Friday, March 7, 2014

மகளிர் தின வாழ்த்துக்கள்...!

நினைத்து பார்க்கிறேன்..!
ஒவ்வொரு நொடியிலும்...
நீ மட்டுமே..
என் வாழ்க்கை...முழுவதும்..!

பிரசவித்த
முதல் கணம்..
என்
கண்ணீரை துடைத்தாய்...
உன் வலிகளை
மறந்து
என்னை மகிழ்வித்தாய்..
நீ
என் தாய்
என்றாலும்
நீ  பெண்..!


விட்டு கொடுத்தது..
உனக்கே
உரித்தான ஒன்று...
எனக்கு பிடிக்கும்..
அது உனக்கும்
நிரம்ப பிடித்திருந்தாலும்...
முழு மனதோடு
எனக்கு தரும்
அந்த ஒவ்வொன்றும்..
என்
தங்கையின் அடையாளம்
என்றாலும்
நீ பெண்...!

இளமைக்கே
உரித்தான..
குறும்புகள்..
வரம்பு மீறும்போதும்
பேசிய நேரங்களில்..
பார்வைகள்
எல்லைகள் மீறி
உன் உடலை மேய்ந்ததும்..
என்னை விட
உனக்கு நன்றாகவே
தெரியும்..புரியும்..!
எப்போது சமயம்
கிடைத்தாலும்
உன்னை சாய்க்கலாம்..
என்பதே
என் குறிக்கோள்...
ஆனாலும்
உன்
தோள் தந்து
என் தோல்விகளை
தடுத்த...
நீ தோழி 
என்றாலும்...
நீ பெண்...!

நடைமுறைக்கு
சாத்தியமில்லாத..
கண்டிப்புகள்...
செயல்முறைக்கு
ஓத்துவராத கட்டளைகள்...
தன்..சுகம் மட்டுமே
அவசியமாக்கும்..
ஆணதிக்க
அசிங்கங்கள்..!
பிற
ஆண்களிடம் பேச
ஏன்
பார்த்தாலும் கூட  ..
சந்தேகம்..வளர்த்து..
கற்பை
களங்கபடுத்தினாலும்..
உடம்பெல்லாம் ..
காயபபடுத்தினாலும்..
மனம் முழுவதும்
என்னையே..
வணங்கும்
நீ என் காதலி
என்றாலும்
நீ பெண்...!

உன் விருப்பு..
வெறுப்பு..
ஆசை..
எதிர்பார்ப்பு..
எல்லாவற்றையும் புதைத்து...
என் மனதோடு..
உன் மனதை
இணைத்து
புனிதமான உறவு
என
நீ வாழ்க்கை
தொடங்கினாலும்..
என் வக்கிரங்களையும்..
அசிங்கங்களையும்..
இறக்கி வைக்கும்
வடிகால்..நீ
என தெரிந்தும்..
முழு மனத்தோடு
என்னையே
வணங்கி வாழும்
நீ என் மனைவி
என்றாலும்..
நீ பெண்..!..

எத்தனை அவதாரம்
எத்தனை ஜன்மம்..
எத்தனை பிறவி
எடுத்தாலும்..
ஆணுக்கு அடங்கியவள்
பெண் என்ற
இலக்கணம்
உடைத்தெறியும் போது...

மகளிர் தினம்
கடமைக்காக கொண்டாடும்
நிலை மாறி
பெண்மையை ..
வழிபடும் தினம்..
என
வரலாறு படைக்கும்...!

அது வரை
இன்று
ஒரு நாளாவது..
பெண்மையை ..
உணர்ந்து..
மகளிர்
கொண்டாட
வாய்ப்பு தருவோம்..!!

மகளிர் தின வாழ்த்துக்கள்...!

No comments:

Post a Comment