Thursday, February 10, 2011

விதியின் தத்துவமும்... ! மதியின் மகத்துவமும் ...!

எல்லாமே விதிப்படித்தான் நடக்கும்....!

விதியை மதியால் வெல்லலாம்...!

இந்த இரண்டுமே சரி.. தவறு..
என விவாதித்து...
நேரத்தை இழப்பதை விட..
இந்த இரண்டுக்குமே  அடிப்படை
எது..?   யார்..?   என்ன...?
என உங்களையே கேட்டு தெளிவு பெற்று பாருங்கள்..
உண்மை புலப்படும்..!

விதியை நம்புகிறவர்கள்....
தடைகளுக்கு அஞ்சி வாழ்வை நகர்த்த கூடாது..!

மதியை நம்புகிறவர்கள்....
தடைகளை உடைத்து வாழ்வுக்கு வழி தேட வேண்டும்..!

தோல்வி என்றால்..விதியை...நொந்து கொள்வதும்..
வெற்றி என்றால்..மதியை..புகழ்ந்து கொள்வதும் கூடாது...!

எல்லாமே விதி வசம் தான் என ஒதுங்கும் போது..
நம்மை அறியாமலே..நாம் புறக்கணிக்க படுகிறோம்....!

எல்லாமே மதியால் தான் என மற்றவர்கள் புரிந்து கொண்டால்..
உங்கள் வளர்ச்சி..புகழ்...எல்லாமே அரவணைக்கபடும்...!

விதியை குருட்டு தனமாக நம்புகிறவனின்....
சொல்.. செயல்..எல்லாமே நிலையாய் இருக்காது...!

மதியை உறுதியாய் நம்பி வெளிப்படுத்துப்பவனுக்கு..
முடக்கம்..தடை என எது வந்தாலும்
அது
அவனை நிலைகுலைய வைக்காது....!

விதி...என்பது.. .
உண்மை.. பொய்.. 
நடக்கும்... நடக்காது..
இருக்கும் ..இருக்காது..
என எதையுமே போட்டு குழம்பி கொள்வதை விட..
விதிபடித்தான் நடக்கிறது என ஓரம் தள்ளி
உங்கள் எண்ணங்கள் படி 
வாழ்ந்து பாருங்கள்..!

விதியே உங்கள் வசம் வந்து
உங்கள் கட்டளைக்கு கட்டுப்பட்டு அடி பணியும்...!

மதியால் தான் எல்லாமே நடந்தது
என ஆணவத்துடன்  அகங்காரத்துடன்..
எதையும் மட்டமாய் கருதுவதே
குறிக்கோள் என கொள்ளாமல்....
புரிந்து..
புரியவைக்க வைத்து தொடரும் ..
உங்கள் வாழ்க்கையில் ...
விதி என்று ...
ஏதாவது குறுக்கிட்டதா..?
என கேட்டுப்பா ருங்கள்..!

விதியின் தத்துவமும்...
மதியின் மகத்துவமும் .
தெளிவாகும்...!


விதியையும்..மதியையும்..
உங்கள் செயல்களுக்கு அடிமையாக்குங்கள்...!

இனி..

விதிக்கும் ..
மதிக்கும்..
உங்களால் தான் ....
வாழ்வு என மாறட்டும்...!

No comments:

Post a Comment