Thursday, September 5, 2013

கருத்து வேறுபாடு.... ஆரம்ப புள்ளியிலேயே.. முடக்கபடவேண்டும்...!



கருத்து வேறுபாடு....
ஆரம்ப புள்ளியிலேயே..
முடக்கபடவேண்டும்...!
தொடர்ந்தால்
உறவுகளில்
முற்று புள்ளி நிரந்தரமாகிவிடும்...!

வழக்கம் போல்
இதிலும் சம்பந்த பட்டவர்கள்..
சந்தித்து..
வார்த்தைகளோடும்..விழிகளோடும்..
உளப் பூர்வமாக...
உணர்வுகளை விட்டு கொடுத்து...
ஓரிரு வார்த்தைகள் பரிமாறி கொண்டாலே போதும்...
உறவும் பலப்படும்..
உள்ளமும் வசப்படும்...!

புரிந்து கொள்வதிலும்..
புரிய வைப்பதிலும்...
புரிந்து கொண்டே ஆக வேண்டும்
என்ற கட்டாயததிலும்..
ஏற்படும் தடுமாற்றமே..
கருத்து வேறுப்பாட்டின் துவக்கம்...!

கருத்து வேறுபாடு
கவனிக்க படவேண்டிய விஷயம்..என்றாலும் ..
அலட்சிய படுத்தினால்...
அன்பின் அழிவு ஆரம்பிக்க தொடங்கும்...!

மனம் விட்டு பேசுவோம்..
விட்டு கொடுத்து விளக்குவோம்..!
ஏற்று கொண்டு..
நியாய படுத்து வோம்...!

கருத்துகளில் வேறுபட்டாலும்..
வாழ்க்கையில் ஒன்று படு வோம்...!!!

உணர்வோம்...!
உயர்வோம்.....!!!!
-B M ஷபி-சேலம்

No comments:

Post a Comment