Sunday, February 13, 2011

நேற்றைய..மிச்சங்கள்...!

புதியது...
என எதை எல்லாம் சொல்ல முடியும்...!

விரல் விட்டு எண்ணி வையுங்கள்..!

எண்ணிய விஷயங்களில்
எத்தனை..உங்களுக்கு புதிது...
எத்தனை உலகத்திற்கு புதிது...
வரிசை படுத்தி பாருங்கள்..
உண்மை புரியும்....!

புதியது என்பதெல்லாம்..
 உங்களுக்கு அதிசயம்..
 என தோன்றலாம்...!
மற்றவர்களுக்கு அது ..
சகஜம்தான்....!

உங்கள் மழலையின்..கொஞ்சல் மொழி..
உங்களுக்கு...
ஆயிரம் புதிய அர்த்தம் தரலாம்...!
உங்களை சார்ந்தவர்களும் ..
அதை ரசித்து தான் ஆக வேண்டும் ..
என...
கட்டாயப்படுத்த முடியாது..!

உங்களின் செயலை...
உங்கள்  தாய்...
புதுமையின் உயர்வாய் ஒப்பிடலாம்...!
மற்றவர்களுக்கு  ...
அது சராசரி வாழ்வியலின்
வழக்கமான ஒன்று..!

உங்கள் தோள் படர்ந்து..
நடை பயிலும் ...
உங்கள் துணை உங்களுக்கு  புது இதம் தரலாம்...!
மற்றவர்களின் பார்வையில்...
அது கொச்சை படுத்த படும்...!...!

கஷ்டம்..துக்கம்...சோதனை...
இதெல்லாமே...
நீங்கள் மட்டுமே...
புதிதாய் அனுபவிப்பதாய் சொந்தம் கொண்டாடுவது..
எவ்வளவு தவறு ....
என.. மற்றவர்களின் ...
அன்றாட.... வரலாறு புரட்டி பார்த்தால் புரியும்...!

அதேபோல்..

உங்கள் வெற்றி..சாதனை..தியாகம்....
என எதுவுமே புதியது ...
என நிரூபிக்க முடியாது...!
யாரோ..எங்கோ..எதையாவது..
வெற்றி..சாதனை..தியாகம்... 
என வழக்கப்படுத்தி கொண்டிருப்பார்கள்...!

நிறைவாக..

உங்களின் ...
இன்றைய..புதுமைகள்..
நேற்றைய..மிச்சங்கள்...!

நாளைய...புதுமைகள்...
நம்பிக்கையின் தேடல்கள்...!

No comments:

Post a Comment