Saturday, September 17, 2011

நம்பிக்கைகள் ...!

நம்பிக்கைகள் ...
பொய்த்து போகும் போது ....
உங்கள் நிலை என்ன...?

உங்களை உணர்ந்து கொள்கிறீர்களா..?

உடைந்து போகிறீர்களா..?

அல்லது -

கடந்து சென்று விடுகிறீர்களா..?

நம்பிக்கை என்பது ..
இயற்கையாய் உதிப்பது அல்ல..!
நம்மால் ..
உருவாக்கப் படுவதுதான்...!

இயலாது ..
என மனதில்..
தோன்றும் போதெல்லாம்..
.நம்பிக்கைகள்..
தகர்ந்து போகின்றன...!

முடியும் என ..
முடிவெடுக்கும் போது ....
நம்பிக்கைகள் ...
முழு வெற்றி தருகின்றன...!

நம்பிக்கைகள் ...
நடக்காது போனால்...
தலைவிதியை...
நொந்து நம்புகிறோம்...!

நிறைவான சூழ்நிலையில் ..
உங்கள்...
திருப்திகரமான வெற்றி....
உங்கள் மேல் ...
பிறர் கொண்ட நம்பிக்கையை ..
உங்களுக்கே அறிமுகம் செய்கின்றன...!

எது நம்பிக்கை..?
இப்போது புரிந்திருக்கும்...!

உங்கள் ...
எண்ணம்..எதிர்பார்பு..செயல்..
இந்த கலவையின் பரிணாமம்..
நம்பிக்கை..!

நீங்கள் ..
உருவாக்கிய படைப்பு ...
நம்பிக்கை..!

உங்களால் நம்பிக்கை ...
உருவாகும் போதே ..
அதில் ..
வெற்றி.. தோல்வியை படைப்பதும் நீங்கள்தான்..!

உங்களை நீங்கள் ...
நம்பினால்..
உங்கள் நம்பிக்கைகள் ...
அடுத்த பட்சம் தான்...!

No comments:

Post a Comment