Tuesday, October 1, 2013

நிமிடமும்..உன் நினைவுடன்..!

நிமிடமும்..உன் நினைவுடன்..!

சில உறவுகள்..
எப்படி என புரியாமலேயே...
நம்முள் பதிந்து போகும்..!

ஏன் இப்படி
என எண்ணம்
எழும் முன்...
ஏங்க வைக்க தொடங்கி விடும்...!

சரியா..தவறா..
என தீர்மானிப்ப தற்குள்..
அதிலேயே தஞ்சமடைந்து விடும்..!

மாறமுடியாதது..
என உறுதி..
தருவ தற்குள்..
அதிலேயே உறைந்து போகும்...!

தவிர்க்கலாம்
என நினைக்கும்போதே
தவிப்புகள் தொடங்கி விடும்...!

வேண்டாம்
என எண்ணினால்...
நினைவுகள்
அதை சுற்றியே வட்டமிடும்...!

விலகி விட
ஒரு நொடி நினைத்தாலும்..
நெஞ்சம் அணைத்து
செல்ல தீட்டம் தீட்டும்..!..

புரிய வைத்து
பிரிய நினைக்கும் போதே
புரிந்து கொண்டு
புது தொடக்கத்தை
தொடர செய்யும்...!

விழிகளை
தவிர்க்க நினைத்தால்..
பார்க்கும் பார்வைகள் வலிக்கும்...!

பேசுவதை குறைத்தால்....
வாழ்வதே கசக்கும்....!

சின்ன சின்ன
தீண்டல்களை நிராகரித்தால்..
உணர்வுகளின் தூண்டல்
உச்சம் பெரும்...!

வேண்டாம் என
கட்டுபடுத்தினால்..
வேண்டும் வேண்டும்
என கட்டளை பிறப்பிக்கும்..!

இது வேதனையின் சோகம்
என முடிவெடுக்கும் போதே..
சேர்ந்திருந்த
நொடிகளின் சுகம்
வந்து போகும்...!

சரி தவறு என
அலச போவதில்லை...
முடியும் முடியாது என
காத்திருக்க போவதில்லை...
வேண்டும் வேண்டாம்
என தயங்குவதில்லை..

நேற்றும் நாளையும்..
நிஜமில்லை...!

இன்று மட்டுமே போதும்..!

நிதமும் உன் நினைவுடன்...!

No comments:

Post a Comment