Thursday, September 26, 2013

காத்திருப்பது சுகமானதுதான்..!

காத்திருப்பது..
சுகமா....!?சோகமா....?!
உணர்ந்து பாருங்கள்
உறவின் வலி அனுபவிக்கபடும்.!

வாசலில் அசையும்
வெறுமையின் நிழல் கூட
உள்ளத்தை சில்லிட வைக்கும்..!

நொடிகள் கூட
நீண்டு போய்
யுகமாய் மாறும்..!

ஒரு நொடி எதிர்பார்ப்பும்...
மறு நொடி ஏமாற்றமும்..
ஒரே மாதிரி
சுகம் தருவதும்
காத்திருப்பதில்தான்...!

காத்திருக்கும் நேரங்கள்
உண்மையில்
உறவுகளை பலபடுத்தும்
அஸ்திவாரம்..!

காத்திருக்கும் கணங்களில்
உருவான எண்ணங்கள்....
கானல் நீரா..?காற்று குமிழியா...
காத்திருப்பத்தின் காரணம்
நிறைவேறியதும்
கலைந்து போனது எப்படி..?

காத்திருக்கும்போது
உங்கள் துணை சேர்ந்த..
கடிகாரம் கூட
தட்டுத்தடுமாறி நேரம் காட்டும்..
அல்லது கூட்டும்..!

விழிகளின் இமைகள் கூட
இயங்க மறுக்கும்..!

சிரிப்பது கூட
செயல்பட தவிக்கும்...!

வற்றாத கண்ணீர்
துடைக்க துடைக்க
ஊற்றேடுக்கும்...!

விருப்பமானது எல்லாம்
வெறுப்பாய் தவிர்க்கபட்டு
ஒதுக்கபடும்..!

உயிர்  வாழ்வது கூட
பெரும் பாரமாய்
கஷ்டபடுத்தும்...!

எல்லாம் மறந்து போகும்...
மரத்து போகும்...
காத்திருப்பு நிறைவேறியதும்..
மீண்டும் காத்திருக்க
காத்திருக்க
மனம்
எண்ண தொடங்கிவிடும்..!

ஆக...
காத்திருப்பது
சுகமானதுதான்..!

<iframe allowfullscreen="" frameborder="0" height="270" src="//www.youtube.com/embed/UWv56Q0854Y" width="480"></iframe>

No comments:

Post a Comment