Thursday, February 20, 2014

உங்களை முறியடிக்க.. யாராலும் முடியாது...!

நம்பிக்கை..
இந்த
ஒற்றை சொல்லில்
உயிர் உள்ளது
என்பதை விட ..
நம் உயிரே..
நமது நம்பிக்கை
என வாழ்க்கையை
தொடங்குங்கள்..
தொடருங்கள்..!

இரு வகை
நம்பிக்கை
எல்லோரும் அறிந்தது..!

நாம்
பிறர் மீது வைக்கும்
நம்பிக்கை..!

நம் மீது
பிறர் வைக்கும்
நம்பிக்கை..!

நாம் வைத்திருக்கும்
நம்பிக்கை பொய்த்து போனால்..
மனவருத்தம்
உயிர் போகும்
வலி கொடுக்கும்..!

நகரும் காலமே
மருந்தாகி
மறந்து போக...
செய்து விடும்..!

ஆனால்
பிறர்
நம் மீது
வைத்திருக்கும்
நம்பிக்கை..
கொஞ்சம் தடுமாறினால்...கூட..
மனவலி..
மரணம் தாண்டியும்
வதையாய் தொடரும்..!

நமது நம்பிக்கை..
நமது எதிர்பார்ப்பு மட்டுமே..
அப்படியே நடக்க வேண்டும்
என
கட்டாயம் கிடயாது..!

நம் மீது
வைத்த நம்பிக்கை..
முழுக்க..முழுக்க..
நம்மில் மட்டுமே பொறுப்பு..!

எண்ணியவர்களை
குற்றம் சொல்வதை விட..
உங்களின்
ஏதோ ஒரு செய்கை..
எப்போதோ..
எங்கேயோ
அவர்களுக்கு..
குறையாய்..
நிராகரிப்பாய்..
அவமதிப்பாய்..
அனுபவிக்க பட்டிருக்கும்..!

சமாதானம் செய்து
சரி செய்து...
நழுவுவதை விட...
முழு மனதோடு
மன்னிப்பு கேட்டுகொள்ளுங்கள்...!

மன்னிப்பு மட்டுமே
ஈடாகாது..
அவர்களின் நம்பிக்கை..
உங்கள் மேல்..
உறுதிப்படும் வரை..
அமைதியாய்..
தொடருங்கள்..!

அவர்களின்
எண்ணம் தவறு
என
ஒரு போதும் வாதாட தீர்கள்....
எண்ணங்களை
அவர்களுக்கு தந்ததே..
நீங்கள் தான் ...
இதை..
உளபூர்வமாக
ஒததுக்கொள்ளுங்கள்..!

ஆக..
நமது நம்பிக்கையை விட..
நம் மீது
பிறர் வைத்த..
வைக்கும் ..
வைக்க போகும் ..
நம்பிக்கை மட்டுமே..
நமக்கு
நிலையான
நிம்மதியான..
வாழ்வு தரும்..
என முடிவெடுங்கள்..

உங்களை
முறியடிக்க..
யாராலும் முடியாது...!

No comments:

Post a Comment