Sunday, October 6, 2013

நம்மால் மட்டுமே முடியும்..!

நம்மால் மட்டுமே முடியும்..!




முடியும்...!
முடியாது..?

இந்த
இரண்டு வார்த்தைகளுக்குள்
எல்லாமே அடங்கி விடும்....!

எப்படி முடிவெடுக்கிறோம்..
என்பதுதான்
நம்மை வழி நடத்தும்...!

எதுவுமே
தொடங்குமுன்..
முடியுமா..?..முடியாதா..?..
என அலசலாம்..!
தொடங்கியபின்
தடுமாறினால்
நிம்மதி தடம் மாறிப் போகும்..!

முடியும்..
என தீர்மானிக்கும்போதே..
உங்கள்
முதலடியும்..முடிவும்..
முகம் மலர செய்யும்...!

முடியாது
என எண்ணம்
உங்களுக்குள் எழும்
அந்த நொடியிலிருந்து...
தடுமாற்றங்கள்..
உங்கள் நிம்மதியை ..
உங்கள் சந்தோசங்களை...
தடம் மாற செய்துவிடும்...!

தொடங்கிய
அடுத்த நொடி
உங்களிடம் ...
முடியும்...முடியாது...
என
கேள்விகள் வர தொடங்கினால்
சஞ்சலத்தை மட்டுமல்ல
சங்கடங்களை..
உங்கள்
தொடரும் வாழ்க்கை
முழுவதும்
நிரந்தரமாக்கிவிடும்...!

முடியாது..
என்ற எண்ணம்..
நமது பயத்தின்
பரிதாபம்...!

நம்
இயலாமையின்..இழிவு...!

ஏக்கம் தரும்
துக்கம்..!

தன்னம்பிக்கையின்
தலைகுனிவு.....!

சந்தேகத்தின் சதி...!

சந்தோசத்தின் சாபக்கேடு...!

முன்னேற்றத்தின் முடக்கம்..!

முடியாது என்ற வார்த்தை..
இனி
உங்கள் நினைவுகளில் கூட
நீக்கப்படவேண்டும்...!

முடியும் என்று
மனத்துக்குள்
நினைத்து பாருங்கள்...!

தோற்பது கூட சந்தோசமாகும்..!
கிடைக்காதது கூட திருப்தி தரும்..!
உதாசீனம் கூட உற்சாகம் தரும்...!
ஏக்கம் கூட ஏற்றம் தரும்..!
சோகம் கூட சுகம் தரும்..!

முடியும்
எதுவுமே
நம்மால் மட்டுமே
முடியும்..!

No comments:

Post a Comment