Thursday, May 26, 2011

உணர்வுகளும் பலப்படும்..!

உணர்வுகளை மதிப்பது ..
என்பது ...
உங்களை மட்டுமே ..
சார்ந்தது அல்ல..!

உங்கள் முன் ..
உள்ளவர்களும் ..
மனதால் ஒப்புக்கோள்வதே..!

இதை..
நீங்கள் உணர்ந்தால்...
உயர்ந்தவர்கள் வரிசையில் ..
உங்களுக்கென்றே ..
ஓர் நிரந்தர இடம் கிடைத்துவிடும்..!

முதலில் ..
உங்கள் உணர்வுகள்..
மட்டுமே ..
உண்மை என்றே ...
சுய மதிப்பீடு விட்டு வெளியெறுங்கள்...!

பிறரின் உணர்வுகளுக்கு ...
உங்கள் ..
அங்கீகாரம் வேண்டாம்.!
உங்கள் ..
ஆதரவும் வேண்டாம்..!
உங்கள் ..
பாச்சாதாபமும் வேண்டாம்..!
உங்கள் ..
கனிவு..பரிவு...பாசம்...ஆறுதல்..
இப்படி ...
எதுவுமே வேண்டாம்..!

அவரவர் உணர்வுகளை ..
அவரவர்கள் ..
உணர்ந்து கொள்ள ...
நீங்கள் ..
மவுனம் காப்பதே மகத்தானது...!

மொத்தத்தில் ..
அவரவர்கள் ....
உணர்வுகளை ...
அவரவர்களே ...
அனுபவித்து கொள்ளட்டும்...!

இதற்கு .
உங்கள் துணை இருந்தாலே போதும்...
வேறெதுவும்..
எப்போதும் அவசியமே இல்லை..!

பிறர் உணர்வுகளை...
அலசுவது..
குறைப்பட்டு கொள்வது..
சந்தேகபபடுவது....
பொய் புகழ்ச்சி..தருவது....
புறம் பேசுவது...
உதாசனம் செய்வது...
இப்படி ...
வரிசை படுத்திய
எதையும் தவிர்ப்பது...

பிறர் உணர்வுகள் ...
காயபபடுவதை தடுப்பது ...
மட்டும் இல்லாமல்..

உங்கள்
உணர்வுகளும் பலப்படும்..!

உணர்வுகளை
உண்மையாய்
உணர்ந்து
உயர்வோம்...!

No comments:

Post a Comment