Monday, September 30, 2013

அன்பு கூட அவஸ்தையாகுமா.. !

அன்பு கூட
அவஸ்தையாகுமா.. !

அனுபவித்தவர்களுக்கும்..
அனுபவித்துகொண்டிருப்பவர்களுக்கம்...
தெரியும்..
புரியும்...!

நேசிப்பவர்களின் ..
அன்பை பெறும் வரை..
உங்களின் அவஸ்தை ..
அளவிட முடியாதது...!

அன்பை உறுதி செய்த பின்தான் ..
உண்மை அவஸ்தையே ..
தொடங்கும்..!
உங்களை தவிர ..
வேறு யாருடனும்..
பேசினாலும்..
சிரித்ாலும்
உங்கள்
உள்மனது..
அவஸ்தை பட ..
ஆரம்பித்துவிடும்..!

அன்பு ..
சுகத்தை மட்டுமே ..
நமக்கு தந்தால்..
அதில் ..
சுறுசுறுப்பு இருக்காது..!

அன்பு..
பாசம் மட்டுமே ..
பொழிந்தால்..
பரபரப்பே இருக்காது..!

அன்பு ..
நிம்மதியை மட்டுமே ..
தந்தால்..
நிரந்தரமாய் தொடராது...!

அன்பு ...
திருப்தியை மட்டுமே ..
கொடுத்தால் ..
திகட்டி போகும்..!

அன்பு எனும் ..
உணர்வின் ..
அடிப்படை இலக்கணமே ..
அது ..
அவஸ்தையை தந்து கொண்டே ..
இருக்க வேண்டும்...!

அதன் ...
அர்த்தம்
பல வழிகளிலும்..
வகைகளிலும்..
உயிருள்ளவரை
உங்களோடு
வாழ தொடங்கிவிடும் ..!

உங்கள் ..
உயிருக்கு....
வாழ ...
எதிர்பார்ப்புகளை ..
உருவாக்கி தந்து விடும்...!

அன்பு..
அக்கறை. மட்டுமல்ல..!

அன்பு..
புரிந்துகொள்ளல் மட்டுமல்ல...!

அன்பு ..
அரவணைப்பு மட்டுமல்ல...

அன்பு ...
விட்டுக்கோடுத்தல் மட்டுமல்ல..

அன்பு ..
அவஸதையும் அடங்கியது...!

அந்த ..
அவஸ்தைக்கு
இது வரை ..
எதுவுமே இணையாகாது..!
இனியும்
இணையாக
எதுவுமே கிடயாது..!

அன்பை ..
இனி ..
"அவஸ்தையுடன் "
அனுபவிப்போமா..!

No comments:

Post a Comment