முடிவெடுக்க
தடுமாறுவது இயல்புதான்...!
அதர்க்காக
முடிவெடுப்பதை
தள்ளி போடுவது
தவறானது...!
வெற்றியோ
தோல்வியோ...
நம்மை கட்டுபடுத்தாது
என தெளிந்தால்..
தெரிந்தால்...
சட்டென்று முடிவெடுத்து
செயல் படுத்தியும் காட்டுவீர்கள்...!
வெற்றிதான் என
உறுதியுடன் இருந்தால்
பக்கவிளைவுகள்
யோசிக்காமல்
முடிவெடுத்ததை
விட்டுதர மாட்டீர்கள்...!
தோல்விதான் என
லேசாக சந்தேகம்
பொறி தட்டினால் கூட...
சரியான
முடிவெடுததல் கூட
நிராகரிக்க பட்டுவிடும்..!
பயம் கலந்து
முடிவெடுத்தால்..
பரிதாபம் மட்டுமே
பக்கபலமாய்
நம்மை
பாழ் படுத்திவிடும்..!
கோபம் கலந்து
முடிவெடுப்பது..
நம்மை
பாவம் சுமக்க
வைத்து விடும்..!
ஏக்கம் கலந்து
முடிவெடுப்பது....
நம் ஏற்றத்தை கூட
திருப்தியில்லாமல்
ஆக்கிவிடும் ...!
விரக்தியில்
முடிவெடுப்பது
விபரீதம் தரும்..!
சோகத்தில் முடிவெடுபபது..
சோதனையாய் மாறி
சுமை தரும்..!
புரியாமல் முடிவெடுப்பது....
புதிராய் மாறி
எல்லாவற்றையும்
சிக்கல் ஆக்கிவிடும்...!
பாசத்தில் முடிவெடுப்பது...
மறுபரிசீலனை
செய்ய முடியாதது..
சுயததை
அழிக்க தொடங்கி விடும்..!
எப்படி..
எப்போது
ஏன்
எதர்க்காக
என
எதுவுமே
சேராமல்
முடிவெடுக்க முயலுங்கள்..!
முடிவுகள் ...
முழுமை பெறும்....!
முழு வாழ்க்கையிலும்
தெளிவு
தொடரும்...!
No comments:
Post a Comment