Wednesday, March 12, 2014

இன்றைய நிஜம்.. இனிமை..!

நாளைய நிகழ்வுகளை..
கற்பனை செய்து..
கலங்கி...
கவலைப்பட்டு..
இன்றைய சந்தோசங்களை..
ஒதுக்கி..
ஓரம் கட்ட வேண்டாம்..!

நேற்றைய..சம்பவங்கள்..
உங்களுக்குள்
இன்று
என்ன உணர்வுகளை
உணர்த்துகின்றன...
ஏறக்குறைய
மறந்தும் இருக்கலாம்..
மரத்தும் போய் இருக்கலாம்...!

அதே நிலை தான்
நாளை
நமக்கு நடப்பதும்..!
ஏதோ ஏதோ
கற்பனைகள்..
அவநம்பிக்கைகள்..
மதிப்பீடுகள்..
உங்களுக்குள் வளர்த்து..
இன்றைய நிஜங்களை..
நிர்மூல படுததவேண்டாம்..!

சந்தோசம் கொண்ட உணர்வுகள்..
உங்களுக்குள் வரும்
அந்த நொடியை
உங்களை
ஆட்கொள்ள விட்டுவிடுங்கள்..!

வழி மாற்றி..
திசை மாற்றி..
நாளைய கற்பனைகளை..
நேற்றைய..கழிவுகளை..
கலக்க விட்டு...
இன்றைய..
மகிழ்வுகளை..
சிதைத்து
சின்னாபின்னமாக்கி
சீறழித்து விட வேண்டாம்..!

நேற்றும் இன்றும் நாளையும்..
நீங்கள் மட்டுமே
கடந்து வந்திருக்கலாம்..
உங்கள் உணர்வகளோ..
உள்ளமோ..
அனுபவித்து..
அதை
அந்தக்கணமே
அழித்து..
ஒழித்து..
புதைத்து..
மீண்டு
சந்தோசங்களை மட்டுமே
அனுபவிக்க
இன்றும்
மீண்டும் ஜனித்திருக்கலாம்..
அதை
கொன்று ..
நாளை
சுகபிரசவம் நடக்கும்
என சமாதானம்
செய்து கொள்ள வேண்டாம்..!
நேற்றை..
முழுவதுமாக
துடைத் தெரியுங்கள்...
நாளையை..
முளையிலேயே..
கிள்ளி எறியுங்கள்...

பிறகென்ன
இன்றைய நிஜம்..
இனிமையை..
இப்போது மட்டுமல்ல..
எப்போதும்..
உங்களுக்கு மட்டுமல்லாமல்
உங்களை சுற்றியும்..
ஊற்றாய்...
வாழ்ந்து கொண்டிருக்கும்..!

நீங்களும்
சுகமாய் வாழ்க்கை
தொடர்ந்து கொண்டிருப்பீர்கள்...!

No comments:

Post a Comment