Thursday, February 13, 2014

எல்லா நாளும் காதலர் தினம் தான்...!




சப்தம் அடங்கிய
பின்னிரவில்..
மெல்லிய ஓசை
ஆழமாய்
பதிந்து போகிறது..!
அது
உன் சிரிப்பா..
சிணுங்கலா...
புரிந்தும்
புரியாமல் நான்..!

என்
கை போர்வைக்குள்
பலமுறை
நீ
அடங்கி இருந்தாலும்..
உன்
கண்ணீர் துடைத்து..
கன்னங்கள் தொட்ட
அந்த நொடி சுகம் ..
காலம் கடந்தும்..
நமக்குள் வாழ்ந்து
நம் காதலை
வாழவைத்து
கொண்டே இருக்கும்...!

நிஜத்தில்
என்
நெஞ்சொடு
நொடி நேரம் கூட
விட்டு விலகாத நீ..
என்னையே
தொட்டும்
தொடர்ந்தும்..
படர்ந்தும்
இணைந்தும்..
பிணைந்தும்..
அருகிலே
அணைத்து..
வாழ்ந்து கொண்டு
இருந்தாலும்..
புகைபடம் எடுத்த
அந்த நொடி பொழுதில்..
என் அருகில்
தொட்டும் தொடாமல்
நெருங்கி நின்று
நான் உனக்கானவன்..
என உறுதியுடன்
சிரித்த அந்த கணம்..
எனக்கு மட்டுமே புரியும்..!

உன்
செல்ல சீண்ட ல்கள்...
யாருமே இல்லாத
நேரங்களில்..
உன்..
எல்லை மீறும்..
தீண்டல்கள்..
எனக்கு கூட
நாணமும்
வெட்கமும் உண்டு
என
தெரியபடுத்தியது...!

நீ
என் அருகில்
நெருங்கும் போது
நானும் சிவக்கிறேன்...!

எதர்க்க்காக
தனியாக
ஒரு நாளில்
காதலர் தினத்தை
கொண்டாட வேண்டும்..?

காதலை புரியாதவர்களுக்கு
வேண்டுமானால்
காதலர் தினம் தேவை..!

உன்னையும்
என்னையும் போல்
காதலை புரிந்து கொண்டு..
காதல் புரிபவர்களுக்கு.. ..
வாழும் போதும்..
வாழ்ந்து முடிந்த போதும்..
எல்லா நாளும்

காதலர் தினம் தான்...!

No comments:

Post a Comment