Friday, March 14, 2014

எனது பெயர்!!!!

என்னை நானே
மதிப்பிட்டு கொண்டேன்... !
எனது சந்தோஷம்..
என்னுள் இருக்கும்
எதனால்?

முக வசீகரம் ,,,, !!

இல்லை இல்லை
நேற்றைய முகம்
இன்று இல்லை !
இன்றைய முகம்
நாளை இல்லை ... !

பழகி மகிழ்விக்கும்
எனது இயல்பா?...

அதுவும் இல்லை...
பல சமயம்
சோகத்தில் மூழ்குகிறேன்.. !
சில சமயம்
ஏக்கத்தில் ஏமாறுகிறேன்...!
மொத்தத்தில்
கோபத்தில்
எல்லாம் இழக்கிறேன்...!!

எது
எனக்கு சொந்தம்?...

எனது தாயா?
தாரம் வந்ததும்
தாய்
இரண்டாம் பட்சம்.....!!.

தாரமா?...
மகள் பிறந்தவுடன்
தாரம் கூட
அடுத்தது தான்..... !!!

எனது புகழ்...
எனது செல்வம்...
எனது அந்தஸ்து....
எனது பதவி....
எதுவுமே
எனக்கு சொந்தமானது இல்லை.... !!!

எனக்கென்ற
சொந்தம் எது?????
யோசித்தேன்.......... ,,,
யோசித்தேன்........ ,,,
யோசித்தேன்....... ,,,
என்னை
அழைக்கும் குரல்
கேட்டவுடன் தெளிந்தேன்..... !

பிறந்தது முதல்... ,,
வளர்ந்து
வாழும் வரை
மாறாதது
என்னை விட்டு
போகதது... ,,
எனக்கான அடையாளம்
எது
என தெரிந்தேன்... புரிந்தேன்… !

எனது பெயர்!!!! (SHAFI)

வாழும் போது மட்டும் அல்லாமல்
வாழ்த்து முடிந்த பிறகும்
நிலைத்து வாழ்வது
எனது பெயர் ஒன்று
மட்டுமே !!!!

No comments:

Post a Comment