Friday, March 14, 2014

என்னை உயிரோடு புதைத்து கொன்றுவிடு..!

அந்த
ஒரு நொடி முதல்..
என்னை
எனக்கே
மீட்டெடுக்க முடியவில்லை...!

வலிக்கும்
வார்த்தைகளை
வாழ்க்கையில்
பலமுறை
சந்தித்து
சங்கடம்
சந்தித்தது..
சகஜம்தான்..!

ஆனால்..

வார்த்தை தராத வலி..
உன்
நிராகரிப்பும்..
உதாசினமும்..
அலட்சியமும்..
அணுவை துளைத்து
ஒவ்வொரு அணுவிலும்..
அணு அணுவாய்
சித்திரவதை செய்து கொண்டே
என்
வாழ்நாள் முழுவதும்
தொடர்ந்து
துளைத்து கொண்டே இருக்கும்..!

இந்த நிஜம்
எனக்கு புதியது..
அறிமுகமி ல்லாதது...!

நடந்து வந்த
இனிமையான நேரங்களையும்..
கடந்து வந்த
சுகமான தருணங்களையும்...
அனுபவித்த
சுகங்கள் அத்தனையும்..
பேசிய..கழித்த
சந்தோசங்களையும்...
தொட்டு தீண்டி..
எல்லை மீறிய..
அதிசயங்களையும்..
நெருங்கியே இருந்த..
அருகாமையின் அனுபவங்களும்...
உன் செய்கையால்..
செயலிழந்து..
நொறுங்கி...
போனது
இன்னமும் சீராகவில்லை..!

எங்கும்..
எதிலும்..
எப்போதும்..
அந்த கணம் மட்டுமே
நெஞ்சில் கனமாகிறது.. !
ரணமாகிறது..!

வாழ்க்கையே
மரண வேதனை
அனுபவம்..அடைந்து
தொடர்கிறது..!

இந்த நிலை
உன்னால் மாறலாம்..!
மீண்டும்
நீ
நீயாக
எனக்கு
சுகம் தரலாம்..!

நீ தந்த
இந்த
கொடூர காயங்கள் கூட
ஆறி போகலாம்..!

ஆனால்

நினைவு படுத்தி..
என்ன
உயிரோடு
கொன்று போகும்..
நீ
நிரந்தரமாக்கிய
வடுக்களை
என்ன செய்ய முடியும் ?
என்ன செய்ய போகிறாய்..!

ஒன்றை மட்டும் செய்..!

மீண்டும்
என்னை வதைத்து
சந்தோசம் அடையும்
ஆசைவாந்தால்..
என்னை
உயிரோடு புதைத்து
கொன்றுவிடு..!

அப்புறம்
நீ
நினைப்பதை
நடத்தி கொள்..
கொல்...!

No comments:

Post a Comment