Wednesday, February 2, 2011

மனம் உடந்து போன பின்பு தான்...!

உடைந்து போவது என்ற நிலை 
நம்மை முடித்து விடக்கூடாது...
தொடங்கி வைக்க வேண்டும்...!

எதிர்பார்ப்பு உடைந்து போனால்...
ஏமாற்றம் என்பதை விட...
புதிய மாற்றம் தர வழி
என தொடர வேண்டும்...!

உதவி இன்றி உடைந்து போனால்...
சிதைந்து போகாமல்....
சுயபலத்தை..
உணர்ந்து வெளிப்படுத்த முடியும்...!

ஆதரவு மறுத்து உடைந்து போனால்...
ஆடி போகாமல்...
ஆளுமை திறமையை புரிந்து
எதையும் ஆட்படுத்த முடியும்..!

பண.. பொருள் ஈட்டும் முயற்சி உடைந்து போனால்....
முடிந்து போகாமல்...
முடிவு வரை முயற்சிக்க வேண்டும்...!

காதலில் தோற்று உடைந்து போனால்...
கல்லறை புகாமல்...
காவியம் படைக்கும் கவிஞனாக
புது பிறப்பேடுக்க வேண்டும்...!

கற்றுக்கொள்வதில்..தடை வந்து உடைந்து போனால்...
பின் தங்கிடாமல்...
திறமைகள் தந்து
புது வழி படைக்க வேண்டும்..!

உடைந்து போவது தொடர்ந்தால்..
உறைந்து போகாமல்..
உங்களை உணர கிடைத்த
உன்னத வாய்ப்பு
என உயிர் வாழுங்கள்..!

ஏனென்றால்...

மனிதன்...

மனிதன் என மாறுகிறான்..

மனம் உடந்து போன பின்பு தான்...!

No comments:

Post a Comment