...
அவர்களின் பின்னால் ...
அவர்களின் ..
சின்ன...சின்ன குறைகளை மட்டுமே
உயர்த்தி அலசாதீர்கள்...!

காயம் ..
அவர்களின் மனதுக்கு தான் என்றாலும்...
உங்கள் எண்ணங்களில்
பொறாமை ...
புற்று நோயாய் பரவி இருப்பதை
உங்களால் உணரவே முடியாது...!

நம்பிக்கைகளில்
சந்தேகம் வேண்டாம்..
நரக வாழ்க்கை
நாளெல்லாம் தொடரும்...!

பிறரின் வெற்றியை
மனதால் கொண்டாடுங்கள்...

வெறித்தானமாக
அவர்களின் வெற்றியின் காரணங்கள்
என
உங்கள் பொறாமைகளை
கட்டவிழ்த்து விடாதீர்கள்...!

உங்கள் சொல் ...
செயல்  ...
நடவடிக்கை ...
அணுகுமுறை ....
என ...
எதிலும் ..
எப்போதும் .....
யாருடைய மனதையும் ....
காயப்படுத்திவிடாதீர்கள்.. !

மனக்காயங்கள் ...
ஒரு போதும் ..
மறைவதுமில்லை.....
குறைவதும் இல்லை..!

ஆறுவதுமில்லை..!

அதனால் ஏற்படும்
உங்கள் பாவங்கள்
மன்னிக்க படுவதுமில்லை..!

No comments:

Post a Comment