Wednesday, February 26, 2014

காக்கவைக்க தொடங்கி விட்டேன்...!


நீ
காத்து
கொண்டிருக்கும்போதுதான்
என் அவசியம்
எனக்கே புரிகிறது...!

மணிக்கணக்காய்..
உன் மூச்சின்
அரவணைப்பில்...
நான் பேசிக்கொண்டிருந்தது...
உனக்கு
எப்படி
நினைவில்லாமல் போனது...!

விட்டு வந்த
நொடி முதல்..
நீ கேட்கும்
ஒற்றை சொல்..

"எப்போ வருவ..?"

அதுவும்
கொஞ்சம் கோபம்..
நிறைய தாபமுடன்...!

நெருங்கி இருக்கும் போது
நீ
உணர்த்திய
காதலை விட..
விலகி இருக்கும் போது
உருகும்
உன் காதல்
எனக்கு
விழிகளில் ஈரததையும்..
நெஞ்சத்தில்..ஏக்கத்தையும்...
நினைவுகளில்
உன்னை மட்டுமே..
செதுக்கி..போகிறது...!

என்
ஒவ்வொரு நொடியும்..
நீ மட்டுமே..

என்னை சுற்றி..
நடந்த நிகழ்வுகளை..
விசாரித்து பார்..!
பிரமித்து போவாய்..!

எதை தொடங்கினாலும்..
நீ வேண்டும்
என புலம்பியதும்...!

எதை முடித்தாலும்
நீ வேண்டும்
என துடித்ததும்...

எது நடந்தாலும்
நீ இருக்க வேண்டும்
என ஏங்கியதும்...!

உனக்கு
தெரியாமல் இருக்கலாம்...

ஆனால்
உன் மனது
உணர்ந்து
உருகி
அனுபவித்து கொண்டே
இருந்திருக்கும்..!

நேரம் ஆக..ஆக..
உன் கோபமும்..
ஏமாற்றமும்..
என் மேல்
பாய காத்திருந்தது..
எனக்கும் தெரியும்..!

நேரம் கடந்து வந்தேன்..
ஒரு நொடி பார்வை..
உன் சுகத்தை
எனக்கு
அனுபவிக்க வைத்தது..!

அருகில்
நெருங்கினாய்..
தண்டனைக்காக
எதிர்பார்த்து காத்திருந்தேன்..!

என் முகத்தை
நிமிர்த்தி
என் உதடுகளில்..
தண்டனை தந்தாய்..!

இப்போது
உன் பெண்மை
எனக்குள் கூசசமாய்!..

என் ஆண்மை
உன்னிடம் எகத்தளமாய்...!

அதனால் பார்..
உன்னிடம்
தண்டனை பெற..
உன்னை மீண்டும்

காக்கவைக்க
தொடங்கி விட்டேன்...!

No comments:

Post a Comment